அவசியமுள்ளவர், ஒருவருக்கே அடிமை. பேராசையுள்ளவரோ எல்லாருக்கும் அடிமை. ஊர்க் குருவி, பருந்தாக மாற ஆசைப்படுவது குற்றமே. தகுதி யும் முயற்சியும் இல்லாதவரின் ஆசை, ஆபத்தையே விளைவிக்கும் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.
புயலில் சிக்கிய ஓடம்போல், கலங்கிய மனதுடன் பிரசன்னம் பார்க்க வந்தவர், தன் சோகத்தைச் சொல்லத் தொடங்கினார். வசதியாக வாழ எண்ணி, சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதனால் கடன்காரர்களுக்கு அடிமையானதாகத் தெரிவித் தார். பிரசன்னத்தின்மூலம் பரிகாரம் தேடி வந்திருந்தார். திப்பிளசேரி பகவதியை வணங்கி பிரசன்னத் தைத் துவங்கினார், கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழி லக்னத்தின், ஆறாமதிபதி பதினொன் றாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டதால், சூதாட்டத் தால் கடன் உருவானதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆறாம் அதிபதி யுடன் புதன், ராகு இணைவு பெற்றதால், ஏமாற்றத்தைக் காட்டி யது. லக்னாதிபதி ஆறாமிடத் தில், பாதகாதிபதியின் நட்சத்திரத் தில் அகப்பட்டது. பிரசன்னம் பார்க்க வந்தவர், தானே தனக்குப் பகையாகி, தன் நாடகத்தில் தானே சிறையாகி, சீரழிந்து நின்றதும் விளங்கியது. சீர்காழி சட்ட நாதர் கோவிலுள்ள வலம்புரி மண்டபத்தில் நடைபெறும் வெள்ளிக்கிழமை பூஜையில், பிரார்த்தனை செய்தால், கடன் நீங்கும் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. தூண்டில் இரும்பை, இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றதே, சூது என்ற அறிவுரையும் வழங்கப்பட்டது. வருந்தி, திருந்தி, பரிகாரம் செய்ததால், வறுமை நீங்கி, வளமை சூழ்ந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
நவாம்சத்தைக்கொண்டு, திருமண வாழ்வைக் கண்டறிவதுபோல், உப பதா லக்னத்தை மையப்படுத்தி, மண வாழ்வின் வெற்றியையறிவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டு அதிபதி பன்னிரண்டாம் வீட்டிலிருந்து எவ்வளவு வீடு தள்ளி இருக்கிறாரோ அந்த எண்ணிக்கையை அவர் நின்ற ராசி வீட்டிலிருந்து எண்ணி வர கிடைக்கும் ராசியே உப பதா லக்னம். பன்னிரண்டாம் அதிபதி படுக்கை சுகத்தை குறிக்கும் கிரகமும் ஆகும். அந்தரங்க வாழ்வில் ஏற்படும் மனகசப்பே, பெரும்பாலான திருமண வாழ்வின் முறிவுக்குக் காரணமாகிறது. உப பதா லக்னத்தில் கேது இருந்தால், திருமணம் தாமதமாகும். தாம்பத்திய சுகத்தில் ஈடுபாடு குறையும். துறவு மற்றும் விரக்தியைத் தரும் கேதுவே, இதற்கு காரணமாக அமைவாரென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.
புற்று நோய் குணமாகுமா?
கேள்வி: நான் புற்றுநோயால் பாதிக் கப்பட்டுள்ளேன். இரண்டு ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறேன்.
ஆனாலும், நோய் குணமாகவில்லை. புற்று நோய் குணமாகுமா? பரிகாரம் உண்டா?
(எண்- 28; புனர்பூசம்- 4; நட்சத்திராதிபதி- குரு; ராசியாதிபதி- சந்திரன்.)
ப் சோழி லக்னம், ருண, ரோக, சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் அதிபதியாகிய, குருபகவான் நட்சத்திரத்திலமைகிறது.
ப் சுக ஸ்தானமாகிய நான்காம் வீட்டில், சூரியன், கேதுவுடன், சேர்ந்திருப்பது, கடுமையான நோய் ஏற்பட் டதைத் தெளிவாக்குகிறது.
ப் லக்னாதிபதியாகிய சந்திரன், நீசத்திலிருப்ப தால், சுவாச உறுப்பில், உயிர்க் கொல்லி நோய் ஏற்பட்டுள் ளதைக் குறிக்கிறது.
ப் பிர சன்ன காலத்து லக்னம் சோழி லக்னத்திற்கு ஆறிலமைந்து, செவ்வாயின் பார்வையைப் பெறுவதும் ஆரோக்கியத்தில் பின்னடைவைக் காட்டுகிறது.
ப் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் செவ்வாய் பன்னிரண்டிலிருப்பதால், நோய் குணமாக, நீண்ட நாளாகும்.
ப் புனர் பூசத்தின், விபத்துத் தாரையிலும், நைதனத் தாரையிலும், எந்த கிரகமும் அமையாததால், ஆயுளுக்கு ஆபதில்லை.
ப் ஆறாமதிபதியாகிய குருபகவான் ஒன்பதிலிருப்பதால், மருத்துவ சிகிச்சையால், நோய் நீங்கி சுகம் பெறலாம்.
பரிகாரம்
ப் திருவள்ளூர், வைத்திய வீர ராகவப் பெருமாளை அமாவாசையில் வழிபட்டால், நோய் குணமாகும்.
(தொடரும்)
செல்: 63819 58636