கேரள ஜோதிட ரகசியங்கள்! (122)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-122

ருவரின் நிழல் அவரையே, பின்தொடர்வதுபோல், பசுக் கூட்டத்தில் கன்றானது தன் தாய்ப்பசுவைத் தவறாமல் சென்றடைவதுபோல், ஒருவன் செய்த நல்வினையும், தீவினையும், உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்றடைகிறது. பிரசன்னம் பார்க்க வந்தவர், தான் கல்வித் துறையில், அரசு அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்றதாகத் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கண் பார்வை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருந்தினார். மருத்தவத்தாலும் தன் பார்வையை மீட்டுத்தர முடிய வில்லை என்ற ஏக்கத்தை வெளிப் படுத்தினார். பிரசன்ன ஆரூடத்தின் மூலம் பரிகாரம் தேடி வந்திருந்தார். கீழக்கனிக்காடு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார், கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னத்தின் இரண்டாம் வீட்ட

ருவரின் நிழல் அவரையே, பின்தொடர்வதுபோல், பசுக் கூட்டத்தில் கன்றானது தன் தாய்ப்பசுவைத் தவறாமல் சென்றடைவதுபோல், ஒருவன் செய்த நல்வினையும், தீவினையும், உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்றடைகிறது. பிரசன்னம் பார்க்க வந்தவர், தான் கல்வித் துறையில், அரசு அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்றதாகத் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கண் பார்வை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருந்தினார். மருத்தவத்தாலும் தன் பார்வையை மீட்டுத்தர முடிய வில்லை என்ற ஏக்கத்தை வெளிப் படுத்தினார். பிரசன்ன ஆரூடத்தின் மூலம் பரிகாரம் தேடி வந்திருந்தார். கீழக்கனிக்காடு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார், கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னத்தின் இரண்டாம் வீட்டின் அதிபதிக்கு ஆறாமிடமாகிய மறைவு ஸ்தான தொடர்பு ஏற்பட்டதால், கண்களில் குறைபாடு ஏற்பட்டுள்ளதைக் காட்டியது. கண்களுக்குக் காரகமான கிரகங்களாகிய, சூரியன், சந்திரன், சுக்கிரனின் நிலையும் கெட்டிருந்ததால், நோயின் தீவிரம் புரிந்தது. பத்தாமிடம், ஆகாமிய கர்மாவால் வந்த தீவினையைக் காட்டியது. கல்வி கண் போன்றது. கல்வித் துறையில் செய்த தவறால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதைக் கிருஷ்ணன் நம்பூதிரி புரிந்துகொண்டார். காளஹஸ்தி திருக்கோவிலுக்குச் சென்று, கண்ணப்பருக்கு, கண் பார்வை தந்த சிவலிங்கத்தை வழிபட்டால் நோய் நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத் தால், முக்கண்ணன் அருளால், கண்ணொளி கிடைத்தது.

ff

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒருவருக்கு ஜனனகால விவரங்கள் தெரியாமலிருந்தால் கணிக்கப்படும் நஷ்ட ஜாதகத்திலும், ஒரு குறிப்பட்ட கேள்விக்கு மட்டும் விடையறிய விரும்பினாலும், பிரசன்ன ஆரூடத்தின்மூலம் பலன் காணலாம். பிரசன்ன ஆரூடத்தைக்கொண்டு, பிரச்சினைகளைத் தீர்ப்பதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. கேள்வி கேட்கப்படும், நேரத்தில், பிரசன்ன ஆரூடம் கணிக்குமிடத்தில் உதயமாகும் லக்னமே பிரதானமானது. உதாரணமாக- ஒரு காரியம் நிறைவேறுமா என்று கேட்கப்படும் கேள்விக்கு, பிரசன்ன காலத்தில் உதயமாகும் லக்னத்திற்கு பத்தாம் பாவத்தில் வளர்மதியும் (வளர்பிறைச் சந்திரன்) லக்னாதிபதியும் கூடியிருந்து, குரு அல்லது யோகாதிபதிகளால் பார்க்கப் பட்டாலும், லக்னத்தில், லக்னாதிபதியும், பத்தாம் பாவாதிபதியும் கூடி நின்றாலும், காரியம் நிறைவேறும். லக்னாதிபதிக்கும், பத்தாம் பாவாதிக்கும் நேரடி தொடர்போ, பார்வையோ இல்லாமல் போனால், காரியம் நிறைவேறாது. கர்மஸ்தானம் எனப்படும் பத்தாம் பாவமும், பிரசன்ன லக்னமுமே, பலன்களை முடிவுசெய்யும். பிரசன்ன லக்னத்தின் அதிபதியும், பத்தாம் பாவாதிபதியும் எந்தெந்த பாவங்களுடன் தொடர்பில் உள்ளார்கள் என்பதை ஆராய்ந்தால், காரியம் நிறைவேறும் காலத்தையும், தன்மையையும் அறியலாமென்பதே, கேரள ஜோதிடர்களின் கருத்து.

dd

தத்து புத்திர யோகமுண்டா?

கேள்வி: எனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. குழந்தை பாக்கியமில்லை. மருத்துவப் பரிசோதனை யில், என் மனைவிக்கு குழந்தைப் பேறு உண்டாக வாய்ப்பில்லை என்பது தெரிந்தது. எங்களுக்கு, தத்து புத்திர யோகமுண்டா?

-(ராஜேந்திரன், சேலம்.

(எண்- 102, உத்திரட்டாதி- 2; நட்சத் திராதிபதி- சனி; ராசியாதிபதி- புதன்.)

* விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்திருப்பதால் புத்திர தடைக்கான காரணம் தெளி வானது.

* ஐந்தாமதிபதியும்- ராகு வும் சேர்ந்திருப்பதால் தத்து புத்திரயோகமுண்டு.

* பிரசன்ன லக்னத்தின் நட்சத்திர அதிபதியான, சனி பகவான், தத்து புத்திர ஸ்தான மாகிய, பதினொன்றாமிடத் தில் ஆட்சிபெறுவதும், தத்து புத்திர யோகத்தைத் தரும்.

* ஐந்தாமதிபதியாகிய சந்திரனும், புத்திர காரகனாகிய குருவும், சூரியனும், மீன ராசியில் இணையும் காலத்தில் தத்து புத்திரன் அமைவான்.

* பிரசன்ன, சோழி லக்னத்தில், குரு ஆட்சி யிலிருப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala190523
இதையும் படியுங்கள்
Subscribe