சில மரங்கள் மட்டுமே, வீழ்ந்த பின்னும், வீட்டைக் காவல் காக்கும் வாயிற் கதவுகளாக, தாங்கிப் பிடிக்கும் உத்திரங் களாக வாழ்கின்றன. மற்றவை விறகாக எரிந்து போகின்றன. அவித்த நெல் முளைப்ப தில்லை. சிலர் மட்டுமே, விதைக்கப்படுகிறார் கள். புதைக்கப்படுவதில்லை. பூதவுடல் அழிந்தாலும், புகழுடலால் வாழ்பவர் சிலரே. மரணத்தால் மாய்வதும், இறவாத புகழ் பெறுவதும், விதியின் செயல் என்பதே கிருஷ்ணன் நம்பூத்ரியின், அனுபவப் பாடம்.
வயதில் இளமையையும், தோற்றத்தில் முதுமையையும் தாங்கி, பிரசன்னம் பார்க்க வந்தார் ஒரு வாலிபர். தான், ஒரு ஆராய்ச்சியாளர் என்றும், எவ்வளவு முயற்சிசெய்தும், தன்னால், புகழ்பெற முடியவில்லை என்றும் சொல்லி வருந்தினார். பிரசன்னத்தின்மூலம், அதன் காரணத்தையறி
சில மரங்கள் மட்டுமே, வீழ்ந்த பின்னும், வீட்டைக் காவல் காக்கும் வாயிற் கதவுகளாக, தாங்கிப் பிடிக்கும் உத்திரங் களாக வாழ்கின்றன. மற்றவை விறகாக எரிந்து போகின்றன. அவித்த நெல் முளைப்ப தில்லை. சிலர் மட்டுமே, விதைக்கப்படுகிறார் கள். புதைக்கப்படுவதில்லை. பூதவுடல் அழிந்தாலும், புகழுடலால் வாழ்பவர் சிலரே. மரணத்தால் மாய்வதும், இறவாத புகழ் பெறுவதும், விதியின் செயல் என்பதே கிருஷ்ணன் நம்பூத்ரியின், அனுபவப் பாடம்.
வயதில் இளமையையும், தோற்றத்தில் முதுமையையும் தாங்கி, பிரசன்னம் பார்க்க வந்தார் ஒரு வாலிபர். தான், ஒரு ஆராய்ச்சியாளர் என்றும், எவ்வளவு முயற்சிசெய்தும், தன்னால், புகழ்பெற முடியவில்லை என்றும் சொல்லி வருந்தினார். பிரசன்னத்தின்மூலம், அதன் காரணத்தையறியவே வந்திருந்தார். உளியன்னூர் தேவியை வணங்கி, பிரசன்னத் தைத் துவக்கினார், கிருஷ்ணன் நம்பூத்ரி.
தொழில் மற்றும் பொது அங்கீகாரத்தில் வெற்றியைக் குறிக்கும் பத்தாம் வீடு, வலுப் பெற்றிருந்தது. படைப்பாற்றலை சுட்டிக் காட்டும், ஐந்தாம் வீட்டிலும் குறையில்லை. பத்தாமிடத்தில், சூரியன் வலுப்பெற்றிருந்தாலும், சனிபகவானின் பார்வையில், புகழ் பெறுவதில், தடையும், தாமதமும் இருப்பது தெளிவானது.
அமாவாசையில், ஐவர் பாடி (அய்யா வாடி) சென்று, சிறப்பு ஆராதனை செய்தால், வெற்றி உண்டாகுமென்ற பரிகாரம் சொல்லப் பட்டது. பஞ்ச பாண்டவருக்கு, வெற்றியைத் தந்த பிரத்தியங்கரா தேவியின் அருளால், தடையும், தாமதமும் நீங்கி, முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு ஒருவரின் நோய்க்குறி அறியும் மருத்துவ ஜோதிடத் தில், சூரியனை மையமாகக் கொண்டு, பலனறிவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
சூரியனே, ஆரோக்கிய காரகனாக விளங்குகிறார்.
சூரியன் நான்கு, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களுக்கு உப நட்சத்திர மாக வரக்கூடாது. ஒற்றைப் பாவங்களுக்கு உப நட்சத் திரமாய் வருவது நல்லது. சூரியன் நின்ற நட்சத்திரம் (அல்லது) உப நட்சத்திரம் நான்கு, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களுடன் தொடர்புகொள்ளக்கூடாது. நான்கு, ஆறு, மட்டும் வந்தால் பெரிய பாதிப்பில்லை. ஆனால் ஆறு, எட்டு, ஆறு, பன்னிரண்டு, நான்கு, எட்டு, நான்கு, பன்னிரண்டாம் பாவத் தொடர்பு பிரச்சினை தரும். அதில் ஆறு, எட்டு கடுமையான பிரச்சினை தரும். ஆறு, எட்டு பாவங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நோய்களையும் மருந்திற்குக் கட்டுப்படாத நோய்களையும் அறுவை சிகிச்சையையும் காட்டும். நான்கு, எட்டு பாவங்கள் உடலில் உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளால் வரும் நோய்களையும், ஆறு, பன்னிரண்டு பாவங்கள் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கிப் பெறும் சிகிச்சைகளையும், நான்கு, பன்னிரண்டாம் பாவங்கள், உறுப்பு மாற்று சிகிச்சையையும் குறிக்குமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
கல்வியில் தடை நீங்குமா?
கேள்வி: என் குடும்ப சூழ்நிலையால், கல்வியில் தடை ஏற்பட்டுவிட்டது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்குமா? பரிகாரம் உண்டா?
-உதயகுமார், கரூர்.
(எண்- 86, திருவோணம்- 2, நட்சத் திராதிபதி- சந்திரன், ராசியாதிபதி -சனி)
* சோழி லக்னத்தின் நான்காம் வீட்டில், கிரக யுத்தம் ஏற்பட்டிருப்பதால், கல்வியில், தடையும், குழப்பமும் உள்ளதை அறிய முடிகிறது.
* சனிபகவானின் மூன்றாம் பார்வையும், கல்வி ஸ்தானமாகிய, நான்காம் வீட்டில் பதிவதால் கடுமையான போராட்டத்திற்குப் பின்பே வெற்றியடைய முடியும்.
* இரண்டில் சந்திரன் இருப்பதும், கல்விக்கு சாதகமான அமைப்பில்லை..
* கல்விக்கு அதிபதியாகிய புதன் பகவனுடன், ராகு இருப்பதும், கல்வியில் தடை உண்டாக்கும்.
* பரிகாரம் செய்தால், கல்வியில் தடை நீங்கும்..
பரிகாரம்
புதன்கிழமை, திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால், கல்வியில் ஏற்பட்ட தடை விலகும்.
செட்டிபுண்ணியம், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவ மூர்த்தியை வணங்கினால், தடைபட்ட கல்வியில் தோஷம் நீங்கி, தொடர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறலாம்.
(தொடரும்)
செல்: 63819 58636