மாற்றம் மட்டுமே மாறாதது. ஓடம் ஒருநாள் வண்டியில் போகும்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். வாழ்க்கை வண்டியின் சக்கரம் மேல்கீழாகவும், கீழ்மேலாகவும் மாறிவரும் நிலைமையே சகட யோகம்.
அரசர்கள் அடிமைகளாவதும், அடிமைகள் அரசராவதும் இவ்வுலகில் இயல்பானது. தங்கத்தட்டில் உணவுண்ட பிரபலங் கள் அந்திமக் காலத்தில் வறுமையில் வாடி இறந்ததை நினைத்துப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.
அதிகாரத் தோரணையில் பிரசன்னம் பார்க்கவந்தவர் ஒரு காவல்துறை அதிகாரிதான். சிறைத்துறை அதிகாரியாக இருந்ததாகவும், பணியில் செய்த தவறால் தானே சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புலம்பி அழுதார். தன்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிகையின் விளைவு என்னவென்பதைத் தெரிந்துகொள்ளவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். காரமுக்கு பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழி லக்னத்திற்கு எட்டிலும், குரு பகவானுக்கு ஆறிலும் சந்திரன் அமர்ந்திருந்தது சகட யோகத்தைக் காட்டியது. சகடயோகத்தின் அசுபப் பலனால் வண்டி குடைசாய்ந்தது என்ற உண்மை தெரிந்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே வழக்கில் வெற்றிகிடைக்கும் என்பதும் தெளிவானது. வியாழக்கிழமைகளில் குரு ஹோரையில் சித்தர்களின் ஜீவசமாதியில் பூஜைசெய்தால் ஓரளவு தண்டனை குறையுமென்ற பரிகாரம் சொல்லப் பட்டது. பரிகாரத்தை நிறைவேற்றியதால் சிறை தண்டனையிலிருந்து தப்பித்தார்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு சொல் மட்டுமே வாக்கியமாகாது. எந்தவொரு கிரகமும் தனித்து செயல்படாது. ஒரு கிரகம் மற்ற கிரகங்களின் இணைவினாலும், பார்வையாலும், அமரும் பாவத்தின் காரகத்தாலுமே இயக்கப்படுகிறது. கிரகப் பார்வைகளை சீர்தூக்கிப்பார்த்து பலன் சொல்வதே கேரள ஜோதிடத் தின் சிறப்பு. பார்க்கும் கிரகம், பார்க்கப்படும் கிரகத்திற்கு தன்னுடைய காரகத்துவத்தையும், தான் சார்ந்த பாவ காரகத்தையும் பகிர்ந்தளிக்கும். இரண்டு கிரகங்களின் பார்வைப் பரிவர்தனை, ஒரு புதிய விளைவைத் தோற்று விக்கும். இரு நட்பு கிரகங்களின் சமசப்தமப் பார்வை, பாவ காரகத்தை வலுவாக்கும். அதேபோல் பகை கிரகங்களின் பார்வை பாவ காரகத்தை வலுவிழக்கச் செய்யும். தசாநாதனின் பார்வை எந்த புக்திநாதனின்மீது பதிகிறதோ, அந்த புக்தி நடைபெறும் காலம் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமையுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
-பெயர் சொல்ல விரும்பாத வாசகர், சென்னை.
திருமணம் எப்போது நடைபெறும்?
கேள்வி: என் மகனுக்கு 38 வயதாகியும் திருமணம் கைகூடவில்லை. திருமணம் எப்போது நடைபெறும்? எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்தால், திருமணத்தடை நீங்கும்?
ஒரு வாசகர், சென்னை.
(எண்- 6; பரணி- 2; நட்சத்திராதிபதி- சுக்கிரன்; ராசியாதிபதி- செவ்வாய்.)
* சோழி லக்னத்திற்கு ஏழில் பிரசன்ன காலத்து லக்னம் அமைவதும், மனோகாரகனாகிய சந்திரன் குடும்ப ஸ்தானத்திலமைவதும், இந்த பிரசன்னம் திருமணம் தொடர்பானது என்பதைத் தெளிவாக்குகிறது.
* சோழி லக்னத்தில் (மேஷம்) ராகு இருப்பது சர்ப்ப தோஷத்தைக் காட்டுகிறது. இதுவே திருமணத்தடைக்கு முக்கிய காரணமாகிறது.
* களத்திர ஸ்தானமாகிய ஏழாமதிபதி சுக்கிரன் ஆறில் இருப்பதும் கடுமையான திருமண தோஷத்தைத் தெரிவிக்கிறது.
* சனிபகவானின் பத்தாம் பார்வை ஏழாமிடத்தில் பதிவது சிறப்பில்லை.
* நான்காமதிபதியாகிய சந்திரன் குடும்ப ஸ்தானத்தில் உச்சம்பெறுவதால், தாய்வழி சொந்தத்தில் திருமண சம்பந்தம் அமையும்.
* பரிகாரங்களைச் செய்தால் குரு மேஷத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமணம் நடைபெறும்.
பரிகாரம்
ஒன்பது செவ்வாய்க் கிழமைகள், ராகுகால நேரத்தில் துர்க்கையம்மனை வழிபட்டால் திருமணம் தோஷம் விலகும்; திருமணம் கூடிவரும்.
திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதமிருந்தால் உடனே திருமணம் கைகூடும்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை எனும் திவ்ய தேசத்தில் அமைந்துள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்குச் சென்றுவழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636