காற்றால் நெருப்பின் உருவம் மாறும். நிலத்தால் மண்ணின் மணமும் மாறும். வெப்பமும், குளிர்ச்சியும், காற்றின் திசையை மாற்றும். ஓடையும், அருவியும் சுவையால் மாறும். ஒளியால் ஆகாயத்தின் நிறமும் மாறும். கூடும் நட்பு, கூடா நட்பானால் துன்பம் தரக்கூடும். பிரசன்னம் பார்க்க வந்த இளைஞரின் பார்வை வருத்தத்தை சுமந்து நின்றது. தான் சில தீய நண்பர்களால், செய்யாத தவறுக்கு சிறை சென்றதாகவும், தன் எதிர்காலம் புதிர்காலமாய் காட்சியளிப்பதாகக்கூறி வருந்தினார். பிரசன்னத் தின்மூலம், பரிகாரம் தேடிவந்திருந்தார். ஆற்றுக்கால் பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம் மகர ராசியில் அவிட்ட நட்சத்திரத்தில் அமைந்தது. பாதகாதிபதியாகிய செவ்வாயின் நட்சத்திரத் தில் அமைந்ததால் பெரும் பாதகத்தைக் காட்டியது. ஐந்தாமதிபதியும், பாதகாதி பதியும் பரிவர்தனயிலிருந்தார்கள். லக்னாதி பதியுடன் கேது ஆறாமிடத்தில் சேர்க்கை இருக்க பந்தன யோகத்தை தந்தது. அதனால் சிறை சென்ற துன்பமும், தெளிவானது.

முன் வினைப்பயனால், மதிகெட்டு கூடா நட்பில் விளைந்த கேடு என்பதும் புரிந்தது.

ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் திருக் கோவிலுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் தோஷம் நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. நிலை தடுமாறிய ஓடத்தை கரையேற்றியதுபோல் இருண்ட வாழ்க்கைக்கு ஆபத்சகாயேஸ்வரர் ஒளி தந்தார்.

kk

Advertisment

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

மனமும், உடலும், திரிதோஷங்களாலும், பஞ்சபூதசம்பந்ததாலும் உருவாகி, தச வாயுக்களி னால் இயக்கப்படுகின் றன. இந்த இயக்கத்தை நுண்ணறிவு எனும் ஐந்தாம் பாவத்தின் வலிமையாலும் அதற்கு ஐந்தாமிடமாகிய ஒன்பதாமிடத்தின் கடவுள் கருணையாலுமே கட்டுப்படுத்த முடியும். அதனால் ஒரு ஜாதகத் தின் திரிகோண பாவங்களைக் கொண்டே ஒருவரின் வாழ்வையும், தாழ்வையும் அறியமுடியும். ஒரு ஜாதகத்தின் திரிகோண ஸ்தானங்களை அடிப்படையாகக்கொண்டு ஆராய்ந்தபின் பலன் கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

1, 5, 9 பாவங்களை உள்ளடக்கிய தர்ம திரிகோணம் ஒருவரின் சிந்தனை செயலையும் குறிக்கும். 2, 6, 10 பாவங்கள் கர்ம திரிகோணமாக பொருளாதாரத்தைக் காட்டும். 3, 7, 11 பாவங்கள் காமத் திரிகோணமாகி உலகியல் இன்பங்களின் அனுபவத்தைக் கூட்டும். 4, 8, 12 பாவங்கள் மோட்ச திரிகோணமாகி ஆசைகள் அறுபடும் நிலையை உணர்த்தும். திரிகோணத்தின் அதிபதிகளும், திரிகோணத்தில் அமரும் கிரகங்களுமே, ஒருவரின் விதியை நிர்ணயிக்குமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

செய்வினை பாதிப்பு நீங்குமா?

கேள்வி: எனக்கு சில மாதங்களாக மனதுக்குள் ஒரு ரகசிய பயம் இருக்கிறது. யாரோ என்னை பின்தொடர்வது போன்ற அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். தீய கனவுகளும், சுபகாரியங்களில் தடையும் உண்டாகிறது. இது செய்வினை கோளாறா? பரிகாரம் உண்டா?

எண்- 14; ரோகிணி- 2; ராசியாதிபதி- சுக்கிரன்; நட்சத்திராதிபதி- சந்திரன்.)

ப்பிரசன்ன லக்னத்திற்கு எட்டா மிடத்தில் பிரசன்ன கால லக்னம் அமைந்து அமானுஷ்யமான பிரச்சினையைக் காட்டுகிறது.

ப் மனோகாரகனாகிய சந்திரனும் எட்டாமிடத்தில் அமர்வது பாதிப்பின் தீவிரத்தை உறுதி செய்கிறது.

ப் பன்னிரண்டாமிடத்தில் ராகுவும் செவ்வாயும் கூடியிருப்பது உறக்கத்திலும் நிம்மதியற்ற நிலையை குறிக்கிறது.

ப் சோழி லக்னத்தின் பாதகத்தில் சனிபகவான் இருப்பதால் இந்த தொல்லை செய்வினை பாதிப்பால் ஏற்பட்டுள்ளது.

ப் மூதாதையர் சொத்தில் ஏற்பட்ட தகராறினால் இது செய்யப்பட்டுள்ளது.

ப் ராகு அபபரணியிலிருப்பதால் சக்திவாய்ந்த மந்திர பிரயோகத்தால் பாதிப்பு அதிகம் உள்ளது தெரிகிறது.

பரிகாரம்

சிதம்பரம்- தில்லை காளி கோவிலுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்தால் செய்வினையால் வந்த பாதிப்பு நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636