காற்று அடிக்கும் திசையை மாற்றமுடியாததுபோல் விதியின் போக்கை மாற்றமுடியாது.

விதிக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது காற்றடிக்கும் திசையறிந்து கப்பலில் பாய்மரத்தை மாற்றிக்கட்டினால், எதிர்க்கும் காற்றின்சக்தியில் பயணம் செய்வதுபோல வாழ்க்கையில் வெற்றி பெறலாமென்பதே, கிருஷ்னன் நம்பூதிரியின் கருத்து. பிரசன்னம் பார்க்க வந்த இளைஞர், விரக்தியின் விளிம்பிலிருந்தார். தனது வாழ்க்கையில், தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பதாகக் கூறி வருந்தினார். பிரசன்னத்தின்மூலம், பரிகாரம் தேடி வந்திருந்தார். ஆழியூர், நாக பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் ராகுவும், பதினொன்றாம் வீட்டில் கேதுவும் அமைந்து, சுபகிரகங்கள் அனைத்தும் இந்த இரண்டு சர்ப கிரகங்களுக்குமிடையே இருந்ததால் கடுமையான காலசர்ப தோஷத்தைக் காட்டியது.

விளக்கு எறிய உதவும் காற்றே, தடம் மாறினால் விளக்கை அணைத்துவிடும். கேதுபகவான் விளக்காகவும் ராகுபகவான் காற்றாகவும் விளங்குகிறார்கள். அதனாலேயே நெருப்பு ராசியில் கேதுவின் நட்சத்திரங்களும் காற்று ராசியில் ராகுவின் நட்சத்திரங்களும் அமைகின்றன. கீழப்பெரும்பள்ளம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாத ஸ்வாமியை தரிசனம் வழிபட கால சர்ப தோஷம் நீங்கி யோகமான வாழ்க்கை உண்டாகுமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது.பரிகாரம் பலனளித்தது; வாழ்க்கை பிரகாசித்தது.

dd

Advertisment

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தில் யோகாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதியை லக்னத்தைக் கொண்டும், ராசியைக்கொண்டும் கணக்கிடுகிறோம்.

அதுபோல் ஒவ்வொரு பாவத்திற் குமான யோகாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதிகளையறிந்து, வெற்றியை உறுதி செய்வதே கேரள ஜோதிடத் தின் சிறப்பு. உதாரணத்திற்கு கடக லக்னத்திற்கு யோகாதிபதியாகிய செவ்வாய் அதற்கு ஏழாம் பாவமும் களத்திர ஸ்தானமுமாகிய மகரத்திற்கு பாதக ஸ்தானாதிபதியுமாகிறார். அதனால் கடக லக்னக்காரர்கள் செவ்வாய் புக்தியில் திருமணத்தைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், கடக லக்னத்திற்கு நான்காம் பாவமாகிய துலா ராசிக்கு யோகாதிபதியாகிய சனியின் புக்தியில் வீடு, வாகனங்களை வாங்குவது சிறந்த பலனைத் தரும். சர ராசிகளுக்கு இரண்டு, ஏழாமிடமும் மாரக ஸ்தானங்கள். ஸ்திர ராசிகளுக்கு மூன்று மற்றும் எட்டாமிடம் மாரக ஸ்தானங்கள். உபய ராசிகளுக்கு இரண்டு, ஏழு, பதினோராமிடங் கள் மாரக ஸ்தானங்கள். அந்தந்த பாவ காரகங் களுக்கேற்ப யோகாதிபதிகளையும் பாதகாதிபதி களையும் அறிந்து செயலாற்றினால் நன்மையடைய லாம் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

தொழிலில் தடை நீங்குமா?

கேள்வி: நான் பத்து ஆண்டுகளாக ரசாயன பொருட்களை தயார்செய்யும் தொழிற்சாலையை நடத்திவருகிறேன். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பலதடைகள் உண்டாகின்றன. தடைகளை மீறி தொழிலை நடத்த முடியுமா? -பரிகாரம் உண்டா?

எண்-82; உத்திராடம்-2; ராசியாதிபதி- சனி; நட்சத்திராதிபதி -சூரியன்.)

* சோழி லக்னத்திற்கு பத்தாமிடத்தில் புதனும் கேதுவுமிருப்பது ரசாயணம் தொடர்பான தொழிலைக் காட்டுகிறது.

* சனிபகவானின் பத்தாம் பார்வையால் தொழிலில் முடக்கம், பணியாளர் களால் வரும் தொல்லையைக் குறிக்கிறது.

* சோழி லக்னத்தின் நட்சத்திர அதிபதியாகிய சூரியன் நீசத்திலிருப்பது, தொழிலில் போட்டிகளை சமாளிக்க முடியவில்லை என்பதும் உறுதியாகிறது.

* நான்காமிடத்தில் ராகு இருப் பது தொழில் நடத்துமிடத் திலுள்ள பிரச்சினைகளால் ஏற்படும் தொல்லையை எடுத்துக் காட்டுகிறது.

* பத்தாமிடத்தில் நிலவும் கிரக யுத்தமும், குழப்பத் திற்கான காரணமாகிறது.

* பரிகாரத்தால், தொழிலில் தடை நீங்கும்.

பரிகாரம்

காஞ்சீபுரம் ஸ்ரீ அஷ்ட புஜம் திருக் கோவிலுக்கு சென்று, ஸ்ரீ புஷ்பவல்லி தாயாரை, வெள்ளிக் கிழமைகளில் வழிபட்டுவருவதால், தொழிலில் ஏற்படும் பிரச்சினை தீரும்.

(தொடரும்)

செல்: 63819 58636