இமை இறகுகளை முடியபின் கண் பறவை ஓய்வெடுக்க, கனவுப்பறவை மேலெழும்பும். காணும்வரை கனவே வாழ்க்கை, வாழ்ந்து முடித்தபின் வாழ்க்கையே கனவுதான். உறக்கமென்பது சிறிய மரணம். மரணமென்பது மீளாத உறக்கம். கனவு நாடகம், மனமெனும் அந்த அரங்கத்தில் நடக்கும் அந்தரங்கம். வருமுன் உரைக்கும், சொப்பன பிரசன்னத்தில் கனவுகளை ஆராய்வது புலனறிவைக் கடந்ததென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.
பிரசன்னம் பார்க்க வந்தவரின் கண்களில் கவலை பூத்திருந்தது. தன் கனவில் தான் இறந்துபோவதுபோல் காண்பதாகக் கூறி வருந்தினார். சூரக்கோடு பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னம் ஹஸ்தம் முதல் பாதத் தில் அமைந்தது. முக்கியப் பிரமுகர்களின் நட்பினைப் பெறும் வாய்ப்பை உனர்த்தியது. கனவு ஸ்தானமாகிய பன்னிரண்டாம் வீட்டதிபதி ஆறிலமர்ந்து, விபரீத ராஜ யோகத்தை உருவாக்கியது. இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வருமென்ற உண்மையை உறுதிசெய்தது. சீதாதேவிக்கு கணையாழி தந்து நல்லசேதி சொன்ன வாயு புத்திரனை (அனுமன்) வணங்கினால் நலம் பெறலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. கனவுப் பிரசன்னம் மெய்ப்பட்டது. காலம் களிப்பைத் தந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
சரமும் (இயக்கம்), அசரமும் (இயங்காமை) கூடியதே (அண்ட) சராசரம் என்பதாலும், சுவாசம் உள்ளவரை மட்டுமே உயிர் வாசம் செய்யுமென்பதாலும், பிரசன்ன ஆரூடத்தில் சரம் பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. பிரசன்னத்தில் சுவாச பரிசிலனையை ஒரு அங்கமாக கருதுவதே கேரள ஜோதிடத் தின் சிறப்பு. சர கர்த்தாவின் சுவாசம், சூரிய கலையாகிய வலதுபுறத்தில் அமையும் போது, வியாபாரம், வழக்காடு தல், புதிய முயற்சிகள் தொடர் பான கேள்விகள் கேட்கப் பட்டால் வெற்றி என்றறிய வேண்டும். இடதுபுறத்தில் அமையும்போது, பயணம், வீடு, வாகனம், புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குதல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டால் சாதகம் என்றறிய வேண்டும். சரம் பார்க் காமல், பிரசன்னத்தை அமைக்கக் கூடா தென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
சுய தொழில் தொடங்க வாய்ப்புள்ளதா?
கேள்வி: நான் பல ஆண்டுகளாக சுய தொழில் செய்ய முயற்சிசெய்து வருகிறேன். கூட்டுத்தொழில் செய்யலாமா? தொழிலில் வெற்றிபெற பரிகாரமுண்டா?
-வெங்கடேசன், திருச்சி.
(எண்- 54; சித்திரை- 3; நட்சத்திராதிபதி- செவ்வாய்; ராசியாதிபதி- புதன்.)
* சோழி லக்னத்தின் நட்சத்திர அதிபதி யாகிய செவ்வாய் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப் பது சுயதொழில் செய்யும் பாக்கியத்தைக் காட்டுகிறது.
* வியாபாரகாரகனாகிய புதன் உச்சம் பெற்றிருப்பதும் சாதகமான அமைப்பை உறுதிசெய்கிறது.
* பத்தாம் வீட்டு அதிபதியாகவும் அதிகாரம்பெற்ற புதன் சோழி லக்னத்திலிருப்பது, கூடுதல் சிறப்பாகும்.
* இரண்டாமதிபதியாகிய சுக்கிரன் பதினொன்றாம் வீட்டிலிருப்பதால் வியாபாரம் அபரிமிதமான லாபத்தைத் தரும்.
* எட்டில் ராகு இருப்பதால் வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால் இந்த அதிர்ஷ்டத்தின்மூலம் உங்களைவிட உங்கள் உடன் இருப்பவர்களுக்குதான் லாபம் அதிகமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் கூட்டுத்தொழிலில் ஈடுபடாமலிருப்பது நல்லது.
* புதன் பத்தாம் வீட்டு அதிபதியாகிய கல்வி ஸ்தானமாகிய கன்னி ராசியிலிருப்ப தால் மாணவர்களுக்கு தேவைப் படும் புத்தகம் விற்பது, அச்சுத் தொழில் போன்றவற்றில் ஈடுபட் டால் லாபம் அதிகமாகும்.
* பதினொன்றாம் அதிபதி யாகிய சந்திரன் பன்னிரண்டிலிருப்பது வியாபாரத்தில் சில வீண் விரயங் களைக் காட்டுகிறது. பரிகாரம் செய்தால் நலம்பெறலாம்.
பரிகாரம்
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரக்கூடிய அஷ்டமி திதியில் துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி குங்கும அர்ச்சனைசெய்து வழிபட்டுவந்தால் வியாபாரத்தில் வரும் பிரச்சினைகள் நீங்கும்.
வெள்ளிக்கிழமையன்று வியாபாரம் செய்யும் அலுவலகத்தில் ஸ்ரீ மகாலட்சுமி பூஜை செய்தால் செல்வம் பெருகும்.
பிரம்ம முகூர்த்த வேளையில் நெய்தீபத்தை உங்களுடைய வீட்டுப் பூஜையறையில் ஏற்றி வைத்துவிட்டு, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால் வியாபார விருத்தி உண்டாகும்.
(தொடரும்)