வாடை, கொண்டல், கோடை, தென்றல் காற்றுகள் வெவ்வேறு திசைகளிலிருந்து வீசினாலும், கடலோடிகள் கலங்குவதில்லை. காற்று அடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல் விதியின் போக்கை மாற்றமுடியாது. விதிக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துகொள்வது காற்றடிக்கும் திசையறிந்து கப்பலில் பாய்மரத்தை மாற்றிக்கட்டி காற்றின் சக்தியில் பயணம் செய்வதுபோல, தசாபுக்தி, கோட்சார அனுகூலங்களைக் கருத்தில்கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறலாமென்பதே, கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. பிரசன்னம் பார்க்க வந்தவர், விரக்தியின் விளிம்பிலிருந்தார். தான், நிலம் வாங்கி, விற்கும் தொழில் செய்வதாகவும், சில வருடங்களாக, தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பிரசன்ன ஜோதிடத்தின் மூலம், பரிகாரம் கிடைக்குமா? என்பதே அவர் கோரிக்க
வாடை, கொண்டல், கோடை, தென்றல் காற்றுகள் வெவ்வேறு திசைகளிலிருந்து வீசினாலும், கடலோடிகள் கலங்குவதில்லை. காற்று அடிக்கும் திசையை மாற்ற முடியாததுபோல் விதியின் போக்கை மாற்றமுடியாது. விதிக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துகொள்வது காற்றடிக்கும் திசையறிந்து கப்பலில் பாய்மரத்தை மாற்றிக்கட்டி காற்றின் சக்தியில் பயணம் செய்வதுபோல, தசாபுக்தி, கோட்சார அனுகூலங்களைக் கருத்தில்கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறலாமென்பதே, கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. பிரசன்னம் பார்க்க வந்தவர், விரக்தியின் விளிம்பிலிருந்தார். தான், நிலம் வாங்கி, விற்கும் தொழில் செய்வதாகவும், சில வருடங்களாக, தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பிரசன்ன ஜோதிடத்தின் மூலம், பரிகாரம் கிடைக்குமா? என்பதே அவர் கோரிக்கை. வடக்கன்தரை திருப்புரைக்கால் பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், கன்னி ராசியில் சித்திரை இரண்டாம் பாதத்திலமைந்தது. செவ்வாய், புனர்பூசம் நான்கில் நீசம்பெற்றது. லக்னம் மற்றும் பத்தாம் வீட்டு அதிபதியாகிய புதன், மீன ராசியிலிருந்தது. பூமி காரகனும், தொழில் ஸ்தானாதிபதியும் நீசத்திலிருந்ததால், நிலம் வாங்கி, விற்கும் தொழிலில் ஏற்பட்ட முடக்கமும், அதனால் வந்த சுணக்கமும் தெளிவானது. காஞ்சியில் அருள்புரியும், யதோத்காரி பெருமாளை வழிபட்டால், தொழிலில் ஏற்பட்ட தடை நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. சொன்னவண்ணம் செய்த பெருமாளின் அருளால், பிரசன்னத்தில் சொன்னபடியே பலன் கிடைத்தது; தொழிலும் செழித்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு ஜாதத்தில் அமைந்துள்ள, யோக, அவயோக அமைப்புகளைக் கொண்டே, ஜாதகரின் வாழ்க்கை தரத்தை அறியலாம். யோகம், யோக பங்கம் மற்றும் அவயோக நிலைகள் ஜாதகருக்கு எப்பொழுது தனது பலாபலன்களை வழங்குகிறது என்பதை காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. யோகம் தரும் கிரகங்கள் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தால் யோக பங்கமாகும். யோகம் தரும் கிரகம் நின்ற நட்சத்திர அதிபதியும் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளில் மறையக்கூடாது. யோகம் தரும் கிரகங்கள் பகை, நீசம்பெற்றால் யோகம் பங்கமாகிவிடும். யோகம் தரும் கிரகங்கள் கிரகண தோஷம், அஸ்தமனம் அடைந்தாலும், யோகத்திற்கு பங்கம் உண்டாகும். யோகத்தை அளிக்கும் கிரகங்கள், பகை, நீசம் போன்ற நிலையிலிருந்தால் யோகம் பங்கம் ஏற்படும். அஸ்த மனம், வக்ராஸ்தமனம், வக்ரம், கிரக யுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலும், கிரக அவஸ்தை, மற்றும் திதி சூனிய ராசியில் இருந்தாலும் யோகம் பலனளிக்காது. தசா புக்தி அந்தர நாதர்கள் அனுகூலமாக இருந்தால் மட்டுமே யோகத்தின் முழு பலனையும் அனுபவிக்க முடியும். சில ஜாதகங்களில் யோக அமைப்புகளும், அவயோக அமைப்புகளும் இருந்த போதிலும், நடைபெறும் தசாபுத்திகள் யோக பலன்களை ஏற்று நடத்தாமல் போனால், ஜாதகருக்கு யோகம் இருந்தும் பலன் இல்லாமல் போகுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
குடும்பத்தில் குழப்பம் தீருமா?
கேள்வி: எனக்கு திருமணமாகி பத்தாண்டுகளாகிவிட்டது. என் கனவருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மன அமைதி கெடுகிறது. குடும்பத்தில் குழப்பம் தீருமா? பரிகாரம் உண்டா?
(பிரசன்ன எண்- 58; ஸ்வாதி- இரண்டாம் பாதம்; நட்சத்திராதிபதி- ராகு; ராசியாதிபதி- சுக்கிரன்.)
* சோழி லக்னம் அமைந்த ஸ்வாதி நட்சத்திரத்தின் அதிபதி யான ராகு, ஏழாமிடத்தில் அமைவது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைக் காட்டுகிறது.
* களத்திர ஸ்தானாதி பதி பன்னிரண்டாம் வீட்டில், லக்ன பாதகாதி யாகிய சூரியனோடு கூடி யிருப்பதும் பாதகமாகிறது.
* குடும்ப ஸ்தானமாகிய, இரண்டாம் இடத்தில், சந்திரன் நீசமாகி பலமிழந்து இருப்பதும், சாதகமான பலனைத் தராது.
* சோழி லக்னம், ராகு, கேதுவில் அடைப்பட்டு சர்ப தோஷத்திலுள்ளது.
* பரிகாரத்தால் வெற்றி பெறலாம்.
பரிகாரம்
* கார்த்திகை மாதத்தில், திங்கட் கிழமை, திருவண்ணாமலை சென்று அருணாசலேஸ்வரரை பதினோரு நெய் விளக்கேற்றி வழிபட்டால், குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையுண்டாகும்.
(தொடரும்)
செல்: 63819 58636