கேரள ஜோதிட ரகசியங்கள்! (121)

/idhalgal/balajothidam/kerala-astrology-secrets-121

ப்புக் காய்களை உண்ட குரங்கு, நீர்வேட்கையால், ஓடையை நோக்கி ஓடுதல்போல், சஞ்சித கர்மாவால் பாதிக்கப்பட்டவர் பரிகாரத்தால், நற்கதியடைவார். பாதையறியாதோர், துன்பக் குளத்தில் நீராடி, தூயவனா வார். காட்டுத் தீயினால் எரிந்த மரங் களின்வேர், மழைக் காலத்தில் துளிர்த் தெழுவதுபோல், கர்மாவின் வேரைக் களையாதவரை, பரிகாரங்கள் பலனளிப்பதில்லை. கர்மாவின், வேரும், விழுதுகளும், மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப் போடுவதை எண்ணி, பெருமுச்சு விட்டார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத் தில் விரக்தியும், கண்களில் வெறுமை யும், குடிகொண்டிருந்தன. தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும், சிறு வயதிலேயே இறந்துவிட்டதாக வருந்தினார். இனி பிறக்கும் குழந்தை யாவது, நீண்ட ஆயுளுடன் இருக்குமா என்பதை அற

ப்புக் காய்களை உண்ட குரங்கு, நீர்வேட்கையால், ஓடையை நோக்கி ஓடுதல்போல், சஞ்சித கர்மாவால் பாதிக்கப்பட்டவர் பரிகாரத்தால், நற்கதியடைவார். பாதையறியாதோர், துன்பக் குளத்தில் நீராடி, தூயவனா வார். காட்டுத் தீயினால் எரிந்த மரங் களின்வேர், மழைக் காலத்தில் துளிர்த் தெழுவதுபோல், கர்மாவின் வேரைக் களையாதவரை, பரிகாரங்கள் பலனளிப்பதில்லை. கர்மாவின், வேரும், விழுதுகளும், மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப் போடுவதை எண்ணி, பெருமுச்சு விட்டார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத் தில் விரக்தியும், கண்களில் வெறுமை யும், குடிகொண்டிருந்தன. தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும், சிறு வயதிலேயே இறந்துவிட்டதாக வருந்தினார். இனி பிறக்கும் குழந்தை யாவது, நீண்ட ஆயுளுடன் இருக்குமா என்பதை அறியவே, பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். சாமுண்டிக் காவு பகவதி யைத் தொழுது, பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

ff

சோழி லக்னம், பூரம் இரண்டாம் பாதத்தில் அமைந்தது. ஐந்தாம் அதிபதி யும், புத்திர காரகனுமாகிய குரு நீசத்தி லிருந்து, சனிபகவானின் பார்வையும் பெற்றதால், புத்திர தோஷம் உறுதி யானது. ஒன்பதாம் பாவம் அமைந்த திரேகாணம் பட்சி சாபத்தைக் காட்டி யது. பறவைக் கூடுகளை கலைத்தவர், பட்சி சாபத்தால் பாதிக்கப்படுவார். புத்திர சோகம் உண்டாகுமென்பதே உண்மை. முன்ஜென்ம கர்மாவைக் கண்டறிந்து, பரிகாரம் செய்தால் மட்டுமே, பலண் உண்டாகுமென் பதைத் தெளிவு படுத்தப்பட்டது. ஆடி மாதம், சுக்ல பஞ்சமி திதியில், நாச்சியார் கோவிலுள்ள, கல் கருடனை தரிசித்து, பூஜை செய்தால், புத்திர சாபம் நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பட்சி ராஜனின் அருளால், புத்திர பாக்கியத்திலிருந்த தடை நீங்கியது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒருவர், சுமந்துவரும் சஞ்சித கர்மாவை அனுபவிக் கவே, இவ்வுலகில் பிறக்கிறார். ஜனன ஜாதகத்தில் அஷ்டவர்கக் கணிதம் செய்து, ஒருவரின் பூர்வ ஜென்ம கர்மப் பலனையறியலாம். கர்மப் பலனை யறிந்து, பரிகாரம் செய்வதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. எட்டாம் பாவம் அமையும் ராசியின், அசுப வர்க்கத்து பிரதிகூல ரேகைகளின் கூட்டுத் தொகையை, முற்பிறவியின், தீவினைப் பலன் களாக வும், ஒன்பதாம் பாவம் அமையும் ராசியின், சுப வர்க்கத்து அனுகூல பிந்துக்களின் கூட்டுத் தொகையை, முற்பிறவியின், நல்வினைப் பலன்களாக வும் கணக்கிடப்படும். ஒரு குறிப்பிட்ட கிரகம், அந்தந்த ராசிகளுக்குத் தரும் சுப மற்றும் அசுப வர்க்க பலன்களை தனியாக கணக்கிட்டு வரும் பின்னாஷ்ட வர்க்கத்தின் பரல்களைக்கொண்டு, முன்ஜென்ம வினைப்பயனின் காரணத்தைக் கிரக காரகத்தால் அறியலாம்.

உதாரணத்திற்கு, சூரியனின் சுப வர்க்கபப் பரல்கள், எட்டாமிடத்தில் அதிகமாகவும், ஒன்பதா மிடத்தில் குறைவாகவும் இருந்தால் பிதுர் சாபம் உள்ளதாக அறிய வேன்டுமென்பதே, கேரள ஜோதிடர் களின் கருத்து.

பதவி உயர்வு கிடைக்குமா? கேள்வி: நான், ஒரு தனியார் நிறுவணத்தில், பத்து ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறேன். இதுவரை, பதவி உயர்வு கிடைக்கவில்லை. பதவி உயர்வு கிடைக்குமா?

-துரைராஜன், மதுரை.

(எண்- 68, அனுஷம்- 4, நட்சத்திராதிபதி- சனி, ராசியாதிபதி- செவ்வாய்.

* சோழி லக்னத்தின், நட்சத்திர அதிபதி யாகிய சனிபகவான், பதவியைக் குறிக்கும், நான்காமிடத்தில் ஆட்சிபெற்றிருப்பது, வெற்றிக்கான அடையாளமாக அமைகிறது.

* பத்தாம் அதிபதியும், ஆட்சி, அதிகாரத்தை கொடுப்பவனுமாகிய, சூரியன் உச்சத்திலிருப்பதால், பதவி உயர்வு கிடைக்குமென்பதில் சந்தேகமில்லை..

* சனிபகவானின் பார்வை, ஆறு மற்றும் பத்தாம் பாவத்தில் பதிவதால், தடையும், காலதாமதமும் ஏற்பட்டுள்ளதைக் காட்டு கிறது.

* குருவின், ஐந்தாம் பார்வை, பத்தாமிடத்தில் பதிவதால், விரைவில் உங்கள் ஆசை நிறைவேறும்..

* பிரசன்ன லக்னம், சோழி லக்னத்திற்கு பத்தாமிடத்திலிருப்பதும், பதவி மாற்றத்தை உறுதிசெய்கிறது.

* ஆறாம் வீட்டோனாகிய செவ்வாய் எட்டாம் வீட்டில் மறைவதால், பழனியில், பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும்.

பரிகாரம்

* செவ்வாய்க்கிழமை பழனி முருகனை, இராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்தால், உயர் பதவியும், அதிகாரமான அந்தஸ்தும் கிடைக்கும்.

bala120523
இதையும் படியுங்கள்
Subscribe