பல காததூரம் பறந்து சேர்க்கும் தேனால், தேனீக்கு பயனென்ன? கூட்டில் சேர்த்த தேனை தீயர், கள்வர் கொள்வார். தேனீயோ தீயில் கருகிச் சாகும். தேவைக்கதிகமான செல்வம் சேர்ப்பவர் துன்பத்தையே விலைகொடுத்து வாங்குகிறார். சர ராசி களுக்கு இரண்டாம் பாவம், தன ஸ்தானமாக வும், மாரக ஸ்தானங்களாகவும் விளங்கும் சூட்சுமத்தை கிருஷ்ணன் நம்பூதிரி, பொருத்திப் பார்த்தார். சில ஜாதகர்களுக்கு, அளவுக்குமீறிய செல்வமே மரண வேதனையைத் தருமென்பதைப் புரிந்து கொண்டார். மேஷ லக்னத்திற்கு தன ஸ்தானாதிபதியாகவும், மாரகாதிபதியாகவும் சுக்கிரன் அமைவதை நினைத்து வியந்தார். ஆடை வெண்மையாகவும், மனம் கருப்பாகவும் இருந்த ஒரு அரசியல் தலைவர் பிரசன்னம் பார்க்கவந்தார். தான் பொதுவாழ்வில் பல ஆண்டுகளாகப் பணியாற்றுவதாகவும், அரும்பாடுபட்டு சேர்த்த தன் சொத்துக்காக வாரிசுகள் சண்டையிடுவதாகச் சொல்லி வருந்தி னார். இந்த பிரச்சினை சுமுகமான முடிவுக்கு வருமா என்பதை அறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். குட்டநெல்லூர் பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழி லக்னத்தின் ஆறு, எட்டு, பத்தாம் பாவங்களை ஆராய்ந்ததில், பிரசன்னம் பார்க்கவந்தவர் ரகசியமாக உயிலெழுதி வைத்தால் பிரச்சினை முடிவுக்கு வருமென்னும் பதில் கிடைத்தது. ஜாதகரின் ஆயுட்காலம்வரை சொத்தைப் பிரிக்காமலிருப்ப்தே நல்லதென்ற அறிவுரையும் கூறப்பட்டது. சோமவாரத்தில் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரரை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிலவுமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலித்தது. குடும்பத்தில் புயலுக்குப் பின் அமைதி உண்டானது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு ஒரு ஜாதகத்தில் லக்னம் அமையும் நட்சத்திரத்தின் பாதமே மிகவும் முக்கிய மானது. லக்ன பாகை இருக்கும் நட்சத்திர பாதம் நவாம்சத்தில் எந்த ராசியில் விழுகிறதென்றும், அந்த ராசி, லக்னம் நின்ற ராசிக்கு சாதகமா, பாதகமா என்ற றிந்து பலன்கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. உதாரணத்திற்கு, கிருத்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் ரிஷப ராசியில் அமையும்.
அதன் நவாம்சம் மகர ராசியில் பொருந்தும். ஸ்திர ராசியாகிய ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீடாகிய மகர ராசி பாதக ஸ்தானமாகும். லக்னம் சார்ந்திருக்கும் நட்சத்திர பாதம், நவாம்சத்தில் பாதக ஸ்தானத்தை அடைவது சிறப்பானதல்ல. மாறாக, அந்த ஜாதருக்கு, வாழ்வில் துன்பத்தைத் தரும். ராசி அமைப் பையும், நவாம்ச சக்கரத்தையும் ஒப்பிட்டு நோக்கியே பலன்கூறவேண்டுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
கடனைத் திரும்ப செலுத்த இயலுமா?
கேள்வி: நான் சில ஆண்டுகளுக்குமுன் குடும்பத் தேவைக்காக கடன் வாங்கினேன்.
அந்தத் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்படுகிறேன். கடனைத் திரும்ப செலுத்த இயலுமா?
-பிரபாகரன், சேலம்.
(எண்-55; சித்திரை-3; நட்சத்திராதிபதி- செவ்வாய்; ராசியாதிபதி- சுக்கிரன்.)
* சோழி லக்னத் திற்கு ஆறாமதிபதி, இரண்டாம் பவாதிபதியின் நட்சத்திரத்தில் இருப்ப தால், குடும்பத் தேவைக்காகக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையைக் காட்டுகிறது.
* லக்னம் மற்றும் எட்டாமதிபதியாகிய சுக்கிரன் பாதகத்திலிருப்பது இக்கட்டான சூழ்நிலையைத் தெரிவிக்கிறது.
* ஒன்பதாம் பாவாதிபதியாகிய புதன் பன்னிரண்டிலிருப்பது, பணத் தட்டுப்பாட்டைக் குறிக்கிறது.
* நான்கில் சனி கிரகம் இருப்பதால் சுகம் சார்ந்த விஷயங்களில் நிம்மதியின்மை யைத் தந்து, மகிழ்ச்சியைக் கெடுக்கும்.
* ஆறில் குரு ஆட்சி பெற்றிருப்பதால், கூடிய விரைவில் கடன் தொல்லை நீங்குமென்ற ஆறுதல் கிடைக் கிறது.
* "இரண்டாமதிபதியாகிய செவ்வாய் எட்டில் இருப்ப தால், அசையா சொத்தினை விற்றுக் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வரலாம்.
* கடன் தொல்லை நீங்க பரிகாரம் செய்யவேண்டும்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசிமாலை சாற்றி வழிபடவேண்டும். வாங்கிய கடனில் ஒரு பகுதியை செவ்வாய்க் கிழமை, குளிகை நேரத்தில் கடன் வாங்கியவரிடம் கொடுத்தால் விரைவில் கடன் தீரும்.
(தொடரும்)
செல்: 63819 58636