ளியால் மரத்தை வெட்டமுடியாது. கோடரியால் சிற்பத்தை செதுக்கமுடியாது. செய்யும் செயலுக்கேற்ற கருவியைத் தேர்ந் தெடுக்காவிட்டால் எந்த செயலும் முழுமை பெறாது. செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்ந்தால் மட்டுமே வினை முற்றுப்பெறும். தாது, மூலம், ஜீவன் எனும் மூன்று பிரிவு களில் திரேகாணங்களைப் பிரித்தால் மட்டுமே பிரச்சினையையும், அதற்கான பரிகாரத் தையும் காணமுடியுமென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.

சோகத்தால் இளமையைத் தொலைத்து விட்ட முகத்துடன் பிரசன்னம் பார்க்க வந்தவர் தன் மனதின் பாரத்தை இறக்கிவைத்தார். தனக்குத் திருமணமாகி ஓராண்டில், மனைவி யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியும் நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார். பிரசன்ன ஆரூடத்தின்மூலம் பரிகாரம்தேடி வந்திருந்தார். தேவலக்கோடு பகவதியைத் தொழுதபின் பிரசன்னம் துவங்கியது.

ஏழாமிடத்ததிபதி ஆறாமிடத்தில் அஸ்தங்கமாகியது. லக்னம் போக மூலத்தி லும், லக்னாதிபதி நாச தாதுவிலும் அமைந் ததை நவாம்சத்தில் காணமுடிந்தது. ஆயிரங் காலத்துப் பயிராக இருக்கவேண்டிய திருமண பந்தம் அவசரத்தில் அள்ளித் தெளித்த அலங்கோலமானது. திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் ரதி, மன்மத பூஜை செய்தால், மணமக்களுக்குள் ஒற்றுமை ஏற்படும் என்ற பரிகாரம் சொல்லப் பட்டது. பரிகாரம் நிறைவேற்றப்பட்டதால், வாடிய உறவு மலர்ந்தது. மனம் மகிழ்ந்தது.

Advertisment

kj

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ரஜ்ஜு, வசியம், ராசிப் பொருத்தம் போன்ற பதினோரு நட்சத்திர பொருத்தங்களைப் பார்ப்பதே வழக்கத்திலுள்ளது. மணமக்கள் ஜாதகங்களின், கிரக பாவத் தொடர்புகளை ஆராய்வதில்லை. நீண்ட ஆயுள், புத்திர பாக்கியம், குறையாத செல்வம், நல்லறிவு முதலிய பதினாறு பேறுகளையும் மணமக்கள் பெறுவார்களா என்ற அடிப்படையில் பொருத்தம் பார்ப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

மணமக்கள் ஜாதகங்களில் சனியும் ராகுவும் தொடர்பிலிருந்து, அந்த தசாபுக்தியும் நடப்பிலிருந்தால் திருமணப் பொருத்தமில்லை. ஐந்தில் ராகு அமர்ந்து, ஐந்தாம் வீட்டோனும் நீசம் அல்லது அஸ்தமனம் ஆகக்கூடாது. அவ்வாறு அமைந்தால் புத்திர பாக்கியத்தில் தடையுண்டாகும். ஏழாமிடத் தில் செவ்வாயும் சுக்கிரனும் இனைந்திருக் கும் ஆணுக்கும், எட்டாமிடத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இனணந்திருக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் தாம்பத்திய சுகத்தில் திருப்தி உண்டாகாது. மணமக்கள் இருவரின் ஜாதகங் களிலும், லக்னமும் சூரியனும் ஆறு, எட்டாக அமையக்கூடாது. மணமகளின் ராசி, மணமகனின் ஏழாம் வீட்டதிபதியின் ஆட்சிவீடாக அமைவது சிறப்பென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

குலதெய்வத்தின் அருள் கிடைக்குமா?

கேள்வி: திருப்பதி ஏழுமலையானே எங்கள் குலதெய்வம். கடந்த ஐந்தாண்டுகளாக குலதெய்வ வழிபாட்டில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தத் தடைநீங்க வழியுண்டா?

-பாலாஜி, அரக்கோணம்.

(எண்- 102; உத்திரட்டாதி- 2; நட்சத்திராதிபதி- சனி; ராசியாதிபதி- குரு.)

* சோழி லக்னத்தின் ஐந்தா மிடமாகிய கடக ராசியை சனியும் செவ்வாயும் சப்தமப் பார்வையால் பார்பதால் குலதெய்வத்தின் தோஷத்தை அறியமுடி கிறது.

* லக்னதிபதியாகிய குரு பன்னிரண்டா மிடத்தில் இருப்பதும் குலதெய்வ வழி பாட்டிலுள்ள தடையைக் காட்டுகிறது.

* ஒன்பதாமிடத்தில் கேது இருப்பதால், தந்தைவழியில் வந்த சாபத்தின் விளைவென்பது உறுதியாகிறது.

* ஐந்தாமதிபதி 8-ல் மறைந்திருப்பதால், குலதெய்வக் குற்றம், சாபம் இருக்கிறதென்று தெளிவாகிறது.

* பரிகாரத் தலங்களுக்கு விரதமிருந்து சென்று வழிபட்டபிறகு, குலதெய்வக் கோவிலுக்குச் சென்றால் தடை நீங்கும்.

பரிகாரம்

அரியக்குடியிலுள்ள தென்திருப்பதிக்குச் சென்று வழிபடவேண்டும். இங்கு வழிபடுதல் திருமலையில் வழிபடுவதற்கு சமமாகும். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோவிலுக்கு அமாவாசையில் சென்று வழிபட்டால் குலதெய்வ சாபம் நீங்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636