குருநில மன்னனும்! நம்பூதிரி ஜோதிடரும்! அம்சி கோ. விவேகானந்தன்

/idhalgal/balajothidam/king-guru-nila-namboothiri-astrologer-too-amsi-co-vivekanandan

கேரளதேசக் குறுநில மன்னன் தனது பட்டத்து ராணியோடு மாளிகை மேல அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். பழமையான நினைவு களை குலவி பேசிக்கொண்டிருந்தாலும் அவர் பார்வை என்னவோ மேல் இருந்து வீதிகளில் செல்வோரைக் கவனித்துக் கொண்டிருந்தது. அப்போது அவர் பார்வையை கவர்ந்தது சற்று தொலைவில் சென்ற ஒரு நபரின் காட்சி. ஒருவர் செல்கின்றார். அவரைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நபர்கள் தொடர்ந்து செல்கின்றார்கள். அவர்களின் தோற்றத் தால் அவர்கள் நம்பூதிரி பிராமணர் எனவும் அவர் தனது சீடர்களோடு செல்கின்றார் எனவும் உணரமுடிந்தது, மன்னனுக்கு நம்பூதிரி என்றால் புதிதா என்ன? இல்லையென்றாலும் தொலைவிலிருந்து அவர் கண்ட அந்த நபர்கள் அவர்கள் செல்லும் தோற்றம் என்னவோ புதுமையாக இருந்தது. யார் அங்கே செல்லும் அவர்களை விசாரித்து யாம் அழைப்பதாக இங்கே அழைத்து வாருங்கள். மன்னன் கட்டளையிட்டான். விரைந்து சென்றார் அரண்மனை பணியாளர்.

ஒருவர் நம்பூதிரி அருகே சென்றார். அரண் மனை பணியாளனுக்கு தெரிந்துவிட்டது. இவர் மிகப் பிரபலமான புலி முகத்து போற்றி என்னும் நம்பூதிரி அல்லவா. இவர் சிறந்த ஜோதிடர் அல்லவா. சிரம் தாழ்த்தி வணங்கி மன்னன் தங்களை அழைத்துவரக் கூறி இருக்கின் றார் சுவாமி என மன்னனின் கட்டளையை கூறினார். இதோ வருகிறோம் என தனது சீடர் பட்டாளத்தோடு அரண்மனைக்கு சென்றார் நம்பூதிரி. அவர் பிரபலமானவராக இருந்தாலும் அவர் பெருமையை அந்தக் குறுநில மன்னன் அறிந்திருக்கவில்லை. காரணம் அவர் சற்று கடவுள் மறுப்பாளர். அவர் களை அமரச் செய்து அவர் யாரென வினவி அறிந்தபின் அவர்கள் ஜோதிடர் என அறிந்த கொண்ட மன்னனின் குறு மதி வேலை செய்யத் துவங்கியது. அல்ல அல்ல மன்னனின் தலைவிதி வேலை செய்யத் துவங்கியது.

மன்னன் சொன்னான் நம்பூதிரியே இதுவரை நான் ஜாதகம் பார்த்ததில்லை ,பிரசன்னம் பார்த்ததில்லை, எனக்கு ஒரு ஆசை. பிரசன்ன ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று எனக்கு என்று எண்ணி விடாதீர்கள். நானாவது பிரசன்ன ஜோதிடம் பார்ப்பதாவது, இதோ அரண்மனை தோட்டத்தில் இருக்கின்றதே வாழைமரம் அந்த மரத்திற்குதான் பிரசன்னம் பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டு

கேரளதேசக் குறுநில மன்னன் தனது பட்டத்து ராணியோடு மாளிகை மேல அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். பழமையான நினைவு களை குலவி பேசிக்கொண்டிருந்தாலும் அவர் பார்வை என்னவோ மேல் இருந்து வீதிகளில் செல்வோரைக் கவனித்துக் கொண்டிருந்தது. அப்போது அவர் பார்வையை கவர்ந்தது சற்று தொலைவில் சென்ற ஒரு நபரின் காட்சி. ஒருவர் செல்கின்றார். அவரைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நபர்கள் தொடர்ந்து செல்கின்றார்கள். அவர்களின் தோற்றத் தால் அவர்கள் நம்பூதிரி பிராமணர் எனவும் அவர் தனது சீடர்களோடு செல்கின்றார் எனவும் உணரமுடிந்தது, மன்னனுக்கு நம்பூதிரி என்றால் புதிதா என்ன? இல்லையென்றாலும் தொலைவிலிருந்து அவர் கண்ட அந்த நபர்கள் அவர்கள் செல்லும் தோற்றம் என்னவோ புதுமையாக இருந்தது. யார் அங்கே செல்லும் அவர்களை விசாரித்து யாம் அழைப்பதாக இங்கே அழைத்து வாருங்கள். மன்னன் கட்டளையிட்டான். விரைந்து சென்றார் அரண்மனை பணியாளர்.

ஒருவர் நம்பூதிரி அருகே சென்றார். அரண் மனை பணியாளனுக்கு தெரிந்துவிட்டது. இவர் மிகப் பிரபலமான புலி முகத்து போற்றி என்னும் நம்பூதிரி அல்லவா. இவர் சிறந்த ஜோதிடர் அல்லவா. சிரம் தாழ்த்தி வணங்கி மன்னன் தங்களை அழைத்துவரக் கூறி இருக்கின் றார் சுவாமி என மன்னனின் கட்டளையை கூறினார். இதோ வருகிறோம் என தனது சீடர் பட்டாளத்தோடு அரண்மனைக்கு சென்றார் நம்பூதிரி. அவர் பிரபலமானவராக இருந்தாலும் அவர் பெருமையை அந்தக் குறுநில மன்னன் அறிந்திருக்கவில்லை. காரணம் அவர் சற்று கடவுள் மறுப்பாளர். அவர் களை அமரச் செய்து அவர் யாரென வினவி அறிந்தபின் அவர்கள் ஜோதிடர் என அறிந்த கொண்ட மன்னனின் குறு மதி வேலை செய்யத் துவங்கியது. அல்ல அல்ல மன்னனின் தலைவிதி வேலை செய்யத் துவங்கியது.

மன்னன் சொன்னான் நம்பூதிரியே இதுவரை நான் ஜாதகம் பார்த்ததில்லை ,பிரசன்னம் பார்த்ததில்லை, எனக்கு ஒரு ஆசை. பிரசன்ன ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று எனக்கு என்று எண்ணி விடாதீர்கள். நானாவது பிரசன்ன ஜோதிடம் பார்ப்பதாவது, இதோ அரண்மனை தோட்டத்தில் இருக்கின்றதே வாழைமரம் அந்த மரத்திற்குதான் பிரசன்னம் பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டு மார்பில் அணிந்த மணிகள் குலுங்க சிரித்தான்.

சிரிப்பொலி அரண்மனை சுவர்களில் எதிரொலியாக ஒலிக்க, அங்கே அமைந்திருந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்த தூண்கள் அச்சத்தால் நடுங்கின. காரணம் ஒருவர் பிரசன்னம் பார்க்கின்ற வேளையில் உலர்ந்த மரத்தை தொட்டுக்கொண்டு அல்லது உயிரற்ற பொருட்களைத் தொட்டுகொண்டுப் பிரசன் னம் கேட்டார் என்றால் ஒருவரின் ஆயுள் முடிவை தெரிவிக்கின்ற சகுனம் என்று நிமித்த சாஸ்திரம் சொல்கின்றது. இந்த தூண்கள் எப்படியோ இந்த செய்தியை தெரிந்திருந்தன. மேலும் அந்தக் குறுநில மன்னன் ஜோதிட ரோடு பேசிக்கொண்டிருக்கும்போது அந்த தூண்களை தொட்டுக்கொண்டுதான் பேசிக் கொண்டிருந்தார். தூண்கள் என்பது உலர்ந்த மர மல்லவா. எனவேதான் மன்னனின் சிரிப்பொலியில் தூண்கள் அதிர்ந்து அச்சமுற்றன.

அதுபோன்று நம்பூதிரி ஜோதிடரும் மன்னன் வாழை மரத்திற்கு பிரசன்னம் பார்க்க வேண்டும் என்று கூறியதும் அவர் ஒன்றும் அதிர்ச்சி அடையவில்லை. காரணம் அவர் அன்று அதிகாலை 4 மணிக்கு துயில் எழுந்த போது திங்கள்கிழமை அன்றைய தினம் அவருக்கு மூச்சோட்டம் வலது நாசியில் ஓடிக் கொண்டிருந்தது. அப்படி என்ன அவர் அறிந்தி ருந்தது ,பிரசன்ன மார்க்க நூல் கூறுகின்றது.

ஒருவர் தினமும் அதிகாலை மூக்கில் ஓடுகின்ற சுவாசம் வலது புறம் செல்கின்றதா; இறப்பு இடப்புறம் செல்கின்றதா- அதன் அளவு எப்படி என்று சுவாச பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அப்போது மூச்சோட்ட மானது பாவ கிரகங்களின் வாரமாகிய ஞாயிறு, செவ்வாய், சனி, தேய்பிறை வியாழன் இந்த நாட்களில் வலது மூக்கிலும், வளர்பிறை வியாழன், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இடப்புறம் ஆகவும் மூச்சோட்டம் அமைய வேண்டும்.

dd

அவ்வாறு அமைந்தால் அன்றைய தினம் அவர்களுக்கு சிறப்பான நாளாக அமைவ தோடு, விருந்துணவு எண்ணிய காரியம் ஈடேறு தல் போன்ற சுப நிகழ்வுகள் ஏற்படும் எனவும், கூறியவற்றிற்கு மாறாக மூச்சோட்டம் அமைந்தது என்றால் அன்று அவருக்கு சிறப் பற்ற நாளாகவும், எண்ணியவை ஈடேறாது பலவித மன வலிகள் ஏற்படும் நாளாகவும் அமையும். அதோடு உணவு, பயணம் இவை சரியாக அமையாது என உணரவேண்டும்.

அதுவும் திங்கட்கிழமை இடப்புறம் மூச்சோட்டம் அமையவேண்டும் அல்லவா.

அதிகாலையில் அதற்கு மாறாக அதிகாலையில் நான்கு மணிக்கு வலப்புறமாக அமைந்தது என்றால் அன்றைய தினம் கலகம் ஏற்படும் என்றும், செவ்வாயன்று மூச்சோட்டமானது வலப்புறம் ஓடாமல் இடப்புறம் அமைந்தது என்றால் மரணத்திற்கு சமமான துன்பங்கள் ஏற்படும் எனவும், புதன்கிழமை இடது பக்கம் மூச்சோட்டம் அமையாது வலப்புறம் அமைந்தது என்றால் அயலூர் வாசமும், வியாழக் கிழமை என்றால் ஆபத்து, வெள்ளிக்கிழமையில் இடப்புறம் ஓடாது வலப்புறம் ஓடினால் அவரைச் சார்ந்தவர்களுக்கு ஆபத்தும், சனிக்கிழமை வலப்புறம் ஓடாது இடப்புறம் மூச்சோட்டம் அமைந்தது என்றால் விவசாயத் தில் அன்றையதினம் நஷ்டம் ஏற்படும் என்றும் பிரசன்னமார்க்க நூல் கூறுகின்றது.

நம்பூதிரி அன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணிக்குத் துயில் எழுந்து மூச்சோட்டம் பரிசோதனை செய்த போது சுவாச சஞ்சாரமானது வலப் புறமாக ஓடிக்கொண்டிருந்தது. எனவே அவர் உணர்ந்து கொண்டார்.

இன்றைய தினம் எவரோ ஒருவர் நம்மிடம் கலகம் செய்ய உள்ளார் என்பதனை உணர்ந்திருந்தார். எனவேதான் மன்னன் வாழை மரத்திற்கு பிரசன்னம் பார்க்கவேண்டும் என்று கூறியதும் அவர் அதிர்ச்சி அடையவில்லை. அவ்வாறு மன்னனின் கட்டளைக்கு ஏற்ப வாழை மரத்திற்கு பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச் சியை ஆரம்பித்தார் நம்பூதிரி ஜோதிடர் சீடர்கள்.

அரிசி மாவால் கோலம் போன்று ராசிக் கட்டத்தை வரைந்து அதில் அட்சதையை தூவி ராசிக் கட்டத்தில் மத்தியில் தென்முக கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை ஆவாகனஞ் செய்து அதோடு அவரைச் சுற்றி நவகோள் களும் இருப்பதாக சங்கல்பம் செய்து பூஜையை ஆரம்பித்தார்.

அப்போது அஷ்ட மங்கள பிரசனத்தின் நிகழ்வாக ஒரு குழந்தையின் கையில் தங்க நாணயம் கொடுத்து 12 ராசியில் ஒரு ராசியில் வைக்குமாறு கூறப்பட்டது. குழந்தையும் ராசிக் கட்டத்தை சுற்றிவந்து பன்னிரு ராசிகளில் ஒன்றில் அந்த தங்க நாணயத்தை வைத்தார்.

பின்பாக நவ கோள்கள் இருக்கின்ற பாகை கலைகளை ஆய்வுசெய்ய ஜோதிட கணிதங் களை போட்டு பிரசன்னம் சொல்ல ஆரம்பித் தார். இந்த கணிதம் எல்லாம் பலன்கள் எல்லாம் வாழை மரத்திற்குதான். நம்பூதிரி பலன் சொல்ல ஆரம்பித்தார். நம்பூதிரியோடு வந்திருந்த சீடர் கூட்டம் ஆச்சரியத்தாலும் அதிர்ச்சியாலும் இந்த நிகழ்வுகளை பார்த்துக்கொண்டே இருந்தனர்.

அதுபோன்று பட்டத்து ராணி அச்சத்தில் நடுநடுங்கிப் போய் நின்றார். காரணம் மன்னன் எந்த நிலையிலும் எவரையும் இகழ்வது இல்லை. ஆனால் அவரிடம் காணாத ஒரு நிகழ்வாக இன்றையதினம் ஒரு ஜோதிடரை இகழ்வதற்கு அவர் முயற்சி செய்கின்றார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக அவருக்கு புரிந்தது.

ஜோதிடரை, ஜோதிடத்தை இகழ்வது மிகப் பெரியப் பாவச் செயல் எனக் கேட்டிருந்தாலும், அதைவிடவும் எவரையும் இகழாத மன்னன் இன்று ஒரு ஜோதிடரை இகழ நினைக் கின்றார் என்றால் அவருடைய இயல்பான குணத்திலிருந்து இன்றையதினம் மாறுபட்டு அவர் குணம் விளங்குகின்றது. எனவே இதுவும் ஒரு தவறான சகுனமாக தெரிகின்றதே என்று மகாராணியும் அச்சமுற்றாள்.

காரணம் தமிழ் ஜோதிட நூலாகிய குமார சாமிய நூலில் ஒருவரின் இயல்பான குணம் மாறுபட்டால், அதாவது சுய குணம் திடீரென மாறினால் ஒரு வருடத்தில் அது தவறினால் இரண்டாவது வருடத்தில் நிச்சயமாக மரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒருமுறை இவர் பாகவத உபன்யாசம் நடந்தபோது தமிழ் அறிந்திருந்த அந்த உபன்யாசகர் உபன்யாசத் திற்கிடையே கூறுவதை இவர் கேட்டிருந்தார்.

மன்னனுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ, இவர் என்றும் இல்லாது எவரையும் இகழாத இவர் இன்று தன்னுடைய சுய குணம் மாறி இவர்களை இகழ்கின்றாரே என்று அச்ச முத்து நடுங்கினாள் பட்டத்து இளவரசி.

அப்போது ஜோதிட கணிதங்களை முடித்து பலன்களை சொல்லத் துவங்கினார். ஜோதி டர் வாழை மரத்திற்கு அல்லவா பிரச்சனம் பார்க்கப் படுகின்றது. எனவே ஜோதிடர் சொன்னார் இன்றிலிருந்து இத்தனை ஆவது நாள் இந்த வாழைமரம் வடதிசையில் வாழை தார்விடும் (குலைத்தள்ளும்) அந்த வாழை மரத்தில் 155 காய்கள் இருக்கும், என்றாலும் அந்த வாழைத்தாரில் அனைத்து காய்களையும் வௌவால்கள் தின்றுவிட ஒரு வாழைக்காய் மட்டும் அந்த தாரில் மிஞ்சும். ஆனால் அந்த வாழைக்காய் பழுத்து பழமாகி அதனை சாப்பிடும் பாக்கியம் மன்னனுக்கு இல்லை என்பதுவே பிரச்சன ஜோதிடத்தின் சாரம் என்று நம்பூதிரி ஜோதிடர் கூறினார்.

நம்பூதிரியின் சீடர்கள் திகைத்து நின்றார் கள். நம்பூதிரி இதன்மூலமாக என்ன சொல்ல வருகின்றார் என்பது புரியாதா புதிராக இருந்ததுபட்டத்து ராணியோ இதயம் பட படக்க அப்பா பிரசன்னம் பார்த்து முடிந்து விட்டதே மன்னன் மேலும் ஜோதிடரை இகழாமல் இருந்தாரே என மன ஆறுதல் அடைந்தாலும் அவருக்கு ஜோதிடர் ஏதோ ஒன்றை கூறிக்கொண்டு செல்கின்றார் அதனை நம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை என்று அவர் உணர முடிந்தது.

மாதங்கள் ஒன்று சென்றது இரண்டு, மூன்று, பத்து மாதம் கழித்து வாழையின் குலை வடதிசை நோக்கி சாய்ந்தது. மன்னனின் வேண்டு கோளுக்கு இணங்க வாழைத்தாரில் இருந்த காய்களின் எண்ணிக்கையை அரண் மனை ஏவலர் எண்ணி பார்த்தார். நம்பூதிரி ஜோதிடர் சொன்னதுபோன்று சரியாகவே இருந்தது. என்ன ஆச்சரியம். இப்போது மன்னனுக்கு மனதில் நடுக்கம். நாம் விளையாட்டாக வாழைமரத்திற்கு பிரச்சனம் பார்க்கச் சொன்னோம் ஜோதிடரே வாழை மரம் வடபுறமாக தார்விடும் எனவும் வாழையில் 155 காய்கள் இருக்கும் எனவும் கூறியது மிகச் சரியாக இருக்கின்றது. இது எப்படி சாத்தியம்? ஜோதிடம் என்ன அவ்வளவு துல்லியமான ஒரு கணிதமா? ஜோதிடம் அப்படி ஒரு ஆச்சரியமான கலையா? நாம் அதனை இகழ நினைத்தோமே என்று மன்னன் தூக்கமின்றி தவித்தான். சில வாரங்கள் சென்றது. அந்த வாழை மரத்தில் இருந்த குலையின் காய்கள் அனைத்தையும் வௌ வால்கள் தின்றுவிட ஒரு காய்மட்டும் மிஞ்சி தனிப் பழமாக காட்சிதந்து கொண்டிருக்கிறது.

அரண்மனை எங்கும் மயான அமைதி. அரியாசனம் சோகத்துடன் மன்னன் வந்து அமரவில்லை என்பதன் காரணம் அறியாது தவித்தது. எப்போதும் மந்திரி குழாமோடு கூடும் சபை கூடவில்லை. பட்டத்து ராணி குங்குமம் கலைத்து அணிமணி அணியாது பதுமைபோல கட்டிலே கதி என படுக்கையில், ஆம் அந்த சோகம் நிகழ்ந்தது. நம்பூதிரி வாக்கு பலித்தது. வாழைமரத்தில் மிஞ்சும் ஒரு வாழைபழத்தை சாப்பிடும் பாக்கியம் மன்னனுக்கு இல்லை என்பதுதான் அவர் கூறிய அந்த வார்த்தை. ஆம்; வாழை மரத்தில் மிஞ்சிய வாழை பழம் சோகத்தோடு மன்னன் வரமாட்டானா என காத்திருக்க, மன்னர் அந்நேரம் சிவலோக பதவி அடைந்திருந்தார்.

செல்: 94438 08596

bala131023
இதையும் படியுங்கள்
Subscribe