கேரள ஜோதிட ரகசியங்கள்! (136)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-136

ந்த விலங்கும், தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்வதில்லை. மனிதன் மட்டுமே தன்னைத் தானே ஆசையால் சிறைப்படுத்திக்கொள்கிறான்.

தன் வாழ்க்கைக்குப்பின் உதவாத அதிக பொருட்செல்வத்தை பேராசையால் தேடி வாழ்வை வீணாக்கிக்கொள்கிறான். ஆறடியில் அடங்குபவன், அகிலத்தையே ஆள நினைக்கிறான். பலகாத தூரம் பறந்து சேர்க்கும் தேனால் தேனிக்கு பயன் என்ன? கூட்டில் சேர்த்த தேனை, தீயர், கள்வர், கொள்வார். தேனியோ தீயில் கருகி சாகும். வெளி தோற்றத்தில் வளமையும், மனதில் வறுமையுமாக, பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு முதியவர். சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி பெரும் செல்வந்தரானதாக சொல்லி பெருமிதப்பட்டார். ஆனா லும், தன் மகன்கள், சொத்துகாக தன் உயிருக்கே, ஆபத்து விளைவிப்பதாக சொல்லி வருந்தினார். பிரசன்னத்தின் மூலம், தன் பிள்ளைகளை நல்வழி படுத்தமுடியுமா என்பதையறியவே, வந்திருப்பதாகத் தெரிவித்தார

ந்த விலங்கும், தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்வதில்லை. மனிதன் மட்டுமே தன்னைத் தானே ஆசையால் சிறைப்படுத்திக்கொள்கிறான்.

தன் வாழ்க்கைக்குப்பின் உதவாத அதிக பொருட்செல்வத்தை பேராசையால் தேடி வாழ்வை வீணாக்கிக்கொள்கிறான். ஆறடியில் அடங்குபவன், அகிலத்தையே ஆள நினைக்கிறான். பலகாத தூரம் பறந்து சேர்க்கும் தேனால் தேனிக்கு பயன் என்ன? கூட்டில் சேர்த்த தேனை, தீயர், கள்வர், கொள்வார். தேனியோ தீயில் கருகி சாகும். வெளி தோற்றத்தில் வளமையும், மனதில் வறுமையுமாக, பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு முதியவர். சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி பெரும் செல்வந்தரானதாக சொல்லி பெருமிதப்பட்டார். ஆனா லும், தன் மகன்கள், சொத்துகாக தன் உயிருக்கே, ஆபத்து விளைவிப்பதாக சொல்லி வருந்தினார். பிரசன்னத்தின் மூலம், தன் பிள்ளைகளை நல்வழி படுத்தமுடியுமா என்பதையறியவே, வந்திருப்பதாகத் தெரிவித்தார். கொட்டங்குளங்கரா தேவியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்திற்கு ஐந்தில், சனியும், ராகுவும் கூடி தோஷத்தைக் காட்டியது. ஐந்தாமதிபதி, ஆறு, எட்டு, பன்னிரண்டாமதிபதிகளின் தொடர்பிலிருந்தது. பிள்ளைகளால் தொல்லையென்பது உறுதியானது. முன்ஜென்ம வினைப் பயனால், பாடுபட்டு சேர்த்த செல்வமே, அவருக்கு பகையானது.

சிறுவாச்சூர், மதுர காளியம்மனை, வெள்ளிக் கிழமைகளில் தரிசித்துவர, புத்திரரால் வந்த தொல்லை அகலுமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. அகிலாண்ட நாயகியின் அருளால் புத்திரர்கள் தம் தவறை உணர்ந்து வருந்தி திருந்தினர்; மகிழ்ச்சி மலர்ந்தது.

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு மனிதனென்பது, உடல், மனம், உயிர், ஆன்மாவின் கூட்டு இயக்கத்தாலான ஒரு கூடு. அதேபோல், எல்லா பாவங்களும், கிரகங்களும், ஜீவன், சரீரம், சூட்சமம் போன்றவற்றாலானவை. இவற்றை ஆராய்ந்து பலனறிவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒவ்வோரு பாவங்களுக்கும், பாவாதிபன் எந்த வீட்டில் இருக்கின்றாரோ அவ்வீட்டதிபதினும் நிற்கும் இடமும் அந்தந்த பாவங்களுக்கு ஜீவனென்றும், பாவாத் பாவராசிக்கு அதிபதி எந்த வீட்டில் இருக்கின்றாரோ அவ்வீட்டதிபதியே, சரீரமாகும். உதாரணாத்திற்கு ரிஷப லக்னம் என்றால், அந்த வீட்டதிபதி கடகத்தில் புனர் பூசம் நட்சத்திரத்தில் நின்றால், லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி சந்திரன். அவரே ஜீவனாக விளங்குவார். லக்னத்திற்கு பாவாத் பாவம் லக்னமே. அதன்படி பார்க்கும்போது சுக்கிரன் நின்ற வீட்டதிபதியே சரீரமாக வும் விளங்குவார். தசாநாதன், ஸ்தூலாமாக வும், புக்திநாதன் மனமாகவும், அந்தரநாதன் உயிராகவும், சூட்சம நாதன், ஆன்மாகவும் விளங்குவார்கள். வாழ்வில் நிகழும் சம்பவங்கள், பாவம் மற்றும் காரக கிரகங் களின், பாவாதிபதி, நட்சத்திர அதிபதி, உப நட்சத்திர அதிபதி, உப உப நட்சத்திர அதிபதி யின் தொடர்பில்தான் அமையுமென்பதே உண்மை.ஒவ்வொரு பாவங்களுக்கும் பாவாதிபதிகளுக்கும், காரகர்களுக்கும், ஜீவனையும் சரீரத்தையும் அறியாவிடில் அந்த ஜாதகத்திற்கு சொல்லும் பாவபலன் தவறிப்போகக்கூடுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

வீடு கட்ட முடியுமா?

கேள்வி: நான் ஐந்து ஆண்டுகளாக, என் மூதாதையர் நிலத்தில் வீடு கட்டமுயற்சி செய்து வருகிறேன். ஆனாலும், தொடர்ந்து பல தடைகள் உண்டாகின்றன. தடைகளை மீறி வீடு கட்டமுடியுமா? -பரிகாரம் உண்டா?

(எண்- 90; அவிட்டம்- 2; ராசியாதிபதி- சனி; நட்சத்திராதிபதி- செவ்வாய்.)

* சோழி லக்னத்திற்கு எட்டில் பிரசன்ன லக்னம் அமைவது வீடு கட்டுவதில் ஏற்படும் தடையில் மறைமுகமான காரணம் இருப்பதை அறியமுடிகிறது.

* சொந்தவீடு இருப்பிடத்தைக் குறிக்கும் நான்காமிடத்து அதிபதியாகிய செவ்வாய் நீசமடைவதும் முயற்சியிலிருக்கும் குறைபாட்டை குறிக்கிறது.

* ஒன்பதாமதிபதி நான்கிலிருப்பது வீடு கட்ட தேர்ந்தெடுத்த நிலம் மூதாதையர் நிலம் என்பதும் உறுதியாகிறது.

* நான்காமிடத்தில் ராகுவும், சூரியனும் இருப்பதால், மூதாதையர் நிலத்தின் ஒரு பகுதியில் கோவிலிருந்து பிற்காலத்தில் பராமரிப்பு இல்லாமல் காணாமல் போய் விட்டது.

* சனிபகவானின் பார்வை நான்காமிடத் தில் அமைவதால், வீடு கட்டுவதில் தடையும், தாமதமும் நீடிக்கிறது.

* ஆறாமிடத்தில் சுக்கிரன் இருப்பதால், பல இன்னல்களும், இடையூறுகளும் உண்டாகும்.

* வீடு கட்டும் மனையின் ஒரு பகுதியில், குலதெய்வத்துக்கு கோவில் எழுப்பி வழிபட்ட பின், வீடு கட்டும் பணியைத் தொடங்கினால் தடை நீங்கும்.

* பரிகாரத்தால், தோஷம் நீங்கும்.

பரிகாரம்

தர்மபுரி அதியமான் கோட்டையிலுள்ள காலபைரவர் கோவிலுக்கு சென்று, தேய்பிறை அஷ்டமியில் பரிகார பூஜை செய்தால், கட்டடப் பணியில் தடை நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala250823
இதையும் படியுங்கள்
Subscribe