கரையில் கட்டப்பட்ட ஓடம் பாதுகாப்பானது என்றா லும் கடலில் பயணிக்காத ஓடம் சிறப்பற்றது. தாய் மரத்தின்கீழ் விழுந்த விதைகள் நங்கு முளைத்து பயன் தருவதில்லை. லக்ன திரிகோணம் வலிமையாக அமைவது, பாதுகாப்பான வாழ்க்கையைத் தருமென்றா லும், உபஜெய ஸ்தானங்கள் வலுபெற்றால் மட்டுமே, வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். நடை, உடை, பாவனையால் பிரசன்னம் பார்க்கவந்தவர் பெரும் செல்வந்தர் என்பது புரிந்தது.தன் தந்தை உலக புகழ்பெற்ற வணிகர் என்ற அறிமுகத்துடன் பேச்சைத் தொடர்ந்தார்.
தன்னால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியவில்லை என்ற வருத்ததை தெரிவித்தார். பிரசன்னத்தின்மூலம் விடிவு காலம் பிறக்குமா?
கரையில் கட்டப்பட்ட ஓடம் பாதுகாப்பானது என்றா லும் கடலில் பயணிக்காத ஓடம் சிறப்பற்றது. தாய் மரத்தின்கீழ் விழுந்த விதைகள் நங்கு முளைத்து பயன் தருவதில்லை. லக்ன திரிகோணம் வலிமையாக அமைவது, பாதுகாப்பான வாழ்க்கையைத் தருமென்றா லும், உபஜெய ஸ்தானங்கள் வலுபெற்றால் மட்டுமே, வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். நடை, உடை, பாவனையால் பிரசன்னம் பார்க்கவந்தவர் பெரும் செல்வந்தர் என்பது புரிந்தது.தன் தந்தை உலக புகழ்பெற்ற வணிகர் என்ற அறிமுகத்துடன் பேச்சைத் தொடர்ந்தார்.
தன்னால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியவில்லை என்ற வருத்ததை தெரிவித்தார். பிரசன்னத்தின்மூலம் விடிவு காலம் பிறக்குமா? என்ற ஏக்கத்துடன் பிரசன்னம் பார்க்கவந்திருந்தார். சூரக்கோடு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார். சோழி லக்னத் தின் திரிகோணங்கள் வலுபெற்றி ருந்தன. லட்சுமி ஸ்தானங்கள் வலிமையானதால், செல்வத்திற்கு குறை வில்லை என்பதையறிய முடிந்தது. இந்து லக்னத்தில் ஆட்சி உச்சம்பெற்ற புதனிருந்த தால் நீடித்த செல்வமுடைவர் என்பது தெளிவானது. ஆனாலும், உபஜெய ஸ்தானங்களாகிய மூன்று, ஆறு, பத்து மற்றும் பதினோராம் வீடுகள் சரியாக அமையவில்லை. ஆகோர வீரபத்தரரை வணங்கினால் வாழ்வில் புகழும் செல்வாக்கும் உண்டாகும் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலித்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒருவர் சுமந்துவரும் சஞ்சித கர்மாவை அனு பவிக்கவே இவ்வுலகில் பிறக்கிறார். ஜனன ஜாதகத்தில் அஷ்டவர்கக்கணிதம் செய்து ஒருவரின் பூர்வஜென்ம கர்ம பலனையறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. எட்டாம் பாவம் அமையும் ராசியின் அசுப வர்கத்து பிரதிகூல ரேகைகளின் கூட்டுத் தொகையை முற்பிறவியின் தீவினைப் பலன்களாகவும், ஒன்பதாம் பாவம் அமையும் ராசியின் சுப வர்கத்து அனுகூல பிந்துக்களின் கூட்டுத்தொகையை, முற்பிறவியின் நல்வினைப் பலன்களாகவும் கணக்கிடப்படும். ஒரு குறிப்பிட்ட கிரகம் அந்தந்த ராசிகளுக்கு தரும் சுப மற்றும் அசுப வர்கப்பலன்களை தனியாக கணக் கிட்டுவரும் பின்னாஷ்ட வர்கத்தின் பரல்களைக்கொண்டு, முன்ஜென்ம வினைப் பயனின் காரணத்தைக் கிரககாரகத்தால் அறியலாம். உதாரணத்திற்கு சூரியனின் சுப வர்க பரல்கள் எட்டா மிடத்தில் அதிகமாகவும், ஒன்பதாமிடத்தில் குறைவாகவும் இருந்தால் பிதுர் சாபம் உள்ளதாக அறிய வேன்டும் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
கடன்தொல்லை நீங்குமா?
கேள்வி: கடந்த ஐந்தாண்டுகளாக கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறேன். கடன்தொல்லை தீர பரிகாரம் உண்டா?
(எண்- 14; ரோகிணி- 2; ராசியாதிபதி- சுக்கிரன்; நட்சத்திராதிபதி- சந்திரன்.)
* சோழி லக்னத்தின் ஆறாமிடத்திலிருப்பது, கடனால் வந்த பிரச்சினையைக் காட்டுகிறது.
* இரண்டாமதிபதியாகிய புதன் ஆறாமிடத்தில் அமர் வதும் தீராத கடனைக் குறிக்கிறது.
* கன்னியில் செவ்வாய் கடலும் வற்றிப்போகும் என்ற பழமொழிக்கு ஏற்பு பண நெருக்கடியை அறியமுடிகிறது.
* பாதக ஸ்தானத்தில் தர்மகர்மாதிபதி அமைவது கர்மவினையால் வந்த பொருளா தார தடையைக் காட்டுகிறது.
* குருவும் சனியும் இணைந்து பாதகத் திலிருப்பதால் முயற்சிகளில் தோல்வியே பலனாகிறது.
* கிரக நிலைகள் பாதிப்பிலிருப்பதால் பரிகாரத்தால் மட்டுமே பலன் உண்டாகும்.
பரிகாரம்
கும்பகோணத்திற்கு அருகில் அமைந் துள்ள திருச்சேறை உடையார் கோவிலுக்கு சென்று, ருண விமோச்சனராய் அருள்பாலிக் கும் சிவபெருமானை வழிபட்டால் கடன் நிவர்த்தியாகும். வறுமை நீங்கி செம்மையான வாழ்வை பெறலாம்.