கேரள ஜோதிடத்தின் சிறப்பு
திருமணத்திற்கான பொருத்தம் பார்க்கும்போதே, மணமக்களின் வாழ்க்கை எவ்வாறு அமையுமென்பதை, வரும்முன் அறிவதே, கேரள ஜோதிடத்தின் சிறப்பு. லக்னாதிபதி, இரண்டாம் வீட்டதிபதி, ஏழாம் வீட்டோனும் வலிமையுடனிருந்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். பெண்களுக்கு பாக்கிய ஸ்தானமும் ஆண்களுக்கு லக்னமும் வலுத்திருக்கவேண்டும். திருமணப் பொருத்தம் பார்ப்பதில் "திரிம்சாம்சம்' போடுதல் முக்கியம். இதன்மூலம் வரப்போகும் பெண்ணின் குணத்தை அறியமுடியும். மணப்பெண்ணின் லக்னத்தைக் கணித்து எந்த திரிம்சாம்சத்தில் எவ்வகையான குணங்களை அப்பெண் கொண்டிருப்பாள் என்பதைக் கணிப்பார்கள். லக்னத்திற்கும் ஏழாம் வீட்டிற்கும், இருபுறத்திலும், பாவிகளமர்ந்து, பாபகர்த்தாரி யோகத்தை உண்டாக்கினால் மணவாழ்க்கைக் கெட்டுவிடுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
பாகப்பிரிவினை எப்போது நடக்கும்?
கேள்வி: என் தந்தை இறந்து, ஐந்து ஆண்டு களாகிவிட்டது. குடும்பத்தில் ஒற்றுமை யில்லாததால் எங்கள் சொத்தை அனுபவிக்க முடியாமலிருக்கிறோம். பாகப்பிரிவினை எப்போது நடக்கும்? அதற்குப் பரிகாரம் உண்டா?
-சசிதரன், வந்தவாசி.
(எண்- 23; திருவாதிரை- 3; நட்சத்திராதி பதி- ராகு; ராசியாதிபதி- புதன்.)
*சோழி லக்னத்தின் நட்சத்திராதிபதி யாகிய ராகு- கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரிப்பது குடும்பத்திலுள்ளக் குழப்பத் தைக் காட்டுகிறது.
* திருவாதிரை நட்சத்திரத்தில் சோழி லக்னம் அமைவது தகவல் தொடர்பில் கோளாறு என்பதை உறுதிசெய்கிறது. குடும்பத்தில் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ளாததால் ஏற்பட்ட மன வருத் தமே இந்த பிரச்சினைக்குக் காரணமாகும்.
*இரண்டாமதிபதியாகிய சந்திரன் பாதகத்திலமர்வது சொத்து வருமானத்தில் தடையைக் காட்டுகிறது.
* பாகப்பிரிவினை, சொத்து ஆவணங் களைக் குறிக்கும் கிரகமாகிய புதன் பாதகாதிபதின் நட்சத்திரத்திலிருப்பதால் சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகிறது.
*பதினொன்றாம் வீட்டில் ராகு சுக்கிரனுடன் இருப்பதால் மூத்த சகோதரியே பாகப்பிரிவினைக்குத் தடையாக உள்ளதாகத் தெரிகிறது. வெளியில் வரமுடியாத நிலை யைக் காட்டுகிறது.
*எட்டாமதிபதியாகிய சனி ஒன்பதிலிருப்பதால் தந்தைக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பகையால் விரக்தியான மனோநிலையில் உயில் எழுதாமல் இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கிறது.
*குருபகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ் சரிக்கும் காலத்தில் பரிகாரம் பலனளிக்கும்.
பரிகாரம்
*செவ்வாய்க்கிழமை காலையில், செவ்வாய் ஹோரையில் திருத்தணி முருகனை வழிபட்டால் குழப்பத்திலிருந்து விடுபடலாம்.
*வெள்ளிக்கிழமையன்று பெரியபாளை யம் பவானியம்மன் ஆலயத்துக்குச் சென்று மாவிளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமையுண்டாகும்.
*பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்தபின் ஒரு கைப்பிடி மண் எடுத்துவந்து வீட்டுப் பூஜையறையில் வைத்தால் பாகப்பிரிவினை பிரச்சினையில் லாமல் முடியும்.
(தொடரும்)
செல்: 63819 58636