வாழ்க்கைப் பயணத்தில் விதியே வீதி யாகிறது. உயிருடன் சேர்ந்த உடலே, வாகனம்.

மனமே வாகன ஓட்டி. பாதை உள்ளவரை பயணம் தொடரும். விதியையும் சுயமுயற்சி யையும் இணைத்துப் பார்க்கும் அந்த வழி காட்டியே ஜோதிடம். ஆசையெனும் இச்சா சக்தியும் (சந்திரன்) அறிவொளியாகிய ஞான சக்தியும் (சூரியன்), ஆற்றலெனும் கிரியா சக்தியும் (லக்னம்) இணைந்ததே, திரிபுரகமாகிய வாழ்க்கை. இதுவே, திரிசூலத்தின் தத்துவ மென்பது, கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.

திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல், மருண்ட பார்வையுடன், ஒரு இளைஞர், பிரசன்னம் பார்க்க வந்தார். தான், கல்வியில் தேர்ச்சிபெற்று, கடின முயற்சி எடுத்தாலும், தொழிலில் வெற்றி காணமுடியவில்லை என்ற வருத்ததைப் பகிர்ந்து கொண்டார். அறிய முடியாத தையும் அறியும் ஆற்றல் கொண்ட பிரசன்னத்தில், பதில் தேடி வந்திருந்தார். திரிக்கனிக் காடு பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் தொடங்கினார்,

Advertisment

kj

கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்தின் திரி கோணத்தில், சூரியனும், சந்திரனும் இருந்து பல யோகங்களைக் காட்டி னாலும், லக்னாதிபதி பலவீனப்பட்டுப் போனதால், யோகம் பங்கமானது. விதியே சதி செய்தது. திரிசக்தி வழிபாடே, விதியை மாற்றும் சக்திபடைத்தது என்ற உண்மை உணர்த்தப் பட்டது. சென்னைக்கு அருகிலுள்ள மேலூரில் அருள்புரியும், திருவுடையம்மனையும், திருவொற்றி யூரில் குடிகொண்டிருக்கும், வடிவுடையம்மனையும், திருமுல்லை வாயிலில், ஆட்சிபுரியும் கொடியிடையம்மனையும், பௌர்ணமியில் தரிசித்தால், எடுக்கும் முயற்சி வெற்றிதரும் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலித்தது. இருண்ட வாழ்க்கையில் விடிவெள்ளி பூத்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தைப் பலவித கோணங்களில் ஆராயும்போது, உதய லக்னம், ஆரூட லக்னம், இந்து லக்னம் போன்றவற்றைப் பயன்படுத்துவது வழக்கம்.

அதேபோல், காரகாம்சத்தையும், கொண்டு ஜாதகத்தை ஆராய் வதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. நிழல் கிரகங்களைத் தவிர்த்து, மீதமுள்ள ஏழு கிரகங்களில், எந்த கிரகம் ஒரு ராசியில் அதிக பாகைப் பெற்றுள் ளதோ, அந்த கிரகமே ஆத்ம காரகன். ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு சமமான அதிகாரம் பெற்றவராகவே, ஆத்ம காரகன் கருதப்படுகிறார். நவாம்சத்தில் ஆத்ம காரகன் அமருமிடமே காரகாம்சமாகும். காரகாம்சத்தில் சூரியனிருக்க, அரசு ஆதரவு கிடைக்கும். சந்தி னிருக்க, செல்வம் நிறைந்திருக் கும். சுக்கிரனிருக்க, பெண்களால் நன்மை வந்துசேரும். செவ்வாயி ருக்க, மருத்துவத்தில் நிபுனரா வார். புதனிருக்க கல்வியில் சிறந்து விளங்குவார். குரு இருக்க ஆன் மிகத்தில் ஆர்வம் அதிகமாகும். சனியிருந்தால் உழைப்பால் உயர்வு பெறுவார். காரகாம்சத்தின் திரி கோணத்திலமையும் கிரகங் களும் தங்கள் தசா-புக்திகளில் பெரிய மாற்றங்களை உண்டாக்கு மென்பதே, கேரள ஜோதிடர் களின் கருத்து.

நஷ்ட ஈடு கிடைக்குமா?

கேள்வி: நான் ஒரு தனியார் நிறுவனத்தில் இருபது ஆண்டு களாகப் பணி புரிந்துவருகிறேன். தகுந்த காரணமில்லாமல் என்னை பணிநீக்கம் செய்து விட்டார்கள். இது தொடர்பாக வழக்கு தொடுத் துள்ளேன். நஷ்ட ஈடு கிடைக்குமா?

(எண்- 54; சித்திரை- 2; நட்சத்திராதிபதி- செவ்வாய்; ராசியாதிபதி- புதன்).

* சோழி லக்னத்திற்கு ஆறாமதிபதி ஐந்திலிருப்பது உத்தியோகத்தில் ஏற்பட்ட பின்னடைவைக் காட்டுகிறது.

* லக்னாதி பதியும், பத்தாமதி பதியுமாகிய புதன் நீசம் புகுந்தது, அதிகார இழப் பைத் தெரிவிக்கிறது.

* பதினொன்றாமதிபதி, எட்டிலிருப்பது, தொழில் சரிவைக் குறிக்கிறது.

* சோழி லக்னத்திற்கு ஒன்பதிலும், பிரசன்ன லக்னத் திற்கு பன்னிரண்டிலும் ராகு இருப்பதால், பிரச்சினைக் குரிய அலுவலகம், பன்னாட்டு நிறுவனமாக இருக்கும்.

* குருபகவான் மேஷத்திலும், சனிபகவான் கும்பத்திலும் சஞ்சரிக்கும் காலத்தில் நஷ்ட ஈடு கிடைக்கும்.

பரிகாரம்

அச்சிறுபாக்கத்தில் அருள்பாலிக்கும், ஆட்சீஸ்வரர் திருக் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

(தொடரும்)