மண்குதிரை ஓடாது. மன குதிரை நில்லாது. மனமெனும் குதிரையைக் கட்டுப்படுத்துவதே அமைதியான வாழ்க் கைக்கு வழியாகும். மனோகாரகனாகிய சந்திரன் பலமிழந்த நிலையில், விருச்சிகத்தில் அமையப் பெற்றிருக்கும் ஜாதருக்கு தீய பழக்க- வழக்கங்கள் உண்டாகுமென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.
சித்திரப்பாவைபோல் பிரசன்னம் பார்க்கவந்த பெண்ணின் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. தன் கணவர் கூடாநட்பினால் தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டுவிட்டதாகவும், அதனால் குடும்பத்தின் அமைதி பறிபோனதாகவும் புலம்பினாள். தொழுவனூர் பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னத்திற்கு ஆறில் துலா ராசியில் செவ்வாய், சூரியனோடு இணைந் திருந்தது. சூரியன் நீசமடைந்து புதனும் சேர்ந்திருந்ததால் அந்த ஜாதகர் தீய பழக்கங்களுக்கும் போதைப் பழக்கங்களுக் கும் அடிமையாகிவிட்டார் என்பது புரிந்தது. சந்திரன், ராகுவுடன்கூடி மன அமைதியைக் குலைத்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் ஸ்ரீ சரபேஸ்வரரை பூஜை செய்து வணங்கினால், தீய பழக்கங்களிலிருந்து விடுபடலாமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலித்தது. புதிய ஜீவிதம் மலர்ந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு ஜாதகத்தில் தொழில் அதிகாரம், வருவாயைக் குறிக்கும்
அர்த்தத் திரிகோணமோ (2, 6, 10), மகிழ்ச்சியைக் குறிக்கும் காமத் திரிகோணமோ (3, 7, 11) அது அமையும் ராசியின் அமிர்த பாகையைத் தொடர்பு கொண்டால் அளவில்லா செல்வமும் மகிழ்ச்சியும் தரும். அமுதனாகிய சந்திரன், அமிர்த பாகையில் சஞ்சரிக்கும் காலத்தைக் கண்டறிந்து பரிகாரம் செய்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
மேஷம், சிம்மம், தனுசின் இருபத்தொன்றாம் பாகையும், ரிஷபம், கன்னி, மகரத்தின் பதினாறாம் பாகையும், துலாம், கும்பம், மீனம் ஆகிய வற்றின் மூன்றாம் பாகையும் கடகத்தின் இருபத்து நான்காம் பாகையும் அமிர்த பாகைகள் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
பரம்பரை சாபம் நீங்குமா?
கேள்வி: எங்கள் குடும்பத்தில் பல தலைமுறைகளாக, ஆண் வாரிசுகள் இல்லாமல், தத்தெடுத்து வளர்க்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாபம் நீங்குமா?
-ஜெயலட்சுமி, கோவை.
(எண்: 14; ரோகிணி- 2; நட்சத்திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- சுக்கிரன்.)
* சோழி லக்னத்தின் ஐந்தாமிடமாகிய கன்னி ராசி, பெண் ராசியாகி, அதில் பெண் கிரகமாகிய சந்திரன், ஹஸ்த நட்சத்திரத்தில் அமைவது பெண் சந்ததிகளையே காட்டுகிறது.
* பிரசன்ன லக்னமும் சோழி லக்னமும் பெண் ராசியில் அமைகின்றன.
* ஐந்தாமதிபதியாகிய புதனும் ராகுவும் சேர்ந்து பன்னிரண்டில் இருப்பதால் தத்து புத்திரயோகத்தைத் தருகிறது
* லக்னம் அமையும் ரிஷப ராசிக்கு பாதக ஸ்தானமாகிய ஒன்பதாமிடத்தில் சனி ஆட்சிபெறுவது பரம்பரை சாபத்தைக் காட்டுகிறது.
* ஐந்தாமதிபதி பன்னிரண்டில் மறைந் திருப்பதால் குலதெய்வ சாபம் இருக்கிறதென்பதும் தெளிவாகிறது.
* குரு ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால் பரிகாரம் செய்தால் பரம்பரை சாபம் நீங்கும்.
பரிகாரம்
புத்திரகாரகன் குருவின் அருள்பொங்கும் பௌர்ணமியில் சந்தான கோபால விரதமிருக்க வேண்டும். ஆண் வாரிசுவேண்டி சங்கல்பத்துடன் சந்தான கோபால யாகம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத் தலைவர் குருவாயூரில் துலாபாரம் கொடுத்தாலும் பரம்பரை சாபம் நீங்கும். சிவன் கோவிலில், வில்வமரத்தை நட்டுவைத்துப் பராமரித்தால் தலைமுறை சாபம் நீங்கி வம்சம் தழைத்தோங்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636