கேரள ஜோதிட ரகசியங்கள்! (77)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-77

நிலத்தில் வாழும் பறவைகளுக்கு, நடந்து நடந்து கால்கள் வலுவாகிவிட்டன. ஆனால் இறக்கைகள் சுருங்கிவிட்டன.

அதேபோல் உலகியலில் மூழ்கிக்கிடக்கும் மனிதர்களுக்கு நூலறிவு மிகுந்ததால் நுண்ணறிவு மழுங்கிவிட்டது. எதிர் காலத்தில் வரப்போகும் நிகழ்வுகளைக் கனவு கள் அறிவுறுத்தினாலும், சிற்றறிவால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆழ் மனதின் வினோதத்தை அறிவார் எவரு மில்லை. கிருஷ்ணன் நம்பூதிரியின் எண்ண ஓட்டம், கனவுகளின் வரும்முன் உரைக்கும் உபாயத்தைப் பற்றியதாக இருந்தது. பிரசன்னம் பார்க்க வந்த வாலிபரின் கண்களில் அச்சத்தின் மிச்சம் தெரிந்தது. தனக்கு தினமும் மரணபயம் தரும் கனவு விடியற்காலையில் வருவதால் அச்சமுற்றிருப்பதாகத் தெரிவித்தார். குமாரநல்லூரில் அருள்புரியும் பகவதியை வணங்கி,

நிலத்தில் வாழும் பறவைகளுக்கு, நடந்து நடந்து கால்கள் வலுவாகிவிட்டன. ஆனால் இறக்கைகள் சுருங்கிவிட்டன.

அதேபோல் உலகியலில் மூழ்கிக்கிடக்கும் மனிதர்களுக்கு நூலறிவு மிகுந்ததால் நுண்ணறிவு மழுங்கிவிட்டது. எதிர் காலத்தில் வரப்போகும் நிகழ்வுகளைக் கனவு கள் அறிவுறுத்தினாலும், சிற்றறிவால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆழ் மனதின் வினோதத்தை அறிவார் எவரு மில்லை. கிருஷ்ணன் நம்பூதிரியின் எண்ண ஓட்டம், கனவுகளின் வரும்முன் உரைக்கும் உபாயத்தைப் பற்றியதாக இருந்தது. பிரசன்னம் பார்க்க வந்த வாலிபரின் கண்களில் அச்சத்தின் மிச்சம் தெரிந்தது. தனக்கு தினமும் மரணபயம் தரும் கனவு விடியற்காலையில் வருவதால் அச்சமுற்றிருப்பதாகத் தெரிவித்தார். குமாரநல்லூரில் அருள்புரியும் பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

keralajothidam

கனவுக்குக் காரகனாக விளங்கும் ராகுவின் நிலையையும், பன்னிரண்டாம் பாவத்தை ஆராய்ந்ததில், பாம்பு கடிப்பது போன்ற கனவே பிரசன்னம் பார்க்க வந்தவரை பயமுறுத்தியதாகவும் அறியப்பட்டது. சோழி லக்னத்தின் மூன்று, ஏழு, பதினொன்றாம் பாவங்கள் வலுப்பெற்றதால், பிரசன்னம் பார்க்க வந்தவருக்கு திருமணத்தால் சுபச்செலவு உண்டாகுமென்பதே கனவின் பலனானது. நாகதோஷம் விலகி, திருமணமாகுமென்ற செய்தி அவருக்குத் தேனாக இனித்தது.

அதுவே விரைவில் நடந்தேறியது. மனதின் அந்தரங்கத்தில் நடம்புரியும் கனவையும் பிரசன்னத்தால் அறியமுடியுமென்பது வியப்பைத் தந்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு மரத்தின் இலை, கிளை, பூ, காய், கனிகள் மட்டுமே வெளியில் தெரிந்தாலும், மரத்திற்கு ஆதாரமான வேர் கண்களுக்குத் தெரிவதில்லை. அதுபோல் மனித வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மட்டுமே நமக்குத் தெரிகின்றன. ஆனால் அதற்குக் காரணமான முன்ஜென்ம கர்மவினைப் பயன் என்னும் ஆணிவேர் நமக்குப் புலப்படுவதில்லை. கர்ம விபாகத்தைக் கணக்கில்கொண்டு, தோஷப் பரிகாரங்களைத் தீர்மாணிப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. தசம கேந்திரமே கர்மாவைச் சுட்டிக்காட்டும்.

அறுபத்து நான்காவது நவாம்சம் எதிர்பாராத நிகழ்வுகளைக் காட்டுவது போல், எண்பத்தெட்டாவது நவாம்சம் கர்மவினையைக் காட்டுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

மன அமைதி கிடைக்குமா?

கேள்வி: எனக்கு நாற்பது வயதாகிறது. இளமையிலிருந்தே போராட்டமான வாழ்க்கை அமைந்து விட்டது. முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சிகளெல்லாம் தோற்றுப்போய்விட்டன. வாழ்க்கையில் வெற்றி கிடைக்குமா? அதற்குப் பரிகாரமுண்டா?

-சோமசுந்தரம், கரூர்.

(எண்-32; பூசம்-4; நட்சத்திராதிபதி- சனி; ராசியாதிபதி- சந்திரன்.)

● சோழி லக்னத்தின் நட்சத்திராதிபதி யாகிய சனி பகவான் எட்டாமிடத்தில் அமர்வதால், அனுகூலமான பலன்களை எதிர்பார்க்க முடியாது.

● லக்னத்திற்கு நான்கில் கேதுவும் மாந்தியும் சேர்க்கைபெற்றதால் மிகுந்த கஷ்டம் உண்டாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழமுடியாது. நாடோடிபோல் வாழ்க்கை அமையும்.

● இரண்டாம் வீட்டதிபதியாகிய சூரியன், பன்னிரண்டாம் வீட்டிலிருப்பது, வீண் விரயத்தையும், குடும்பத்தில் அமைதியில்லாத நிலையையும் காட்டுகிறது.

● குருபகவானின் பார்வை, சோழி லக்னத்தின்மீதும் பிரசன்ன லக்னத்தின்மீதும் விழுவது சற்றே ஆறுதலான பலன் தரும்.

● லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் லக்னாதிபதி இருப்பதால், ஓரளவு பணம் தேடிவரும். உறவினரின் ஆதரவு ஜாதகருக்குக் கிடைக்கும்.

● குருபகவானின் ஒன்பதாம் பார்வை சோழி லக்னத்திற்கு ஐந்தில் பதிவதால் புத்திரரால் நன்மை உண்டாகும்.

● ஆறாமதிபதியாகிய குருபகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்வதால், தொழிலில் கடுமையான மாற்றங்கள் உண்டாகும். தந்தையால் தொல்லை வரும். எதிரிகளின் சூழ்ச்சியால் தோல்விகள் வந்தா லும், முடிவில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்

● செவ்வாய்க்கிழமை திருச்செந்தூர் சென்று சத்ரு சம்ஹார ஹோமம் செய்ய வேண்டும். சனிக்கிழமை காலை சனி ஹோரையில் சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala150722
இதையும் படியுங்கள்
Subscribe