"தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே- ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே!' என்ற திருவருட்பாவை நினைவில் அசைபோட்டார் கிருஷ்ணன் நம்பூதிரி. வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவர் களுக்கு துன்பமே வாடிக்கையாகிறது. சந்திரன் எந்த கிரகத்தின் நட்சத்திரக் காலில் அமைகிறானோ அதற்கேற்ற மனோபாவமே உண்டாகிறது. இதுவே நவகிரகங்களின் நவரச நர்த்தனம். விதியெனும் கொடுப்பினைப் பலனை மதியெனும் சந்திரனால் மட்டுமே மாற்றமுடியும்.

kj

வாடி வதங்கிய உலர்ந்த முகத்துடன் பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு முதுமகன். கல்வி, செல்வம், செல்வாக்கிருந்தும், தனக்கு வாழ்க்கையில் திருப்தி ஏற்படவில்லையென்றும், மனக்குழப்பத்தில் இருப்பதாகவும் வருந்தினார். கவலை மேகங்களைக் கலைத்திடவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். கரிக்ககம் சாமுண்டிதேவியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னத்திற்கு நான்காம் வீட்டில் சனியும் சந்திரனும் கூடி புனர்பூ தோஷத்தைக் காட்டியது. அது ராஜயோகமாக மாறுமென்றாலும், வாழ்க்கையில் எல்லாம் கிடைக்கும்; ஆனால் வாழ்க்கை கிடைக்காது. பௌர்ணமி நாட்களில் விரதமிருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றால் தோஷம் விலகுமென்ற பரிகாரம் கூறப்பட்டது.

அண்ணாமலையாரின் அருள்கிடைத்தால் பட்டமரம் துளிர்க்கும்; பாழ் கிணற்றிலும் நீர் சுரக்குமென்ற உண்மை, பிரசன்னம் பார்க்க வந்தவருக்குப் புரிந்தது.

Advertisment

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

Advertisment

இரண்டு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றிக்கொண்டு, அந்த இரண்டு கிரகங்களும் ஆட்சி அல்லது உச்சம்பெற்றால் அது கிரகப் பரிவர்த்தனை யோகம். இதேபோல் பாவாதிபதிகள் அமரும் நட்சத்திரத்தில் பரிவர்த்தனை ஏற்பட்டால் அது சாரப் பரிவர்த்தனை எனப்படும். இந்த இரு பரிவர்த்தனைகளின் பலன்களை யும் விளக்குவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. கிரகங்கள் கேந்திரங்களில் பரிவர்த்தனை பெற்றால் தங்களது தசாபுக்தியில் யோகப் பலன் களைத் தருவார்கள். பகை கிரகங்களின் பரிவர்த்தனை கெடுபலன்களையே தரும். சாரப் பரிவர்த்தனையில், ஆறு மற்றும் எட்டாமதிபதிகள் தொடர்பேற்பட்டால், அந்த கிரகங்களின் தசாபுக்திகள் சோதனையான காலகட்டமாக மாறும். உபஜெய ஸ்தானங்களில் தீய கிரகங்களின் பரிவர்த்தனை நன்மை செய்யுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

ஆபத்து நீங்குமா?

கேள்வி: என் தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கி றார். அவர் உயிர் பிழைப்பாரா? அதற்குப் பரிகாரம் உண்டா?

-கேசவன், கோவை.

(எண்-51; ஹஸ்தம்-3; நட்சத்திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- புதன்.)

● சோழி லக்னமாகிய கன்னி ராசிக்கு இரண்டாமதிபதியாகிய சுக்கிரனும், ஏழாமதிபதியாகிய குருவும் மாரகத்தைத் தரும் தகுதி படைத்தவர்கள். இந்த இருவரும் கேந்திரங்களில் இருப்பது ஆபத்தைக் காட்டுகிறது.

● எட்டில் ராகு அமர்வதால், வலி, வேதனை தொடர்ந்து இருக்கும்.

● எட்டில் செவ்வாய் நின்றதால் ரத்தசோகை, உடலில் ரத்த அளவு குறைதல், கணையம் பாதிப்பு ஏற்படும். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றதால் ஆயுளுக்கு ஆபதில்லை.

● லக்னாதிபதி யாகிய புதன் பன்னிரண்டில் அமர் வதால் மரணபயம் உண்டாகும்.

● ஆயுள் ஸ்தா னாதிபதியாகிய செவ்வாய், ஆட்சி பெறுவது நன்மையே செய்யும்.

● சோழி லக்னத் திற்கு இரண்டில் கேது உள்ளதால் நோயால் மன சங்கடம் உண்டானாலும் ஆயுள் கூடும்.

● குருபகவானின் பார்வை சோழி லக்னத் தில் பதிவதால், பரிகாரத்தால் ஓரளவு பலன் உண்டாகும்.

பரிகாரம்

வேளச்சேரியில் அருள் புரியும் தண்டீஸ்வரரை வழிபட்டால் ஆபத்து விலகும். ஸ்ரீ வாஞ்சியம் சென்று மகா மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் ஆயுள் கூடும்.

(தொடரும்)

செல்: 63819 58636