மனிதனின், செல்வத்தை பகிர்ந்து கொள்ளும் உற்றார் எவரும், அவனு டைய நோய், மனவேதனை, பாவத்தின் பலன் போன்றவற்றை விரும்பி ஏற்பதில்லை. உடலை எரியூட்டும் உற்றார், இறந்தவர் உடமைகளை எரிப்பதில்லையே. சுயநலம் மனித குலத்தின் சாபம். சிதைந்தாலும் கம்பீரம் காட்டும் சிதிலமான கோட்டைபோல் பிரசன்னம் பார்க்க வந்தவரின் தளர்விலும் உயர்வு தெரிந்தது. தான் நவரத்தின வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டியதாகவும், அதில் பெரும் பகுதியை உறவினருக்காக செலவிட்ட தாகத் தெரிவித்தார். ஆனாலும், தான் நோயில் விழுந்து வியாபாரமும் நொடிந்து போனபின் அற்ற குளத்து அறு நீர்பறவைபோல், உறவினர் காணாமல்போனார்கள். என் நோயும் கடனும் தீருமா என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். மணப்புள்ளிக் காவு பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்திற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களின் இணைவு நோயையும் கடனையும் காட்டியது.செவ்வாயும் ஆறாம் அதிபதியும் இணைந்திருந்ததும் குருபகவான் பலவீனமாக இருந்ததும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் துன்பத்தைத் தெளிவாக்கியது.பௌவுர்ணமியில் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும். சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமியை வழிபட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கு மென்ற பரிகாரமும் சொல்லப்பட்டது. சோதனையால் அனுபவம் கிடைத் தது; பரிகாரத்தால் நோய் தீர்ந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் ஜாதகருக்கு இன்பம் தருபவையாகவோ- துன்பம் விளைப்பதாகவோ மனதால் மட்டுமே உணரப்படுகிறது. ஆகவே மனமே வாழ்க்கையாகிறது. ஒரு ஜாதகத்தில் மனோகாரகனாகிய சந்திரன் அமரும், ஜென்ம நட்சத்திரத்தின் அறுபது நாழிகைகளும் பகுத்து ஆராயப்பட்டு, சந்திர அவஸ்தை கணக்கிடுவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சந்திர அவஸ்தைகள் பன்னிரண்டு பிரிவுகளாக பகுக்கப்படுகின்றன. சயனா (படுத்திருப்பது) உபவேஷணம் (உட்காருதல்) நேத்ரபாணி (கண்ணில் கை வைப்பது) பிரகாஷா (பிரகாசம்), கமனா (நகர் வது), ஆகமனா (நகராது) ஆஸ்தானி (சபையில் வருகை), ஆகமம் (நுழை வது), போஜனம் (சாப்பிடு வது), நிருத்யாலிப்சா (நடனத்தில் ஆசை), கௌதுகா (அதிக ஆர்வம்), நித்ரா (தூக்கம்) போன்ற அவஸ்தைகளில் சந்திரன் வெவேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு சந்திரன் பிரகாஷனஸ்தானத்தில் இருக்கும்போது பூர்வீக செல்வம் உடையவராக இருப் பார். சந்திரன் நிந்திரா அவஸ்தையில் இருக்கும்போது நோய் மற்றும் குழந்தைகள் தொடர்பான துக்கங்களால் அவதிப்படுவார். அவரது வாழ்க்கையில் பல வகையான தொல்லைகள் இருக்குமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.
ஒவ்வாமை நோய் தீருமா?
கேள்வி: நான் பல ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறேன். மருத்துவ சிகிச்சையால் பலனில்லை. இந்த ஒவ்வாமை நோய் தீருமா? பரிகாரங்கள் உண்டா?
பிரசன்ன எண்- 76; தனுசு ராசியாதி பதி- குரு; நட்சத்திராதிபதி- கேது நட்சத்திரம்- மூலம்- 4.)
* சோழி லக்னத்திற்கு ஆறா மிடமாகிய ரோக ஸ்தானத்தில் சந்திரன் இருப்பது சுவாச உறுப்பு தொடர்பான நோயைக் காட்டு கிறது.
* லக்னாதிபதியாகிய குரு பகவான் ராகுவுடன் இணைந்தி ருப்பதும் ஒவ்வாமை நோயின் கடுமையை உணர்த்துகிறது.
* பிரசன்ன காலத்து லக்னம் சோழி லக்னத்திற்கு எட்டாமிடத் திலமைவதால், மருத்துவ சிகிச் சையால் பலனில்லாமல் போனது.
* சோழி லக்னத்தின் எட்டா மிடத்தில் நீச செவ்வாய் அமர்ந்த தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந் துள்ளது.
* ஆறாமதிபதியாகிய சுக்கிரன் எட்டாமிடத்துடன் தொடர்பிலிருப்பதால் நோயின் தாக்கம் குறைய நீண்டகாலமாகும்.
* பரிகாரத்தால் மட்டுமே நோய் தீரும்.
பரிகாரம்
* திருவானைக்காவல் கோவிலுக்கு சென்று ஜம்புகேஸ் வரரை வழிபட்ட பின், சந்திரனையும், ஜேஷ்டா தேவியுடன் அருள் புரியும் சனிபகவானை வழிபட் டால் நலம்பெறலாம்.
(தொடரும்)