4. ரோகிணி

இது ரிஷப ராசியில் உள்ளது. இதன் சாரநாதர் சந்திரன். ரோகிணி நட்சத்தித்தில் கேது நின்றால், அங்கு சந்திரன்+கேது என்றா கும்.

பொதுவாக, புராண நூல்களில் மிக கஷ்டத்தைப் பற்றிக் கூறும்போது, "ரோகிணி யைப் பிடித்த தீயகிரகம்போல் அவதிப் பட்டான்' என உவமானம் கூறுவர். எனவே ரோகிணி நட்சத்திரம் சுபமாகக் இருப்பதே ஜாதகருக்கு நன்மை தரும்.

இஷ்ட தெய்வம்: சரஸ்வதி, சாரதாம் பிகை, மூகாம்பிகை ஆகிய தெய்வங்களை விருப்பமுடன் வணங்குவர்.

Advertisment

குணம்: இவர்கள் ஆண்களாக இருந்தால் குடும்பப் பெண்களை சந்தேகப்படுவர். பெண் களாக இருந்தால் கணவரை பரீட்சித்துப் பார்ப்பர். இரு பாலினரும் காசு விஷயத்தில் யாரையும் நம்பமாட்டார்கள். மேலும் பண விஷயத்தில் மிகக் கருமியாக இருப்பர்.

அதிர்ஷ்டம்+தொழில்: சாரநாதர் சுபமாக இருந்தால் இவர்கள் வீட்டில் மனைவியும், தாயாரும் சேர்ந்தே இருக்க மாட்டார்கள். இது சண்டை சச்சராவால் இராது. இயல்பாகவே இவர்கள் ஓரிடமும், இவர்கள் தாயார் வேறிடத்திலும் வசிப்பர்.

அதனால் சண்டையின்றி நிம்மதியாக உணர்வார்கள். உணவை வீணடிக்க மாட்டார் கள். ஏனெனில், இந்த அமைப்புடை யோர் விவசாயத்தின்மீது அதிக பற்றுடைய வர்கள். அதுவும் பயிர்களின் விதைகளை பத்திரப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள். எனவே பயிர்த்தொழில், விதைப் பண்ணை, பழ வியாபாரம், கரும்பைப் பிழிந்து சாறெடுத்து விற்பனை, பழரசக் கடை, தானியங்களை மாவாக்கும் கடை, ஐஸ்க்ரீம் பார்லர், காய், கனிகள் பதனப் படுத்தும் கிடங்கு, ஐஸ்கட்டி தயாரிப்பு, மீன் மற்றும் கடல், நீர் சார்ந்த தொழில், இனிப்பான பழங்களைக் குறுக்கி விற்கும் கம்பெனி என இவ்வமைப்பு சார்ந்தோரின் தொழில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதாவது நேரிடையாகத் தண்ணீரை விற்காமல், அதனை ஐஸ்கட்டியாக்கி விற்பர்.

Advertisment

கெடுதல்: கேது எனும் கிரகம் குழப்பமா னது. சாரம் வாங்கிய சந்திரன் மனோகாரகன். இந்த இருவரும் இணையும் அமைப்பானது ஜாதகரை பைத்தியமாக்கிவிடும். ஒரு பயந்த பீதிகலந்த நிலையில் அலைவார்கள். எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க மாட்டார்கள்; எடுக்க இயலாது. இவர்கள் வித்தியாசமாக எந்த செயலைச் செய்ய முன்னெடுத்தாலும், சுற்றியுள்ளவர்கள், "லூசுப்பயல் என்ன செய்கிறான் பாரு' என நக்கலடிப்பர். இதனாலும் இவர்கள் வாழ்வில் தேங்கிநிற்க வேண்டியிருக்கும். கேது நின்ற சாரநாதர் சந்திரன் நீசமானால், மேற்கண்ட கெடுபலன் நடக்கும்.

நாடி ஜோதிடம்: கேது தடுமாற்றத்தைக் கொடுப்பார். சந்திரன் தாயைக் குறிப்பார். சுக்கிரன் மனைவியைக் குறிப்பார். எனவே மனைவியும் தாயாரும் நல்லபடியாக நடந்து கொண்டாலும், பிரச்சினை வந்துவிடுமோ என மனத்தடுமாற்றத்தை இந்த அமைப்பு ஜாதகருக்குக் கொடுக்கும்.

ss

பரிகாரம்: கருமாரியம்மன் போன்ற அம்மனை வணங்கவும். திங்கட்கிழமை அம்மனுக்கு நிறைய சர்க்கரை, ஏலக்காய், முடிந்தால் முந்திரி, பாதாம் போட்ட பாலைக் காய்ச்சி பூஜை செய்யவும். இந்த ஜாத கருக்கு, வாழ்வின் முக்கிய விஷயங்கள் நடக்கவேண்டும் என்றால் இம்மாதிரி காய்ச்சிய பாலை அம்மனுக்குப் படைத்து கோவிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்வ தாக வேண்டிக்கொள்ளவும். திருப்பரங் குன்றம் மச்சமுனியை வணங்கவும்.

5. மிருகசீரிடம்

இந்த நட்சத்திரம் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பரவியுள்ளது. இதன் சார அதிபர் செவ்வாய். மிருகசீரிடத்தில் கேது நிலைகொண்டிருந்தால், அங்கு கேது+ செவ்வாய் எனும் அமைப்பு வரும்.

இஷ்ட தெய்வம்: இவர்களுக்கு வேலோடு நிற்கும் முருகர் என்றால் வெகு பிரியம். சிலர் வள்ளி, தெய்வானையோடுள்ள சுப்பிரமணியரையும் வணங்குவர்.

குணம்: இவர்களுக்கு எப்போதும் தங்கள் சகோதரன்மீது ஒரு நம்பிக்கையின்மை இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் நிலத்தை, பக்கத்து வயல் அல்லது வீட்டுக் காரர் அவர் பக்கம் கொஞ்சம் ஒதுக்கிக் கொள்வாரோ என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். பத்திர டாகுமென்டில் ஏதேனும் கோல்மால் செய்துவிடுவார்களோ எனும் திகில் மனதை அலைக்கழிக்கும். இத்தனை யோசனைகளும் சேர்ந்து, இந்த ஜாதகர்கள் ஒரு மாதிரி விழித்துக்கொண்டே இருப்பர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: பிரிவுக்குக் காரகமாகிய கேது, நிலத்துக்குக் காரகமாகிய செவ்வாயின் காலில் செல்லும்போது, இவர்கள் நிலப்பிரிப்பு வகையான ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல புகழ்பெறுவர். அதற்குண்டான பத்திரப் பதிவில் திறமை சாலியாகத் திகழ்வர். நெருப்பு சார்ந்த சமையல் தொழில் நன்கு ஆகிவரும். ஆயத்த ஆடைகள் எனும் தையல் தொழிலில் சிறப்படைவர். மருத்துவ உபகரணங்கள் வேலை, தொழில் மேன்மையாக அமையும். செய்திப்பிரிவு வேலை சரிப்படும்.

இவர்கள் நெசவுத் தொழிலை வேறுவித மாகச் செய்வர். ஒரு பெரிய தாஜ்மஹால் படத்தை, சேலை முந்தானையில் அழகாக நெய்து அசத்துவர். அதுபோல பெரிய கட்ட டங்களை, மினியேச்சர் என்ற முறையில் குறுக் கிச் செய்து அசத்தும் திறமை கொண்டவர்கள். இதற்கு சாரநாதர் சுபமாக இருக்கவேண்டும்.

கெடுதல்: கோபக்கார செவ்வாயின் காலில் கேதுபகவான் செல்வதால், யோசிக்காமல், பொறுமையில்லாமல் கண்டதையும் உளறுவர். சிறு விஷயத்துக்கும் பெரியதாக உணர்ச்சிவசப்படுவர். இவர்கள் கத்தும் தினுசைப் பார்த்து, "மிக மோசமான விஷயம் போலும்' என சுற்றியுள்ளவர்கள் அரண்டுபோய் நிற்பர். கடைசியில் அது பைசா பெறாத விஷயம் என்றறிந்து, "போடா விளக்கெண்ணெய்' என்று திட்டிவிட்டு அகன்றுவிடுவர்.

நாளடைவில், இவருடைய ஒரு பதட்டத்துக்கும் மரியாதையின்றிப் போய்விடும். இந்நிலைக்கு சாரநாதர் செவ்வாய் நீசமாகி இருக்கவேண்டும்.

நாடிஜோதிடம்: இவ்வமைப்பு தம்பதிகளுக்குள் தவறான புரிதலை உண்டாக்கிவிடும். சில தம்பதிகள், "இதெல்லாம் ஒரு வாழ்க்கையா' என விவாகரத்து செய்துவிடும் வாய்ப்பும் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடமும் ஒரு இணக்கம் இராது. கேது குழப்பத்தையும், பிரிவையும் தரும் கிரகம். செவ்வாய் மாங்கல்ய காரகன். எனவே பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரம்: முருகரை வணங்குங்கள். அதுவும் குகை போன்ற இடத்தில் நிலைகொண்ட கந்தனை வழிபடுங்கள். முக்கிய விஷயம் நடக்கவேண்டுமெனில், முருகருக்கு வேல் வாங்கி சார்த்துவதாகவோ அல்லது சிறு வேலை உண்டியலில் போடுவதாகவோ வேண்டிக்கொள்ளவும். சீர்காழி சட்டநாதர் அல்லது பாம்பாட்டிச் சித்தரை வணங்கவும்.

6. திருவாதிரை

இந்த நட்சத்திரம், மிதுன ராசியில் அமைந்துள்ளது. இதன் சாரநாதர் ராகு. திருவாதிரை நட்சத்திரத்தில் கேது பகவான் நின்றால், அங்கு கேது+ராகு எனும் அமைப்பு ஏற்படும். இது இரு பாம்பு கிரக சம்பந்தம் எனலாம்.

இஷ்ட தெய்வம்: இவர்களுக்கு சற்று கரடுமுரடான தெய்வங்களை வணங்குவது மிகப்பிடிக்கும். தன் குலதெய்வங்களை நன்கு வணங்குவர். உயர்குலத்தைச் சேர்ந்தவராக இருப்பின் இவர்களுக்கு நரசிம்மர் போன்று உக்ர தெய்வங்களைப் பின்பற்றுவர்.

குணம்: இவர்களுக்கு சந்தேகப்பட காரண காரியம் தேவையில்லை. கோடு போட்ட நோட்டு வாங்கினால், எல்லா பக்கத்திலும் கோடு கணக்கு சரியாக இருக்கிறதா என உற்றுப் பார்ப்பார்கள். இவர்களைப் பார்த்தாலே எல்லாரும் அலறியடித்து ஓடிவிடுவர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: மிதுன ராசி எனும் புதன் வீட்டில் இரு பாம்பு கிரக சம்பந்தம். புதன் என்பவர் புத்திக்குரிய கிரகம். எனவே இவ்வமைப்பு ஜாதகர்களுக்கு மூளை மிக வேகமாக, எதிர்மறையாக வேலை செய்யும். இப்படி தோண்டித் துருவி யோசிப்பவர்களுக்கென்றே நிறைய வேலை உள்ளது. அணு ஆராய்ச்சித்துறை, பௌதிக ஆராய்ச்சி, அணுக்கூறுகள் ஆராய்ச்சி, பத்திரிகைத்துறை- அதில் யார் யார் என்னென்ன ஊழல் செய்தனர் என்றும், பெரிய மனிதர்கள் எத்தனை சின்ன வீடு வைத்திருக்கின்றனர் என்றும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் எழுதுவர்.

இதேபோல் யாரேனும் தவறு செய்தால், அவர்களைப் பற்றி காவல்துறை, நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்வதில் முதல் ஆளாக இருப்பர். இவ்வமைப்புள்ளோர், பாம்புகளைக் கையாள்வதில், பாம்பு பிடிப்பதில், பாம்பு விஷம் சேகரிப்பதில் தனித்தன்மையுடன் விளங்குவர்.

இதனால் இதுவே தொழிலாகவும் மாறிவிடும். இவ்வமைப்பு இருப்பது புதன் வீட்டில். ஆதலால், எழுத்துத்துறையில் மிகப் புதுமை படைப்பர். இதற்கு ராகு சுப சம்பந்தம் பெறவேண்டும்.

கெடுதல்: ஒரு புத்திசாலி வீட்டில் இரு பாம்பு கிரக சம்பந்தம். என்ன சொல்ல? கள்ள நோட்டு அடிக்கணுமா? ஜு ஜுபி மேட்டர். வம்பு கிசுகிசு எழுதணுமா? நான்தான் ஃபர்ஸ்ட். கீழ்த்தரமான சினிமா, போட்டோ எடுப்பதில் கில்லாடி. தனது வாதத்திறமையால் எந்த அயோக்கியனையும் வெளியே கொண்டுவருவதில் மகா திறமை.

அதேபோல் பிறர்மீது பொய் வழக்கு போடுவதில் நிகரில்லாதவர். இதேபோல், காதல் என்பது ஒரு வருடத்திற்கு, வெறும் 365 நாள் மட்டுமே இருக்கும். காதல் விஷயம் என்பது மூச்சு விடுவதுபோல போகும் வரும். எண்ணில் அடங்காது.

நாடிஜோதிடம்: இந்த கிரக சேர்க்கை என்பது இரு பாட்டனார்களைக் குறிக்கும். இவர்கள் கள்ளக்கணக்கு எழுதுவதிலும், காதலில் ஏமாற்றுபவர் களாகவும் இருந்திருப்பார்கள். வேறு சிலருக்கு கல்வியில் தடையை ஏற்படுத்தும். சிலருக்கு வஞ்சகமும், குறுக்கு புத்தி மட்டுமே இருக்கும். நாடி ஜோதிடக் கணக்குப்படி கேது தடையையும், ராகு எதிர்மறை மூளையையும், புதன் புத்திசாலித்தனத் தையும் கொடுப்பதால், மதிகெட்டவர்களாக, வஞ்சகர்களாக இருப்பர்.

பரிகாரம்: இவ்வமைப்புள்ளவர்கள் கண்டிப்பாக கருடனை வணங்குங் கள். வாழ்வின் முக்கிய நிகழ்வின்போது, கருடனுக்கு நெய்விளக்கு ஏற்றுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். திருநெல்வேலி கோடகநல்லூர் திருத்தலம் சென்று வணங்கலாம். திருவண்ணாமலை இடைக்காடர் சித்தரை வணங்கவும்.

(அடுத்த இதழில்

புனர்பூசம், பூசம், ஆயில்யம்...

செல்: 94449 61845