ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தில் மூடி வைத்ததுபோல், ஒரு ஜாதகத்தில் எவ்வளவு யோகங்கள் இருந்தாலும், அசுப கிரக அமைப்புகளால், யோக பங்கம் உண்டாகிறது. கடல் பெரிதானாலும் உண்ணும் நீராகாது. நிழல் தராத இலவம் மரம்போல், பெரும்பாலானவர்களுக்கு, வாய்ப்பிருந்தும் வளம்பெற முடிவதில்லை என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.
விரக்தியும், வெருண்ட பார்வையுமாக பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு இளைஞர். தான், கலையாத கல்வியும் குறையாத செல்வமும், பெற்றிருந்தாலும், புகழ் பெறுவதற்கான நல்வாய்ப்பு அமையாததன் காரணத்தை அறியவே, பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். தேவலக்கோடு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்னன் நம்ப
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தில் மூடி வைத்ததுபோல், ஒரு ஜாதகத்தில் எவ்வளவு யோகங்கள் இருந்தாலும், அசுப கிரக அமைப்புகளால், யோக பங்கம் உண்டாகிறது. கடல் பெரிதானாலும் உண்ணும் நீராகாது. நிழல் தராத இலவம் மரம்போல், பெரும்பாலானவர்களுக்கு, வாய்ப்பிருந்தும் வளம்பெற முடிவதில்லை என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.
விரக்தியும், வெருண்ட பார்வையுமாக பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு இளைஞர். தான், கலையாத கல்வியும் குறையாத செல்வமும், பெற்றிருந்தாலும், புகழ் பெறுவதற்கான நல்வாய்ப்பு அமையாததன் காரணத்தை அறியவே, பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். தேவலக்கோடு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்னன் நம்பூதிரி.
சோழி லக்னம், பூச நட்சத்திரத்தில், கடக ராசியிலமைந்தது. சனிபகவான் விருச்சிக ராசியில், ரிஷப சந்திரனுக்கு, சமசப்தமத்தில் இருந்தது. அஷ்ட மாதிபதி, ஐந்தில் அமர்வது, வாழ்க்கை யில் ஏற்படும் தடையைக் காட்டியது. பொதுவாக, லக்னத்தின் திரிகோணத்திலோ, ராசிக்கு கேந்திரத் திலோ, அசுப கிரகங்கள் அமர்ந்தால், வெற்றிபெற அதிகம் போராட வேண்டியிருக்கும்.
ஸ்ரீ குறுங்காலீஸ்வரரை, பிரதோஷ காலத்தில் வழிபட்டால், வெற்றிபெறலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால், தடைநீங்கி, வெற்றி பிரகாசித்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
பதினாறு என்ற எண் மிகவும் உயர்வு பொருந்தியது. "ஷோடச கலா பூர்ணம்'' என்பது, அமாவாசையில் ஆரம்பித்து பௌர்ணமிவரை பதினாறு கலைகள். பதினாறாவது கலையை அடைகிறபோதே சந்திரன் பூரண சந்திரனாகிறது. ஒருவர் வாழ்க்கையில் பதினாறுவிதமான செல்வங்களையும் பெறுகிறார்களா என்பதை ஷோடசாம்சத்தைக்கொண்டு ஆராய்வதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு..
ஷோடசாம்சம் என்பது ஒரு ராசியை பதினாறு சம பிரிவாக- (பாகை -1 கலை-52 விகலை -30) பிரிப்பது. சந்தோஷம், துக்கம், வாகனம் போன்றவற்றினை இதன்மூலம் அறியமுடியும். ஷோடசாம்சத்தில் அமையும், ராகு- கேதுவின் தொடர்பைக் கருத்தில்கொண்டே, ஜாதகரின் வாழ்க்கை சுகங்களைக் கணக்கிட முடியுமென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.
விடுதலை கிடைக்குமா?
கேள்வி: நான் ஒரு வங்கியில் பணி புரிகிறேன். என்னுடைய உதவியாளர் செய்த தவறால், வழக்கில் சிக்கிக்கொண்டுவிட்டேன். விடுதலை கிடைக்குமா?
(எண்- 14; ரோகினி- 2; நட்சத்திராதிபதி- சந்திரன், ராசியாதிபதி- சுக்கிரன்.)
* சோழி லக்னத்தின் நட்சத்திர அதிபதியும், ராகுவும் கூடுவதால், மன அமைதியின்மையை அறியமுடிகிறது.
* ஆறாமிடத்தில் நான்கு கிரகங்கள் கூடியிருப்பதால், கிரக யுத்தம் உண்டாவதால், அலுவலகம் சார்ந்த பிரச்சினையால், அவதூறு உண்டாகிவிட்டது. அது நீதிமன்றத்தைக் குறிக்கும் துலா ராசியாகவும் அமைவதால், வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ளது.
* சோழி லக்னத்திற்கு ஆறாமிடத்தில் லக்னாதிபதியுடன் பாவ கிரக சேர்க்கை இருக்க பந்தன யோகம் ஏற்பட்டுள்ளது. இது சிறைப்படும் யோகமாகும். இதுபோன்ற அமைப்பு, ஏதேனும் ஒரு வழக்கில் சிக்கி சிறைச்சாலை சென்று, மீண்டும் ஜாமினில் வரும் நிலையைக் காட்டுகிறது.
* சனிபகவான், ஆறாமிடத்தை பார்வை யிடுவது, சாதகமான அமைப் பில்லை.
* ஆறாமிடமாகிய துலா ராசியின் பாதக ஸ்தானாதிபதியும், லக்னாதிபதியுடன் இணைவதால் அரசாங்கத்தின் பகையால் தொல்லையுண்டாகும்.
* குரு மேஷத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
பரிகாரம்
* திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள முனுகப்பட்டு என்ற திருத் தலத்தில் அருள்பாலிக்கும், முக்கூட்டு சிவபெருமானை வழிபட்டால், விரைவில் நீதி கிடைக்கும்; விடுதலைப் பெறலாம்.
திருநள்ளாறு சென்று சனிபகவானை வழிபட்டால், தோஷம் நீங்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636