குன்றாத செல்வம் தரும் குபேர பூஜை! - பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/kubera-puja-gives-unfailing-wealth-b-balajiganesh

பொதுவாகவே குபேரருடைய வழிபாடு நமக்கு கோடி செல்வத்தை கொடுக் கும் என்று சொல்வார் கள். வாரம்தோறும் வியாழக்கிழமை களில் நிறையபேர் குபேரருக்கு பிரத் தியேகமாக வீட்டில் வழிபாடு செய்யக் கூடிய வழக்கங்கள் எல்லாம் உள்ளது. உதாரணத்திற்கு குபேர விளக்கு போடுவது, பச்சை திரியை கொண்டு விளக்கு போடுவது, பச்சை குங்கும அர்ச்சனைசெய்வது, இப்படி பலவகையான குபேரரது வழிபாடுகள் நமக்கு தெரிந்திருக்கும். இன்று நாம் பார்க்கக்கூடிய வழிபாடு கொஞ்சம் வித்தியாசமா னது. இந்த வழிபாட்டை செய்வதன் மூலமாகவும் அளவில்லா ஐஸ் வர்யங்களை பெறமுடியும். அது என்ன வழிபாடு. நம்முடைய வீட்டில் முறையாக அதை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.

ff

கோடி செல்வத்

பொதுவாகவே குபேரருடைய வழிபாடு நமக்கு கோடி செல்வத்தை கொடுக் கும் என்று சொல்வார் கள். வாரம்தோறும் வியாழக்கிழமை களில் நிறையபேர் குபேரருக்கு பிரத் தியேகமாக வீட்டில் வழிபாடு செய்யக் கூடிய வழக்கங்கள் எல்லாம் உள்ளது. உதாரணத்திற்கு குபேர விளக்கு போடுவது, பச்சை திரியை கொண்டு விளக்கு போடுவது, பச்சை குங்கும அர்ச்சனைசெய்வது, இப்படி பலவகையான குபேரரது வழிபாடுகள் நமக்கு தெரிந்திருக்கும். இன்று நாம் பார்க்கக்கூடிய வழிபாடு கொஞ்சம் வித்தியாசமா னது. இந்த வழிபாட்டை செய்வதன் மூலமாகவும் அளவில்லா ஐஸ் வர்யங்களை பெறமுடியும். அது என்ன வழிபாடு. நம்முடைய வீட்டில் முறையாக அதை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.

ff

கோடி செல்வத்தைப் பெற குபேரர் பூஜை செய்வது எப்படி?

வாரத்தில் ஒருநாள் தான் குபேரர் பூஜையை செய்யமுடியும் என்று நினைப்பவர்கள், வியாழக்கிழமை இந்த பூஜையை வீட்டில் செய்யலாம். தினமும் எங்களால் இந்த பூஜையை வீட்டில் செய்யமுடியும் என்பவர் கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். குபேரர் என்று சொன்னாலே பச்சை நிறம் சிறப்பு வாய்ந்தது. ஆகவே தினமும் குபேரருக்கு பிடித்த இந்த பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய, அந்த ஈசனுக்கு சொந்தமான வில்வ இலையை வைத்துதான் இன்றைய வழிபாட்டை நாம் பார்க்கப் போகின்றோம்.

பூஜையறையை சுத்தம்செய்து, குபேரருக்கு சிலை அல்லது படம் வைத்திருந்தால் அதற்கு வாசனை நிறைந்த பூக்களை போடவேண்டும். குபேரருக்கு முன்னால் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சிறிய தட்டில் வில்வ இலைகளை கொட்டிக்கொள்ளுங்கள். பூஜையறையில் குபேரரை பார்த்தவாறு அமர்ந்துகொண்டு, குபேரருக்கு உகந்த ஏதாவது மந்திரங்களை சொல்லி இந்த இலைகளை எடுத்து குபேரருக்கு அர்ச்சனை செய்யலாம்.

மந்திரங்கள் எதுவும் தெரியாது என்பவர் கள் "ஓம் குபேராய போற்றி' என்ற மந்திரத்தை சொல்லி அந்த வில்வ இலைகளால் குபேரருக்கு அர்ச்சனைசெய்து உங்களுடைய பண கஷ்டம் தீரவேண்டும் என்று மனதார பிரார்த் தனை செய்துகொள்ளுங்கள். தினமும் புதிய தாகதான் வில்வ இலைகளை வாங்கிவந்து குபேரருக்கு அர்ச்சனை செய்யவேண்டும். பழைய பூஜை செய்த இலை காய்ந்த பிறகு அதை எடுத்துச் செடி கொடிகள் இருக்கும் இடத்தில் கால்படாமல் போட்டு விடவும்.

நம்முடைய ஊர்களில் வில்வ இலைகள் எளிதாக சிவன் கோவில் வாசலில் கிடைக்கும்.

ஆனால் சில பேருக்கு இந்த வில்வ இலை கள் கிடைப்பதில் சில சிரமங்கள் இருக்கும்.

அப்படியிருந்தால் ஒரு பாக்கெட் வில்வ இலையை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள் ளுங்கள். ஒரு நாளைக்கு வெறும் ஒரு இலையை குபேரருக்கு சமர்ப்பணம் செய்து விட்டு, வெறும் மந்திரத்தை சொல்லிக் கூட இந்த வழிபாட்டை நீங்கள் மேற் கொள்ளலாம்; தவறு கிடையாது.

ஒரு வில்வ இலையாக இருந்தாலும் அதற்கு கிடைக்கக்கூடிய பலன் நிறைவாகத்தான் இருக்கும்.

தினமும் குபேரரையும், ஐஸ்வர்ய ஈஸ்வரரையும் நினைத்து, வில்வ இலைகளால் இந்த அர்ச்சனையை செய்யும் வீட்டில் நிச்சயமாக வறுமை என்பதே இருக்காது. நீங்கள் கேட்கும் வரம், கேட்காத வரம் என்று செல்வ செழிப்பை அள்ளிக் கொடுக்கக்கூடிய எளிமையான வழிபாடுகளில் இதுவும் ஒன்று. இந்த பூஜையை செய்ய மிஞ்சிப் போனால் 15 நிமிடங்கள்கூட எடுக்காது. முந்தைய நாலே பூஜைக்கு தேவையான விஷயங்களை தயார் செய்து வைத்துவிடுங்கள். வெறும் 27 முறை மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்தாலும் போதும். தொடர்ந்து இந்த பூஜையை 48 நாட்கள் செய்துவிட்டு, பிறகு எப்போதெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் வீட்டில் செய்யலாம். தவறு ஒன்றும் கிடையாது. இந்த எளிமையான ஆன்மிகம் சொல்லக்கூடிய பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

செல்: 9842550844

bala241123
இதையும் படியுங்கள்
Subscribe