டலில் பயணிப்பவர் மழை நீரை பருகினால் தாகம் தணியும். கடல் நீரைப்பருகினால் தாகம் மிகுந்துவிடும். நம் ஆசைகள் நிறைவேற குலதெய்வத்தை பிரார்த்தனை செய்வதை விடுத்து துஷ்ட தேவதை களை வசியம் செய்து காரியங்களை சாதித்துகொள்வது பிடியில்லாத வாளை சுழற்றுவது போலாகும். பிரசன்னம் பார்க்க வந்தவரின் கண்களில் மிரட்சியும் மனதில் மருட்சியும் அவருடைய பிரச் சினையின் தீவிரத்தைக்காட்டியது. வாழ்க்கையில் விரைவாக முன்னே றும் எண்ணத்தால்தான் துஷ்ட தேவதைகளை வசியம் செய்து பெரும் செல்வம் பெற்றதாகத் தெரிவித்தார். தனக்கு வாழ்க்கையில் எல்லாம் கிடைத்தது. ஆனால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்க வில்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். தன் குடும்பத் தைப் பிரிந்து பல நோய்களாலும் துன்புறுவதாக புலம்பினார்.

பிரசன்ன ஆரூடத்தின் துணைக் கொண்டு துஷ்ட தேவதைகளின் பிடியிலிருந்து விடுபட விரும்பினார்.

கொட்டன் குளக்கராதேவியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்திற்கு ஐந்தில் மாந்தி சனி- ராகுவும் தொடர்பில் அமைந்த தால் துஷ்ட தேவதையை இஷ்டதெய்வமாக வழிபட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஆறாம் வீட்டில் ஐந்தாமதிபதி அமர்ந்து சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்ததுபோல் ஜாதகர் தானே வலுவில் பிரச்சினையை வரவேற்று சிக்கிக் கொண்டார் என்ற உண்மையும் புலப்பட்டது. சோட்டானிக்கரை உக்ர காளியம்மனுக்கு குருதி பூஜைசெய்தபின் கீழ் காவு பலா மரத்தில் ஆணி அடித்து பரிகார பூஜை செய்தால் துஷ்ட தேவதை யின் பிடியிலிருந்து விடுபடலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால் பிரசன்னம் கேட்கவந்தவர் தொல்லை நீங்கி அமைதிபெற்றார்.

Advertisment

ff

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கேந்திராதிபதி மற்றும் திரிகோண அதிபதிகளின் தசாபுக்திகளை ஆராயும் முறையே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

தசாபுக்தி பலன்களைக் காணும் போது தசாபுக்தி நாதர்களின் மித்ர ராசி மித்ர நவாம்சம் உச்ச நீச கதிகள் போன்றவற்றை அனுசரித்து ஏழுவிதமான மாறுபாடுகளை அறியலாம். அவை சம்பூரண தசை, பூரண தசை, ரிக்த தசை, ஆரோஹினி தசை, அவரோஹினி தசை, மத்திம தசை, அதம தசை எனப்படும். இதில் பரம உச்சத்தில் இருக்கும் நட்பு கிரகத்தின் தசையில் வலிமையான மித்ர கிரகத்தின் புக்தி நடைபெறுமே யானால், அந்த சம்பூரண தசையில் இராஜபோக சுகத்தை அனுபவிக்கலாம். நீசம் பகை கிரக யுத்தத்தில் தோல்வி போன்ற அவஸ்தை களையுடைய கிரகங்களின் தசை, ஜாதகரை, படுபாதாளத்தில் தள்ளும். உச்சத்தை நோக்கி பயணப்படும் கிரகங்களின் தசையே, ஆரோஹினி தசை. நீசத்தை நோக்கி செல்லும் கிரகங்களின் தசையே அவரோகண தசை. சம்பூரண தசாபுக்தி நடக்கும் காலத்தில் துவங்கும் பணிகள் மட்டுமே, முழுவெற்றியைத் தருமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

கல்வியில் தடை நீங்குமா?

கேள்வி: என் மகனுக்கு கல்வியில் தடை ஏற்பட்டுள்ளது. கல்வியில் தடை நீங்கி, வெற்றி பெறுவதற்கு பரி காரம் உண்டா?

(எண்- 26; புனர்பூசம்- 2; ராசியாதிபதி- புதன்; நட்சத்திராதிபதி- குரு).

ப் சோழி லக்னத்திற்கு பன்னிரண்டா மிடத்தில் பிரசன்ன கால லக்னம் அமைவது கல்வியில் பின்னடைவையும் தடையையும் காட்டுகிறது.

ப் கல்விக்கு காரகனும் நான்காமிடத்து அதிபதியுமாகிய புதன் நீசம் பெறுவது, கல்வியில் ஏற்பட்ட தடையை உறுதி செய்கிறது.

ப் புதன் நான்காமிடத்திற்கு பாதகத்தி லமைந்து, கல்வியில் முயற்சியை இழக்க காரணமாகிறது.

ப் சோழி லக்னம் லக்ன பாதகாதி பதியாகிய குருவின் நட்சத்திரமாகிய புனர் பூசத்தில் அமைகிறது.

ப் குருவின் பார்வை நான்காமிடத்தில் பதிவதால் பரிகாரத்தாலும் கடவுளின் கருணையாலும் பலன் கிடைக்கும்.

பரிகாரம்

ப் திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட் டம் என்ற ஊரின் அருகேயுள்ள கூத்தனூர் மகா சரஸ்வதி கோவிலுக்கு சென்று பரிகார பூஜைசெய்தால் பலன் உண்டாகும். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செட்டி புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவரை வழிபட்டால் கல்வியில் தடை நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636