தங்கத்துடன் கலக்கப் பட்டுள்ள மற்ற உலோகங்களின் அளவை வைத்தே நகைகளைத் தரம்பிரிக்கிறார்கள். அதுபோல ஒளி (சத்வம்- கருணை), சக்தி (ரஜஸ்- வீரம்), ஜடம் (தமஸ்- கோபம்) ஆகிய மூன்று குணங்களும் கலக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கை அமைகிறது. ஒரு அரசர் போரில் ரஜோ குணத்தையும், தன்னை நாடிவரும் புலவருக்கு புரவலராகும்போது சத்துவ குணத்தையும், கள்வர்களை தண்டிக்கும்போது தமோ குணத்தையும் வெளிப்படுத்துவார். எந்தவொரு கிரகமும் அது நிற்கும் ராசி, நட்சத்திரங்களின் முக்குணங்களுக்கு ஏற்றவாறே தன் செயல்பாட்டை அமைத்துக்கொள்ளுகிறது என்பதை நினைத்து வியந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. அவர் கருத்தை உறுதிசெய்வதுபோல் வந்துசேர்ந்தது ஒரு பிரசன்னம்.
தான் காவல் துறையில் பணிபுரிவத
தங்கத்துடன் கலக்கப் பட்டுள்ள மற்ற உலோகங்களின் அளவை வைத்தே நகைகளைத் தரம்பிரிக்கிறார்கள். அதுபோல ஒளி (சத்வம்- கருணை), சக்தி (ரஜஸ்- வீரம்), ஜடம் (தமஸ்- கோபம்) ஆகிய மூன்று குணங்களும் கலக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கை அமைகிறது. ஒரு அரசர் போரில் ரஜோ குணத்தையும், தன்னை நாடிவரும் புலவருக்கு புரவலராகும்போது சத்துவ குணத்தையும், கள்வர்களை தண்டிக்கும்போது தமோ குணத்தையும் வெளிப்படுத்துவார். எந்தவொரு கிரகமும் அது நிற்கும் ராசி, நட்சத்திரங்களின் முக்குணங்களுக்கு ஏற்றவாறே தன் செயல்பாட்டை அமைத்துக்கொள்ளுகிறது என்பதை நினைத்து வியந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. அவர் கருத்தை உறுதிசெய்வதுபோல் வந்துசேர்ந்தது ஒரு பிரசன்னம்.
தான் காவல் துறையில் பணிபுரிவதாகவும், வேலையில் ஏற்பட்ட தவறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரசன்னத்தின்மூலம் பரிகாரம் தேடிவந்ததாக சொல்லி வணங்கினார். ஸ்ரீ சேனாங்காவு பகவதியை தியானம் செய்து பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னத்திற்கு ஆறாமதிபதியும், ஐந்தாமதிபதியும் இணைந்து லக்னத் தில் இருந்ததாலும், ரஜோ, தமோ குணங்களுடன் இருந்ததாலும், பிரசன்னம் பார்க்க வந்தவர் தண்டிக்கும் அதிகாரமுள்ள சிறைத்துறை அதிகாரி என்பது உறுதியானது. எட்டாமதிபதி பத்தாமிட தொடர்புகொண்டதால், உதவியாளர் தந்திரத்தால் சட்டச்சிக்க-ல் சிக்கிக்கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. பன்னிரண்டாமதிபதியும், பத்தாமிடத்தில் அமர்ந்ததால், பெரிய தண்டனைக்கு ஆளாகமாட்டார் என்ற ஆறுதல் சொல்லப்பட்டது. திருநள்ளாறு சென்று சனிபகவானை வணங்குவதும், வன்னி மரத்தை வலம் வருவதும் இந்தப் பிரச்சினைக் குப் பரிகாரமாகக் காணப்பட்டது. பரிகாரம் செய்து பலன்பெற்றார் பிரசன்னம் பார்க்கவந்த காவல்துறை அதிகாரி.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
பிரசன்ன ஆரூடத்தில் முகூர்த்த நிர்ணயம் மிகவும் முக்கியமானது.
ஆரூடம் கேட்பவர் எந்த நேரத்தில் எந்த காரியத்தைச் செய்தால் வெற்றிகிடைக்கும் என்பதைக் கணித்துச் சொல்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. பிரசன்னத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு, 1, 3, 6, 7, 10, 11-ஆவது ராசிகளில் அமையும் ராசி தினங்கள் வெற்றிதரும். பிரசன்னத்தில் குருவுக்கு 6, 8, 12-ஆவது ராசிகளில் அமையும் ராசி தினங்களை விலக்கவேண்டும். சந்திரன் ரோகிணியின் பின் மூன்று பாதங்களில் சஞ்சரிக்கும் காலமும், வளர்பிறை பஞ்சமியும் தோஷங்களில்லாத நாட்களாக அறியப்படுகின்றன. பிரசன்ன லக்னத்திற்கு சாதகமான கரணமுள்ள நாளின் செயல்கள் தடை தாமதமின்றி இனிதே நிறைவேறுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்குமா?
கேள்வி: நான் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புகிறேன். பலமுறை முயற்சிசெய்தும் வெற்றி கிடைக்கவில்லை.
எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? அதற்குப் பரிகாரம் உண்டா?
-கேசவன், கோவை.
(எண்-52; ஹஸ்தம்-4; நட்சத்திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- புதன்.)
* சோழி லக்னம் ஹஸ்த நட்சத்திரத்தில் அமைந்து, அதன் அதிபதியாகிய சந்திரன் வளர்பிறை சுபராக இருந்தாலும், நீசம் புகுந்து மறைவு ஸ்தானத்தில் அமைவது தற்கா-கத் தடைகளைக் காட்டுகிறது.
* லக்னாதிபதி பத்தாம் வீட்டில் ஆட்சிபெறுவது சிறப்பு.
* கல்விக்கு சாதகமான ராசியாகிய கன்னி ராசியில் சோழி லக்னமும் பிரசன்ன லக்னமும் அமைவது, குறிக்கோள் நிறைவேறும் என்பதை உறுதிசெய்கிறது.
* லக்னத்திற்கு குருவின் ஏழாம் பார்வை கிடைப்பதும் அனுகூலமான பலனைத் தெரிவிக்கிறது.
* பத்தாமிடத்தில் சூரியனும் புதனும் கூடி புதாதித்ய யோகத்தைத் தருவதனால், கல்வியும் பகுதிநேர வேலையும் வெளிநாட்டில் அமையும்.
* இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெறும்போது எண்ணம் நிறைவேறும்.
பரிகாரம்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கூத்தனூர் சரஸ்வதி கோவிலுக்குச் சென்று வழிபட்டால் வெற்றி கிடைக்கும். கல்வியும் ஞானமும் தந்தருளும் ஸ்ரீஹயக்ரீவர் வழிபாடு நன்மை தரும்.
(தொடரும்)
செல்: 63819 58636