பட்டாம்பூச்சியைத் துரத்தி திக்குத்தெரியாத காட்டில் அகப்பட்டவர்போல், ஆசைகளின் பின்னால் ஓடி அவதிப்பட்டவர் கோடி. மாயா கிரகமாகிய ராகுவால் திடீர் முன்னேற்றமும், அதன்பிறகு திடீர் சரிவும் ஏற்பட்டு, ஜாதகர் நிலைகுலைந்து போவதை எண்ணிப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. இந்த முன்னோட்டத்திற்கு ஏற்றாற் போல் வறண்ட முகமும் மிரண்ட பார்வையுமாக பிரசன்னம் பார்க்கவந்தவர் ஒரு இளைஞர். தான் சில ஆண்டுகளாக பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், தற்போது எதிர்பாராத நஷ்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வருந்தி னார். இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டுவர முடியுமா என்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந் தார். தொட்ட
பட்டாம்பூச்சியைத் துரத்தி திக்குத்தெரியாத காட்டில் அகப்பட்டவர்போல், ஆசைகளின் பின்னால் ஓடி அவதிப்பட்டவர் கோடி. மாயா கிரகமாகிய ராகுவால் திடீர் முன்னேற்றமும், அதன்பிறகு திடீர் சரிவும் ஏற்பட்டு, ஜாதகர் நிலைகுலைந்து போவதை எண்ணிப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. இந்த முன்னோட்டத்திற்கு ஏற்றாற் போல் வறண்ட முகமும் மிரண்ட பார்வையுமாக பிரசன்னம் பார்க்கவந்தவர் ஒரு இளைஞர். தான் சில ஆண்டுகளாக பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், தற்போது எதிர்பாராத நஷ்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வருந்தி னார். இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டுவர முடியுமா என்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந் தார். தொட்டப்பள்ளி பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழி லக்னத்தின் ஐந்தாமிடம்- இரண்டு, பதினொன்று, எட்டாம் வீடுகளுடன் தொடர்பிலிருந்ததால், பங்குச்சந்தையால் ஏற்பட்ட பிரச்சினையின் முகாந்திரம் தெரிந்தது. இதற்கு, புதன் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்த ராகு முகம்காட்டி முகமன் கூறியது. ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களின் உப நட்சத்திரத் தொடர்பு பொருளா தாரத்தில் சரிவைக் காட்டியது. சந்திரனும் நீசகதியிலிருந்து தோல்வியை மூதரித்தது. கீழமங்கலம் அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகையை வழிபட்டால் இழந்ததைப் பெறலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் செய்ததால் இழந்த சொர்க் கம் மீண்டது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தடையை, முடக்கு நட்சத்திரத்தைக் கொண்டு கண்டறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சூரியன் நின்ற நட்சத்திரம்முதல் மூல நட்சத்திரம்வரை எண்ணிய தொகையை, பூராட நட்சத்திரம் முதல் எண்ணவரும் நட்சத்திரமே முடக்கு நட்சத்திரம் அல்லது லாட நட்சத்திரம் எனப்படும். உதாரணத்திற்கு, பரணி நட்சத்திரத்தில் சூரியன் அமர்ந்தால், அதிலிருந்து மூல நட்சத்திரம்வரை எண்ணிய தொகை பதினெட்டாகும். பூராட நட்சத்திரம்முதல் பதினெட்டாவதாக வரும் நட்சத்திரம் மகம். இதுவே, முடக்கு நட்சத்திரம். முடக்கு ராசி சிம்மம். முடக்கு நட்சத்திராதிபதி அமர்ந்த இடம் பாதிப்படையும். முடக்கு நட்சத்திர அதிபதியின் தசை, புக்தி, அந்தரம் பாதிப்பை செய்யுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
பணியில் இடமாறுதல் உத்தரவு எப்போது கிடைக்கும்?
கேள்வி: நான் என் சொந்த ஊருக்கு பணியில் இடமாறுதல் கேட்டு விண்ணப் பித்துள்ளேன். என் கோரிக்கை நிறைவேறுமா?
-மூர்த்தி, வந்தவாசி.
(எண்- 51; ஹஸ்தம்-3; நட்சத்திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- புதன்.)
பரிகாரம்
* சோழி லக்னத்திற்கு ஏழிலிருக்கும் குருபகவானின் பார்வை விழுவதால் முயற்சியில் வெற்றியுண்டாகும்.
* மூன்றாமதிபதி பத்தாமிடத்தில் சம்பந்தப்படுவதும், சோழி லக்னாதிபதியாகிய புதனின் பத்தாம் வீட்டுத் தொடர்பும் பணி இடமாற்றத்தைத் தெளிவாக்குகிறது.
* ஆறாமதிபதி ஐந்தாம் வீட்டிலிருப்பது, நல்ல சந்தர்பங்கள் கிடைக்க முக்கிய காரணமாகிறது.
* நான்காமதிபதி ஆட்சிபெற்று ஏழிலிருப்பது, சொந்த ஊருக்கு வேலை மாற்றம் கிடைப்பதைத் தெரிவிக்கிறது.
* சந்திரன், சோழி லக்னத் தின் நட்சத்திராதிபதியாகி பதினோராம் வீட்டிலிருப்பதால் ஆசை நிறைவேறும்.
* எட்டில் ராகு இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.
* பத்தில் செவ்வாய் இருப்பதால் புகழ் மற்றும் செல்வாக்கு, உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
* சூரியன், கேது சேர்க்கை இருப்பதால், மேலதிகாரிகளின் தலையீட்டால் பிரச்சினை ஏற்பட்டு, இடமாற்றத்தில் காலதாமதம் ஏற்படும்.
* சனிபகவான் கும்பத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பணியில் இடமாறுதல் உத்தரவு கிடைக்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636