துளையிடப்படாத மூங்கில் இசைப் பதில்லை. உளியால் வரும் வலியை சுமக்காத கல், சிலை யாகாது. சுடப்படாத பொன் ஒளிர்வதில்லை. அனுபவமே சிறந்த குருநாதர். அதுவே வாழ்க்கை. சோர் வும் சோகமும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் நிரம்பிவழிந்தன. தான் ஒரு பொறியியல் பட்டதாரியென்றும், தன்னுடைய, வாழ்க்கை போர்க் களமாக- போராட்டம் மிகுந்ததாகவே இருக்கிறது. வெற்றி என்பது எட்டாத கனியாக உள்ளதாகத் தெரிவித்தார். பிரசன்னத்தின்மூலம் பரிகாரம் கேட்கவே வந்ததாகத் தெரிவித்தார். செட்டிகுளங்கரை பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ் ணன் நம்பூதிரி. சோழி லக்னத்திற்கு மூன்று, ஆறு, ஒன்பது மற்றும் பன்னிரண்டாமிடங்களில் பாதகாதி பதியின் தொடர்பு தெரிந்தது. வெற்றிக் கேந்திரங்கள் பாதிக்கப்பட்டு பதினோராமிடமும் வலுவிழந்த தால், வெற்றி வெகு தூரத்திலிருந்தது.

திருபரங்குன்றத்தில் முருகப்பெரு மானை வழிபட்டு அவர் திருக் கரத்தில் ஒளிரும் வேலுக்கு பூஜைசெய்தால், வெற்றி பெறலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. கந்தனின் கை வேல் தீவினையை அழித்து வெற்றிக்கு வித்திட்டது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இருவருக்கும் தொடர்புள்ள விஷயமே கருத்துப் பரிமாற்றத்தில் இடம்பெறும். கிரக பார்வைகளைக் கணக்கிடும்போது அந்த கிரகத்தின் காரகத்தை அடிப் படையாகக் கொண்டு பலன் கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

Advertisment

KJ

தச்சரைக் காணும்போது மரசாமான் கள் பற்றியும், தையல் காரரை சந்திக்கும்போது உடை பற்றியும் பேசுவதே இயல்பாகும். நோக்கமே நோக்குதலின் காரண மாவதால், கிரகங்களின் பாவகாரகமே கிரக பார்வைகளின் பலனாக அமையும். பொதுவாக, கிரகங்களின் இயல்பு குணகாரகங்களே கிரக பார்வையின் பலனாக எடுத்துக்கொள்ளப் படுகிறது. கிரகங்க ளின் குணம் அவற்றின் இருப்பிடத் திற்கு ஏற்ப மாறும். ஒருவர் தன் எஜமானரிடம் பழகும்போது ஒருவித போக்கையும் தன்னிடம் பணியாற்றுபவர் களிடம் வேறுவிதமான போக்கையும் கையாள்வதுபோல் கிரகங்களின் குணம் அவற்றின் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறும். செவ்வாயும் சனியும் பார்வைப் பரிவர்தனை பெற்றால் வாழ்க்கையில் பூகம்பம்போன்ற விளைவுகளை உண்டாக்கி தீய பலன்களே நிகழும் என்று சொல்வது வழக்கம். எல்லா கிரங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு. மேஷ லக்னகாரருக்கு கடத்தில் சனியும், மகரத்தில் செவ்வாயுமிருந்தால் ஏழாம் பார்வையின் பரிவர்தனை உண்டாகும். இதன் பலன் ஜாதகர் பாதுகாப்புத்துறையில், அதிகாரமான பதவியில் இருப்பார் என்பதே. இதன்காரணம் பத்தாமதிபதியாகிய சனி, ஏழாம் பார்வை யால் லக்னாதிபதியை பார்ப்பதும் லக்னாதி பதியாகிய செவ்வாய் உச்சத்தில் நின்று பத்தாமதிபதியை பார்ப்பதும் நல்ல அதிகார மான பதவியைத்தரும். போர்முனையில் வாழ்க்கை அமையும் என்பதற்கும், வாழ்க்கையே போராட்டமாயிருக்கும் என்பதற்கும், அதிக வேறுபாடுகள் உள்ளன என்பதே உண்மை. பாவகாரகத்தையும் கருத்தில் கொண்டு, கிரக பார்வைப் பலனைத் தீர்மானிக்கவேண்டுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

திருமண தடை நீங்குமா?

கேள்வி: என் மகளுக்கு இரண்டுமுறை திருமணம் நிச்சயம் செய்தபின் நிறைவேறா மல் போனது. திருமணத்தடை விலகுமா? .அதற்கு பரிகாரம் உண்டா?

(ஆரூட எண்-58; ஸ்வாதி- 2.)

dd

* சோழி லக்னத்தில் கேதுவும் ஏழில் ராகுவும் இருப்பது சர்ப தோஷத்தைக் காட்டுகிறது.

* சோழி லக்னத்திற்கு ஏழாம் வீட்டின் அதிபதியாகிய செவ்வாய் பன்னிரண்டில் லக்ன பாதகாதிபதியாகிய சூரியனுடன் சேர்ந்திருப்பதும் சாதகமற்ற பலனையே குறிக்கிறது.

* சனிபகவானின் மூன்றாம் பார்வை ஏழாமிடத்தில் அமைவதால், திருமணத்தில் தடையும் தாமதமும் உண்டாகிறது.

* சோழி லக்னத்திற்கு குருபகவானின் அனுகூலமான ஏழாம் பார்வை கிடைப்பதால் திருமணத்தில் தடை விலகும்.

* பரிகாரங்களை செய்தால் நல்ல பலன் உண்டாகும்.

பரிகாரம்

* ஸ்ரீ காளகஸ்தி ஆலயம் சென்று ஸ்ரீகாளகஸ்தீஸ்வரரையும் தாயாரையும் வழிபடவேண்டும்.

* திருப்பைஞ்ஞீ-யிலுள்ள ஞீ-வனேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று கல்வாழை பரிகார பூஜையை நிறைவேற்றினால் விரைவில் திருமணம் நடக்கும்.

Advertisment