சதயம் இரண்டாம் பாதம் சோழி லக்னமாக அமைந்தது. மூன்றாம் வீட்டதிபதி கடகத்தில் நீசமாகியிருந்தது. மூன்றில் ராகு அமர்ந்து சனி பகவானின் பார்வையைப் பெற்றது. பிரசன்னம் பார்க்க வந்தவர் கூறிய குறைபாடு உறுதியானது. சஷ்டியில் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடுவதாலும், பவழ மோதிரம் அணிவதாலும் இந்த நோய் நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால் பயம் விலகி, மனம் உறுதியானது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
பிரசன்ன ஜோதிடத்தில் சோழிப் பிரசன்னம், சர ஜோதிடம் என்று பல முறைகள் இருந்தாலும், தாம்பூலப் பிரசன்னமே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. பிரசன்னம் பார்க்க வருபவர் கொண்டுவரும் பூஜைப் பொருட்களைக் கொண்டு பிரசன்னம் பார்ப்பதே தாம்பூலப் பிரசன்னம். தாம்பூலத்தைக் கையில் கொடுக்காமல் நிலத்தில் வைப்பது தோஷமாகக் கருதப்படும். தாம்பூலத்தை பையுடன் கொடுப்பது பித்ரு தோஷத்தைக் குறிக்கும். களிப்பாக்கு இல்லாமல் கொடுப்பது தேவ கோபத்தைச் சுட்டிக்காட்டும். மலர்கள், சுக்கிரனின் வலிமையையும், முக்கனிகள் புதனின் ஆதிபத்திய பலத்தையும் தெரிவிக்கும்.
வெற்றிலை தெய்வாம்சம் பொருந்திய ஒரு இலை. வெற்றிலை மூன்று வகைப்படும். ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை, இரண்டுமற்ற தன்மையுடைய அலி வெற்றிலையும் உண்டு. பிரசன்னம் பார்க்க வருபவர் கொண்டுவரும் வெற்றிலையை வகைப்படுத்தி ஆண், பெண், அலி கிரகங்களின் ஆதிக்கத்தையறியலாம். வெற்றிலை பழுதடைந்திருந்தால் வெற்றியில்லை என்பது உறுதியாகும். தாம்பூலப் பிரசன்னத்தில், நிமித்தமும், சகுனமுமே பிரதானமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.
திருமணம் விரும்பிய பெண்ணுடன் நடக்குமா?
கேள்வி: என் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணை நான் நேசிக்கிறேன். திருமணம் விரும்பிய பெண்ணுடன் நடக்குமா?
-ரவிச்சந்திரன், மும்பை.
(எண்: 108; ரேவதி- 4; நட்சத்திராதிபதி: புதன்; ராசியாதிபதி- குரு.)
* சோழி லக்னத்தின் நட்சத்திராதிபதி யாகிய புதன், குருவின் வீடாகிய மீனத்தில் நீசமாவது, காரியத் தில் தடையைக் காட்டுகிறது.
* ஏழாம் வீட்டதிபதியும் காதலுக்கான கிரகமுமாகிய புதன் பாதகத்திலிருப்பதும் சாதகமில்லை.
* மூன்று, எட்டாமதிபதியாகிய சுக்கிரன் பன்னிரண்டிலிருப்பது, விரும்பும் பெண் ஏதோ மறைமுக எண்ணத்துடன் செயல்படுவதைத் தெளிவாக்குகிறது. விருப்பம் ஏமாற்றத்தைத் தரும்.
* களத்திர ஸ்தானத்தின் விரயாதிபதியாகிய சூரியன் சோழி லக்னத் திலிருப்பதால் திருமண ஆசை நிறைவேறுவது கடினமே.
* பன்னிரண்டில் குரு, சுக்கிரனுடன் கூடுவதால் திருமனம் செய்யாமல், சேர்ந்து வாழவே அந்தப் பெண் விரும்புவாள்.
* சோழி லக்னத்தின்மீது சனி பகவானின் மூன்றாம் பார்வை பதிவதும் விருப்பத்திற்கு எதிர்மறையான பலனையே தரும்.
* ஆறாமதிபதியாகிய சூரியன் ஏழாமதிபதியின் சாரத்திலிருப்பதால் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்தால் மணமுறிவு உண்டாகும்.
(தொடரும்)
செல்: 63819 58636