கையளவு மனதில் கடல்போல் ஆசைகளை வளர்த்துக்கொண்டால் விபரீதமான முடிவுகளே ஏற்படும். பேராசை பெரும் நஷ்டத்தைத் தருமென்பதே உண்மை. கவலையால் துவண்ட முகமும் அச்சத்தில் புதைந்த புன்னகையும், பிரசன்னம் பார்க்க வந்தவரின் இயலாமையையும் பறைசாற்றியது. தான் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து விட்டதாகத் தெரிவித்தார். தான் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்குமா என்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். கொடுங்கல்லூர் பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம் ரிஷபத்திலமைந்து அதன் அதிபதியாகிய சுக்கிரன் கன்னியில் நீச மாகியது. இரண்டாமதிபதி எட்டாமதிபதி யாகியும் தொடர்புபெற்றதால் செல்வம், சொத்து, சுகம் இழப்பைக் காட்டியது. ஐந்து, எட்டு, பன்னிரண்டாம் பாவ தொடர்புகளால் எதிர்பாராத இழப்பு ஏற்பட்டுள்ளதை அறியமுடிந்தது. திருச்சிராபள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீநந்தீஸ்வரர் கோவி லுக்கு பிரதோஷ காலத்தில் சென்று வழிபட்டால் இழந்த பணம் திரும்பக் கிடைக்கு மென்ற பரிகாரம் சொல்லப் பட்டது. பரிதவித்து பதட்டத்திலிருந்தவருக்கு பரிகாரத்தால் பலன் கிடைத்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
திருமணப் பொருத்தம் பார்ப்பதில் நட்சத்திரப் பொருத்தம் அமைந்தால் மட்டுமே போதாது. மணமகளின் லக்ன கிரிம்சாம்சத்தை ஆராய்ந்து அந்தப் பெண்ணின் குணங்களைக் கண்டறிவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. கிரிம்சாம்சம் என்பது ராசியின் முப்பது பாகைகளை சூரியன், சந்திரன் தவிர மற்ற ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒற்றை ராசியின் முதல் ஐந்து பாகைகளை செவ்வாய்க்கும், அடுத்த ஐந்து பாகைகளை சனிக்கும், அடுத்த எட்டுப் பாகைகளை வியாழனுக்கும், அடுத்த ஏழு பாகைகளை புதனுக்கும், இறுதியிலுள்ள ஐந்து பாகைகளை சுக்கிரனுக்குமாய் பகிர்ந்துகொடுக்கப்பட்டுள்ளது.
இரட்டை ராசிகளில் இது தலைகீழாக அமையும். மணப்பெண்ணின் லக்னம் மேஷம் அல்லது விருச்சிக மாக இருந்து, செவ்வாய் கிரிம்சாம்சமாக இருந்தாலும் சுக்கிரனின் கிரிம்சாம் சத்திலமைந்தாலும் தகாத உறவு வைத்திருப்பாள். புதனின் கிரிம்சாம்சமாக இருந்தால் கபட வேடதாரி. குருவின் கிரிம்சாம்சத்தில் லக்னம் இருக்குமேயானால் ஒழுக்கமுடைய பெண், சனியின் கிரிம்சாம்சத்தில் லக்னம் இருந்தால் வறுமையுடையவள். இதேபோல், ஒவ்வொரு லக்னாதிபதிக்கும், கிரிம்சாம் சபதிக்குள்ள தொடர்பைக் கொண்டு மணப்பெண்ணின் குணாதிசயங்களை அறியலாமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
மூதாதையர்களின் சொத்தை விற்கமுடியுமா
கேள்வி: என் தந்தையின் காலத்திற்குப் பிறகு, என் சகோதரர்களும், எங்கள் பாட்டனா ருக்குச் சொந்தமான வீட்டை விற்க முயற்சி செய்துவருகிறோம். அந்த சொத்தில் எந்த சட்டப் பிரச்சினையும் இல்லை. ஆனாலும் சில தடைகளால் அந்த சொத்தை விற்க முடியாமல் அவதிப்படுகிறோம். எங்கள் மூதாதையர் சொத்த விற்கமுடியுமா பரிகாரம் உண்டா?
(பிரசன்ன எண் 95: சதயம் மூன்றாம் பாதம் நட்சத்திர அதிபதி ராகு, ராசி அதிபதி- சனி)
சோழி, லக்னம் அமைந்த சதய நட்சத்திரத்தின் அதிபதியான ராகு, மூன்றாமிடத்தில் அமைவது வீடு விற்பதற்கான பிரச்சனையை பற்றிய கேள்வியைக் காட்டு கிறது.
சோழி, லக்னத் தில் சனி பகவான் அமைவதால் தடை யையும், தாமதத் தையும் அறியமுடி கிறது.
வீடு விற்பனை யைப் பற்றி அறிய உதவும் மூன்றாம் பாவத்தில் ராகுவும், குருவும் இணைவது, முயற்சியில் வெற்றி அடையலாமென்ற உறுதியைத் தரு கிறது.
கேது சூரியனுடன், பாதக ஸ்தானத்திலிருப்பதால், பித்ரு தோஷமே இந்த தடைக்கு காரணமாகிறது.
பித்ரு தோஷ பரிகாரத்தால் தடை நீங்கும்.
பரிகாரம்: இராமநாதபுரத்திலுள்ள திருப்புல்லாணி எனும் திவ்ய ஷேத்திரத்தில் சில ஹோமம் செய்வது பித்ரு தோஷத்தைப் போக்கும்.
திருப்புல்லாணி - ஆதிஜெகந்நாதப் பெருமாளை வழிபட்டு, தோஷ பரிகாரங்களை செய்தபின், விற்கவேண்டிய வீட்டின் மண்ணை கடலில் கரைத்தால் எண்ணம் ஈடேறும்.