இந்த உலகம் இரகசியம் நிறைந்ததாயும், புரிந்துக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. வருவதை மறுக்கமுடியாது. போவதை நிறுத்தமுடியாது. பிரசன்னம் பார்க்கவந்த இளைஞரின் கவலையும் பதட்டமும் அவர் சொல்லவந்த பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டியது. தன் மனைவிக்கு மூன்றுமுறை கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் மருத்துவச் சிகிச்சையால் பலன் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்துக்கொண்டார். தனக்கு நீண்ட ஆயுளையுடைய புத்திர பாக்கியமுண்டா? என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார்.
ஸ்ரீ காடம்புழா பகவதியை தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. அபுத்திர ராசியில், சோழி லக்னம் அமைந்தது. புத்திர பாவாதிபதியும், பாக்கிய ஸ்தானாதி பதியும், சனி, ராகுவுக்கிடையே அமர்ந்து பாப கர்த்தாரி யோகம் பெற்றிருந்தார்கள்.
இந்த உலகம் இரகசியம் நிறைந்ததாயும், புரிந்துக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. வருவதை மறுக்கமுடியாது. போவதை நிறுத்தமுடியாது. பிரசன்னம் பார்க்கவந்த இளைஞரின் கவலையும் பதட்டமும் அவர் சொல்லவந்த பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டியது. தன் மனைவிக்கு மூன்றுமுறை கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் மருத்துவச் சிகிச்சையால் பலன் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்துக்கொண்டார். தனக்கு நீண்ட ஆயுளையுடைய புத்திர பாக்கியமுண்டா? என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார்.
ஸ்ரீ காடம்புழா பகவதியை தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. அபுத்திர ராசியில், சோழி லக்னம் அமைந்தது. புத்திர பாவாதிபதியும், பாக்கிய ஸ்தானாதி பதியும், சனி, ராகுவுக்கிடையே அமர்ந்து பாப கர்த்தாரி யோகம் பெற்றிருந்தார்கள். புத்திர காரகர் குரு, வக்ரம்பெற்று அசுப சேர்க்கையும் பெற்றது. ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் மட்டும் தனியாக நின்றதால் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. முன்ஜென்ம வினைப்பயனின் வலிமை விஸ்வருபம் எடுத்தது.
ஈசனின் அருளால் மட்டுமே இந்த சோதனையை வெற்றிகொள்ள முடியுமென்ற முடிவுக்கு வந்தார், கிருஷ்ணன் நம்பூதிரி. ஆரணியில் அருள்பாலிக்கும் புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும், புத்திர காமேஷ்டி யாகத்தில் கலந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது.பரிகாரத்தால் பலன் கிடைத்தது. மனக் கவலை தீர்ந்தது; மழலை தவழ்ந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஆணும், பெண்ணும் சமம் என்றாலும், ஜாதக ஆய்வில் அணுகுமுறையை வேறுபடுத்திக் காண்பதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஸ்திரி ஜாதகத்தில் சில விசேஷ விதிகளுண்டு. வைத்திய நாடியில், ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்ப்பதுபோல், ஆண் ஜாத கங்களில் மேஷத்தை, காலபுருஷனின் தலையாகக்கொண்டு லக்னம் அமையும். ராசியின் குண, தோஷங்களையறிவதுபோல் பெண் ஜாதகங்களில், துலாத்தை முதலாகக்கொண்டும் லக்ன பலனைக் காணவேண்டும். ஆண் கூறு வலப்பக்கமும், பெண் கூறு இடப்பக்கமும், அமைவதே அர்த்தநாரீஸ்வரர். சர ராசியாக மேஷமும், துலாமும் அமைந்தாலும். மேஷம் நெருப்பை யும் துலாம் காற்றையும் குறிப்பதை யும், அவை ஆண்- பெண்ணின் குணாதிசியத்தோடு, ஒருங்கிணை வதையும் ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும். ஆணுக்கு, சுக்கிரனும், பெண்ணுக்கு செவ்வாயும் களத்திர காரகர்கள். முக்கியமாக பெண்களின் ஜாதகத்தில். லக்ன திரேகாணத்தைக்கொண்டே அந்த ஜாதகியின் குணநலனையறிய முடியும். பெண் ஜாதகத்தில், குருவும், சந்திரனும் அமையும் திரேகாணத்தைக் கொண்டே அந்த ஜாதகியின் கற்பு மற்றும் ஒழுக்கத்தையறியலாம். பெண் ஜாதகத்தின் இரண்டாம் பாவத்தால் பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்ற நான்கு பிரிவினரின் உடலமைப்பையும் ஜென்ம நட்சத்திரத்தைக்கொண்டு, தெய்வதத்துவம், முனிதத்துவம், நாகதத்துவம் முதலான எட்டு தத்துவங்களின் அடிப்படையில் இயல்பினால் வரும் தத்துவப் பலனையறியலாம், என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
செய்வினை கோளாறு தீருமா?
கேள்வி: எனது குடும்பத்தில் ஏற்பட்ட பகையால், உறவினர் தீய மந்திரத்தால், எனக்கு கெடுதல் செய்திருப்பதாக உணர்கிறேன். அதை கண்டறிய முடியுமா? பரிகாரம் உண்டா?
(பிரசன்ன எண்- 104; உத்திரட்டாதி- நான்காம் பாதம்; நட்சத்திராதிபதி- சனி; ராசியாதிபதி- குரு.)
* சோழி லக்னாதிபதிக்கு ஆறாமதிபதியாகிய சூரியன் பாதகத்திலிருப்பதும் பாதகாதிபதியாகிய புதன் ஆறிலிருப்பதும் எதிரிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் காட்டுகிறது.
* சோழி லக்னத்தின் நாங்கு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்கள் ராகுவின் நட்சத்திரத்திலமைவதால் தீய மந்திரத்தால் ஏற்பட்ட சிக்கலை அறிய முடிகிறது.
* பிரசன்ன கால லக்னம், விருச்சிகத்திலமைவதும், அமானுஷ்யமான நிகழ்வைக் காட்டுகிறது.
* ராகு இரண்டிலும், கேது எட்டிலும் இருப்ப தால் செய்வினையால் மரணத்திற்கு ஒப்பான கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
* பரிகாரத்தால் செய்வினையால் வரும் தொல்லை தீரும்..
பரிகாரம்
* மயிலாடுதுறை கருவாழக்கரை காமாட்சி யம்மன் கோவிலில் பரிகார பூஜைகள் செய்தால் செய்வினையால் ஏற்படும் தொல்லைகள் தீரும்.
(தொடரும்)
செல்: 63819 58636