நாம் எண்ணிய எண்ணத்தில் வெற்றி பெறுவது, வில்லில் நாண் ஏற்றி இலக்கை வீழ்த்துவதற்கு சமம். ஒருவர் ஜாதகத்தில், உபஜெய ஸ்தானங்களைக் கொண்டு இதையறியலாம். இதில் வில் என்பது மூன்றாம் பாவம். ஆறாம் பாவமே, வில்லின் நாண். பத்தாம் பாவமே, அம்பாகப் பாயும். இலக்குதான் பதினோராம் பாவமெனும் வெற்றி. இதில் நான்கும் முக்கியமானவை. நாண் வில்லில் சரியாக இழுத்துக் கட்டப்பட்டிருக்கவேண்டும். அம்பு கூரிய தாக இருக்கவேண்டும். அம்பு இலக்குடன் நேர்க்கோட்டில் அமையுமாறு பொருத்தப் படவேண்டும். இலக்கு நோக்கி, அம்பை செலுத்தும் வல்லமை இருந்தால் எவரும், எதையும் அடையலாம். பிரசன்னம் பார்க்க வந்தவர் விளையாட்டுத் துறையின் பிரபலமான வீரர் என்பது தெரிந்தது. கடந்த ஓராண்டாக, தான் ஈடுபடும் எந்த விளையாட்டு போட்டியிலும் வெற்றிபெற முடியாமல் போனதன் காரணத்தையறியவே பிரசன்னம் பார்க்கவந்திருந்தார். மாங்கோட்டு காவு பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், சிம்ம ராசியில், உத்திர நட்சத் திரத்திலமைந்தது. புதன், ஹஸ்தத்திலமைந்தது. சந்திரன் ரேவதியிலமர்ந்து பிரசன்னம் பார்க்க வந்தவரின் விளையாட்டுத்துறை தொடர்பை வெளிப்படுத்தியது. சனியின் பார்வை, மூன்று மற்றும் பதினோ ராமிடங்களில் பாதிப்பை உண்டாக்கியது. வெற்றியில் தடையும், தாமதமும் உண்டானதன் காரணத்தை அறியமுடிந்தது. ஆடிமாதம் பௌர்னமியில் மதுரை-அழகர்கோவில் கருப்பண்ண சாமியை வழிபட்டால் தடை நீங்கி வெற்றிபெறலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால் தடை நீங்கி விளையாட்டு வீரர் வெற்றிமாலை சுமந்தார்.

KJ

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசியாதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தமாகிய பன்னிரண்டு பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. திருமணப் பொருத்தம் பார்ப்பதில் வேதை பொருத்தத்தில், அதிக கவனம் செலுத்துவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. வேதை என்றால் தடை என்பதே பொருளாகும். எல்லா நட்சத் திரங்களுக்கும் அதற்கான வேதை நட்சத்திரங்கள் உள்ளன. அஸ் வினிக்கு- கேட்டை, பரணிக்கு- அனுஷம், கார்த்திகைக்கு- விசாகம், ரோகிணிக்கு- சுவாதி, திருவாதிரைக்கு- திருவோணம், புனர் பூசத்திற்கு- உத்திராடம், பூசத்திற்கு- பூராடம், ஆயில்யத்திற்கு- மூலம், மகத்திற்கு- ரேவதி, பூரத்திற்கு- உத்திரட்டாதி, உத்திரத்திற்கு- பூரட்டாதி அஸ்தத்திற்கு- சதயம் வேதை ஆகும். மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்கள், ஒன்றுக்கொன்று வேதை. மண மக்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருப்பதற்கு வேதையை அறியவேண்டுமென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.

செய்வினைக் கோளாறு நீங்குமா?

கேள்வி: எனக்கு சில நாட்களாக அடிக்கடி தீய கனவுகள் வருகின்றன. இனம்புரியாத பயமும், பதட்டமும் என்னை வாட்டிவதைக்கிறது. இது செய்வினையால் வந்த கோளாறா? அது நீங்குவதற்கான பரிகாரத் தைக் கூற முடியுமா?

(பிரசன்ன எண்- 58; ஸ்வாதி- 2; துலா ராசி.)

சூரியன், புதன், சந்திரன்- சிம்மம். கேது, மாந்தி, சோழி- பிரசன்ன லக்னம்- துலாம்.

சனி- கும்பம். ராகு, குரு- மேஷம், சுக்கிரன்- கடகம். செவ்வாய்- கன்னி ப் சோழி லக்னம், ராகுவின் ஸ்வாதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது.

* கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையில் லக்னம் இருப்பதால் செய்வினை , ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

* பிரேத சாப கிரகமாகிய மாந்தி, கேதுவுடன் கூடி, சோழி லக்னத்தில் அமர்ந் துள்ளதும், செய்வினை பாதிப்பைக் காட்டு கிறது.

* சூரியன், லக்னத்திற்கு பாதகத்திலிருப்பது, செய்வினையின் வலிமையை தெரிவிக்கிறது.

* சோழி லக்னத்திற்கு நேர் ஏழாம் பார்வை அப பரணி நட்சத்திரத்தில் விழுவதால், இந்த ஜாதகரின் எதிரிகள் மயானத்தில், பலி பூஜை செய்து,துர்தேவதைகளைக்கொண்டு ஏவல் செய்த அறிகுறி தெரிகிறது.

* பரிகாரங்களைச் செய்தால்தான், இந்த ஜாதகர் ஆபத்திலிருந்து தப்பிக்கமுடியும்.

பரிகாரம்

* சோட்டாணிக்கரை (கேரளா) சென்று, கீழ் காவுலி பகவதியம்மனுக்கு, குருதி பூஜைசெய்தால், செய்வினையின் பாதிப்பு நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636