மனுஷ்ய கதி (மனிதர்கள்) தேவ கதி (உயர் நிலை) திர்யஞ்ச கதி (விலங்கு) நரகர் கதி (அசுரர்) எனும் நான்கு கதிகளில் மனம் இயங்கும். மனதின் மாற்றமே, மனிதரின் இன்ப- துன்பங்களுக்கு காரணமாக அமைகிறது. இடுங்கிய கண்களும், சோர்ந்த முகமும், பிரசன்னம் பார்க்கவந்தவரின் ஆரோக்கிய குறைபாட்டைத் தெளிவாக்கியது. தான் பல ஆண்டுகளாக போதைப் பழக்கத்திற்கு ஆளானதாகவும். அதிலிருந்து விடுபட, பரிகாரம் தேடியே,
பிரசன்னம் பார்க்கவந்ததாகத் தெரிவித்தார். கொடுங்களூர் பகவதியை வணங்கி, பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், ஸ்வாதி நட்சத்திரத்திலமைந்தது. இரண் டாம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் அமர்ந்து போதைப் பழக்கத்தைக் காட்டியது. சுக்கிரன், கேது சாரத்திலமைந்து. தீய பழக்கத்திற்கு வலிமை சேர்த்தது. மனதின் விகாரத்தால், பிரசன்னம் பார்க்கவந்தவர். போதைப் பழக்கத்தில் சிறைபட்டதைத் தெளிவாக்கியது. திருவெண்காடு ஸ்ரீ அகோர மூர்த்தியை வழிபட்டால் தீய பழக்கத் திலிருந்து விடுபட முடியுமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் செய்ததால் போதைப் பழக்கம் என்ற அரக்கனிடமிருந்து விடுபட்டான்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
நவகிரகங்களில் சூரியனும், சந்திரனுமே முதன்மையானவர்கள். பஞ்சாங்க கணிதத்தின் அடிப்படையாகிய திதி, யோக, கரணம், சூரிய, சந்திரரின் நகர்வைக்கொண்டே கணிக்கப் படுகிறது. ஒரு ஜாதகத்தின் கோட்சாரப் பலனை காண, ஜனன காலத்து, சந்திர லக்னத்திற்கும், சூரியனின் சஞ்சாரத்திற்கும் உள்ள தொடர்பை கணிக்கிடுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சந்திரன் நின்ற ராசிக்கு சூரியன் வரும்போது, குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். சந்திர லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது, பொருள் நஷ்டம் ஏற்படும். கண் நோய் உண்டாகும். பொதுவாக. மனநிம்மதி குறையும். சந்திரன் லக்னத்துக்கு மூன்றாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது ஒரு புதிய பதவி கிடைக்கும். செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் ஏற்படும். நல்ல பணவரவு இருக்கும். சந்திர லக்னத்துக்கு நான்காமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது, வீடு, வாகனம், சுகம் கெடும். சந்திர லக்னத்துக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது; ஜாதகனுக்கு நோய்களாலும், பகைவர்களாலும் துன்பங்கள் ஏற்படும். அரசாங்கவழியில் தொல்லை உண்டாகும்.
சந்திர லக்னத்துக்கு ஆறாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது, நோய்கள் விலகும். கவைலகள் நீங்கும். பகைவர்கள் ஒழிவார்கள். ஆறாம் வீட்டிற்கு சூரியன் வரும்போது எடுத்த வேலை தடையின்றி நடைபெறும். சந்திரன் லக்னத்துக்கு ஏழாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது, வாழ்க்கை துணையின்மூலம் பிரச்சினை வரும். இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். சந்திரன் லக்னத்துக்கு எட்டாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது, நோய் உண்டாகும். பொருள் நஷ்டம் ஏற்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். சந்திர லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது, நிம்மதி இருக்காது. அதிக அலைச்சல்களை சந்திக்கலாம். எதிர்பாராத, அந்நியர்மூலம் உதவி கிடைக்கும். சந்திரனுக்குப் பத்தாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது, பகைவர்கள் அஞ்சும்படியான வெற்றிகளை அடையலாம். பதினோராம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது, வெற்றியால் புதிய பதவி கிடைக்கும். மதிப்பு உயரும், லாபம் கிடைக்கும். சந்திரனுக்கு பன்னிரண்டாமிடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது, செலவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் ஒருவர் நோய்வாய் பட்டு மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும். கோட்சார, சூரியன், சந்திரன், நகர்வு களைக் கொண்டு, தினபலன் மற்றும் மாதப் பலனை எளிதில் அறியலாமென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.
புதிய தொழிலில் வெற்றி கிடைக்குமா?
கேள்வி: நான், என் நண்பருடன் இணைந்து, கணினி (COMPUTER) உதிரி பாகங்களை விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்க விரும்புகிறேன். அதில் வெற்றி கிடைக்குமா?
(எண்- 23; திருவாதிரை- 3; நட்சத்திராதிபதி- ராகு; ராசியாதிபதி -புதன்.)
* லக்னத்தில் புதன் ஆட்சி பெற்றிருப்பதால் கணினி தொடர்பான தொழில் செய்வதே நல்லது.
* கூட்டுத்தொழிலை குறிக்கும் பாவமாகிய ஏழாம் பாவத்தின் அதிபதி, பத்தாமிடத்திலிருப்பது, கூட்டு வியாபாரத்தில் வெற்றியைக் காட்டுகிறது. ஆனாலும் குரு, தனித்து பத்தாமிடத்தில் அமர்வது சிறப்பில்லை.
* சோழி லக்னத்தில் மூன்றாமதிபதியாகிய சூரியன், லக்னாதிபதியுடன் இணைவது, வெற்றியைக் குறிக்கிறது.
* வியாபாரத்தில் ஏற்படக்கூடிய லாபத்தையும், வாழ்வில் ஏற்படக்கூடிய சுகங்களையும், பதினோராம் வீட்டிலிருக்கும் ராகு உறுதிசெய்கிறது.
* எட்டாமிடத்தில் சனிபகவான் இருப்பதால், தொழிலில் ஏற்ற- தாழ்வு வரும். திட்டமிடுவதில் எச்சரிக்கைத் தேவை.
பரிகாரம்
* திருநெல்வேலி மாவட்டம், கரிசூழ்ந்த மங்கலம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோவிலில், சக்கரத் தாழ்வாரை வணங்கினால், தொழில் வளர்ச்சி யில் முன்னேற்றம் ஏற்படும்.
(மீண்டும் சிறிய இடைவெளிக்கு பிறகு சந்திப்போம்)
செல்: 63819 58636