பெரும் படையும், வெண்கொற்றக் குடையும், புலவருக்குப் புரவலனாக அரசன் தரும் கொடையுமே ஒரு மன்னரின் லட்சனங்களாகக் கருதப்படும். ஒவ்வொரு ஜாதகத்திலும் ஷத்ர பாவம் (குடை) எனும் பாதுகாப்பைத் தரும் பாவங்கள் உள்ளன. பிறக்கும்போதே நமக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ள குடை ஸ்தானங்களே 3, 7, 11-ஆம் பாவங்கள். மூன்றாம் பாவம் வெற்றியையும், ஏழாம் பாவம் கூட்டாளியையும், பதினொன்றாம் பாவம் சமுதாயத்தையும் குறிக்கும். இந்த பாவங்களில் கொடுப்பினையிலோ, தசாபுக்தியிலோ, கோட்சாரத்திலோ குறை ஏற்படும் போது, கோட்டையையும் கவசத்தையும் இழந்து சிறைப்படும் மன்னர்போல் ஜாதகர் துன்பத்தால் சூழப்படுகிறார் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து.
புழுதிபட்ட மேனியும், அழுத கண்ணிரும், இழந்த நம்பிகையுமாக பிரசன்னம் பார்க்கவந்தவர் ஒரு விஞ்ஞானி. தன்மேல் அபாண்டமான பழி சுமத்தப்பட்டதால் சிறைசென்று, பிணையில் விடுவிக்கப்பட்டதாக வருந்தினார். இந்த சதியிலிருந்து தான் நிரபராதியாக வெளிவரமுடியுமா என்பதை அறிவதற்காகவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். முக்கோள பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழி லக்னாதிபதி ஆறில் மறைந்ததால் புகழ்பெற்றவர் என்பது புலனானது. ஆனா லும் லக்னாதிபதி, சனியுடன் கூடியதால் பந்தன யோகமெனும் சிறைசெல்லும் அமைப்பு உண்டானது. எட்டாமிடத்திலிருந்த ராகு, சதியின் பின்புலத்தைக் காட்டியது. பன்னிரன்டாமிடத்திலிருந்த மாந்தி, அயல்நாட்டு சதியை உறுதிப்படுத்தியது. ஷத்ர பாவாதிபதிகள், கோட்சாரத்தில், நாசத் திரிகோணம் புகுந்தனர். திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார ஹோமம் செய்தால் பழி நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகார பூஜை செய்ததால் விடுதலை பெற்றார். விதியின் சதியால் உறங்கிய உண்மை விழித் தெழுந்தது. பிரசன்னத் தால் தர்மம் வென்றது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
தசாபுக்தி மற்றும் கோட்சார கதியின் பலன்களைக் காணும்போது, சந்திரனின் பாவத் தொடர்புகளை மட்டும்கொண்டு பலன்களைக் கணித்தால் பலன்கள் தவறாகப்போகும் வாய்ப்புண்டு. லக்னம், சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் குறிப்பிட்ட பாவத்திற்கு ஏற்படுத்தும் விளைவைக்கொண்டே பலனறியவேண்டும். விதி, மதி, கதியைக் கணக்கிட்டுப் பலன் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
மனோகாரகனாகிய சந்திரனின் 6, 8, 12-ஆம் பாவங்களின் தொடர்பும், அதில் செவ்வாயின் பங்களிப்பும் ஏற்பட்டால், அதன் பலன், ஜாதகருக்கு காயம் ஏற்படுதல், வலி, வேதனை போன்வையேயாகும். ஒருவரை, எதிரி ஆயுதங்களால் தாக்கினா லும், மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும். மேற்கூறிய பாவங்கள், லக்னத் திற்கு 4, 8, 10 ஆகிய தொடர்புகளைக் காட்டினால் அந்த ஜாதகரின் மருத்துவ அறுவை சிகிச்சையைக் குறிப்பிடுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
வீடு விற்பதில் தடை நீங்குமா?
கேள்வி: காலஞ்சென்ற என் தந்தையாரின் விட்டைவிற்க முயற்சிசெய்து வருகிறேன். என் சகோதரர்களுக்குள் ஒற்றுமையில்லாததால் வீட்டை விற்க முடியவில்லை. வீடு விற்பதில் தடை நீங்குமா?
-ராஜகோபால், விருத்தாசலம்.
(எண்-22; திருவாதிரை- 2; நட்சத்திராதிபதி- ராகு; ராசியாதிபதி- புதன்.)
* சோழி லக்னத்தின் நான்காமிடத்தின் அதிபதியாகிய புதன் பத்தாமிடத்தில் நீசமடைவது, வீடு விற்பதி லுள்ள பிரச்சினையைக் காட்டுகிறது.
* ஆவணங்கள் தொடர் பான அனைத்திற்கும் காரகனா கிய புதன் நீசமடைவது, தந்தையாரின் உயிலால் வந்த பிரச்சினையாகத் தெரிகிறது.
* ஆறில் கேதுவும், பன்னிரண்டில் ராகுவும் அமைவது, பேச்சுவார்த்தையில் இழுபறியாக இருப்பதைக் குறிக்கிறது.
* சோழி லக்னத்தில் குருபகவானின் ஐந்தாம் பார்வை பதிவதால், போராட்டத்தின் முடிவில் வெற்றி கிடைக்கும் என்பதே உண்மை.
* எட்டாமிடத்திலிருக்கும் சனியும் செவ்வாயும் பல தடைகளை உண்டாக்கு வார்கள்.
* கேது துலா ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் குருவின் பார்வை பெறும்போது பிரச்சினை முடிவுக்கு வரும்.
பரிகாரம்
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால் குடும்ப சண்டை முடிவுக்கு வரும். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள்தீபமேற்றி வழிபடுவதால் நினைத்த காரியம் நிறைவேறும்.
(தொடரும்)
செல்: 63819 58636