கேரள ஜோதிட ரகசியங்கள்! (124)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-124

வ்வொரு தாவரமும் உணவை, இலை, தண்டு, பூ, காய், கிழங்கு என வெவ்வேறு இடங்களில் சேமித்து வைப்பதுபோல், ஒரு ஜாதகரின் பூர்வ ஜென்ம கர்மாவின் பலன் ஒருசில பாவங்களை மட்டுமே சேர்ந்து, அதிக விளைவை ஏற்படுத்தும். ஒரு ஜாதகரின் கல்வி, தொழில், புகழ் போன்றவற்றை குறிக்கும் எல்லா பாவமுமே வாழ்க்கையில்,பெரிய தாக்கத்தைத் தருவதில்லை. பரம்பரையை சுட்டிக்காட்டும் லக்ன பாவம், ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவம் மூன்றும், முறையே சஞ்சித, பிராரப்த, ஆகாமிய கர்மாக்களை விளக்கும், இந்தப் பிறவியில் ஜாதகர் அனுபவிக்கவேண்டிய கர்மாவின் பங்காகிய, பிராரப்த கர்மாவை ஐந்தாம் பாவத்தால் மட்டுமே அறியமுடியும். ஐந்தாம் பாவத்துடன் நெருங்கிய தொடர்பிலுள்ள பாவங் களே, ஜாதகன் இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்மாவின் பலனைக்

வ்வொரு தாவரமும் உணவை, இலை, தண்டு, பூ, காய், கிழங்கு என வெவ்வேறு இடங்களில் சேமித்து வைப்பதுபோல், ஒரு ஜாதகரின் பூர்வ ஜென்ம கர்மாவின் பலன் ஒருசில பாவங்களை மட்டுமே சேர்ந்து, அதிக விளைவை ஏற்படுத்தும். ஒரு ஜாதகரின் கல்வி, தொழில், புகழ் போன்றவற்றை குறிக்கும் எல்லா பாவமுமே வாழ்க்கையில்,பெரிய தாக்கத்தைத் தருவதில்லை. பரம்பரையை சுட்டிக்காட்டும் லக்ன பாவம், ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவம் மூன்றும், முறையே சஞ்சித, பிராரப்த, ஆகாமிய கர்மாக்களை விளக்கும், இந்தப் பிறவியில் ஜாதகர் அனுபவிக்கவேண்டிய கர்மாவின் பங்காகிய, பிராரப்த கர்மாவை ஐந்தாம் பாவத்தால் மட்டுமே அறியமுடியும். ஐந்தாம் பாவத்துடன் நெருங்கிய தொடர்பிலுள்ள பாவங் களே, ஜாதகன் இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்மாவின் பலனைக் காட்டும் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.

சோகத்தில் தோய்ந்து, கவலையால் வரண்ட முகத்துடன், பிரசன்னம் பார்க்கவந்தார் ஒரு முதியவர். தன் மகனால் தொல்லை உண்டாவதாகவும், தன் பெயருக்கு களங்கம் வருவதாகவும் தெரிவித்தார். பிரசன்னத்தால், விடிவுகாலம் பிறக்குமா என்பதே, அவர் கேள்வி. வெளியெண்ணூர் பகவதியை வணங்கி, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னத்திற்கு, ஒன்பதில் சனி, கேதுவுடன் இருந்ததால் தந்தை- மகன் ஒற்றுமையில்லை. ஒன்பதாம் அதிபதி ஆறில் இருந்தால் முன்னோர் சொத்தினால் கடன், புகழுக்கு பங்கம், முன்னேற்ற குறைவு போன்ற காரணங்களால், தந்தை- மகன் கருத்து வேறுபாடு வந்தது உறுதியானது. ஐந்தாவது படைவீடாகத் திகழும் திருத்தணிகை சென்று முருகப்பெருமானை வழிபட்டால் தந்தை- மகன் கருத்து வேறுபாடு நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலித்தது. குடும்ப சண்டை ஓய்ந்தது.

KJ

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒருவரின் ஜாதகத்தில், லக்னம், ராசியைக்கொண்டு, பலனறிவது, முழுமை யானதல்ல. இந்த உலகம் அவரை எவ்வாறு அடையாளப்படுத்துகிறது என்பதை ஆரூட லக்னத்தின்மூலமே அறியமுடியும். ஆரூட லக்னத்தைக்கொண்டு நுட்பமான பலன்களையறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஆரூட லக்னம் என்பது, லக்னத்திலிருந்து லக்னாதிபதி இருக்கும் வீடுவரை எண்ணிவரும் தொகையை, லக்னாதிபதி முதல் எண்ணக் கிடைக்கும் ராசியே ஆரூட லக்னம் எனப்படும். உதாரணமாக, கடக லக்னம், லக்னாதிபதி சந்திரன் எட்டில் கும்பத்திலிருப்பதாகக் கொண்டால், கும்பம் முதல் எட்டு எண்ணக் கிடைக்கும் கன்னிதான் ஆரூட லக்னமாகும். ஆரூட லக்னத்தில் சுப கிரகங்களோ அல்லது சுப கிரகங்களின் பார்வைகளோ இருந்தால் ஜாதகர் வாழ்க்கையில் சுகங்கள் அதிகமாக இருக்கும். துன்பங்கள் வந்தாலும் விரைவில் அகன்றுவிடும்; ஜாதகர் உறுதியான மனநிலையில் இருப்பார் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

புதிய தொழில் துவங்கலாமா?

கேள்வி: நான் சுயதொழில் துவங்கலாமா? எந்த தொழிலில் வெற்றி கிடைக்கும்?

-விஷ்ணு பிரியா, சென்னை.

(எண்- 45; உத்திரம்- 1; நட்சத்திராதிபதி- சூரியன்; ராசியாதிபதி- சூரியன்.)

* சோழி லக்னத்தின் நட்சத்திராதிபதியும், நாளின் ஆளும் கிரகமாகவும் அமையும் சூரியன் உச்சத்திலிருப்பதால், வெற்றி யடைவதில் எந்த தடையுமில்லை.

* பிரசன்ன காலத்து லக்னமும், சிம்மத்தையே குறிப்பதால், சூரியபகவானின் பரிபூரண அருள் இருப்பதை அறியமுடிகிறது. இதனால், தொழிலுக்கு, அரசு ஆதரவும், வங்கிகளின் கடன் உதவியும் கிடைக்கும்.

* பத்தாமிடம் ரிஷப ராசியிலமைந்து, சந்திரன், ரோகிணி நட்சத்திரத்தில் உச்சம் பெற்றிருப்பதால், ஆடை வடிவமைத்தல், அழகு நிலையம், விளம்பரம் போன்ற கலை தொடர்பான தொழில்களே பொருத்த மானவை. சுக்கிரனும், பத்தாமிடத்தில் ஆட்சிபெறுவது கூடுதல் சிறப்பாகும்.

* சனிபகவான், பிரசன்ன லக்னம், சோழி லக்னம், பத்தாமிடத்தையும் பார்வையிடுவது, சாதகமான அமைப்பில்லை. தடையும், தாமதமும் உண்டாகும்.

* சூரியன், உச்சத்திலிருந்தாலும், சோழி லக்னத்திற்கு, பாதக ஸ்தானமாகிறது.

* பரிகாரம் செய்தால், தொழிலில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்

திருவலஞ்சுழி சென்று, கடல் நுரை யால் செய்யப்பட்ட, வெள்ளைப் பிள்ளையாரை வணங்கினால், தொழிலில் தடை நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala020623
இதையும் படியுங்கள்
Subscribe