சிலருக்கு விரும்பியது கிடைக்காமல் போவதால், கிடைத்ததை விரும்பும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மனோகாரகனாகிய சந்திரன் நிற்கும் ராசிக்கும், அதன் மூன்றாம் வீட்டிற்குமுள்ள தொடர்பே விருப்பம் நிறைவேறுதலைக் காட்டும். மூன்றாம் வீடும், அதன் பதினொன்றாம் வீடும் இணைந்தால் வெற்றி நிச்சயமென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் நிலைப்பாடு.
பிரசன்னம் பார்க்கவந்தவரின் முகத்தில் கேள்விக் குறிகளும், கவலையின் ரேகைகளும் நிரம்பியிருந்தன. தான் கனவுகண்ட வாழ்க்கை தனக்கு வாய்க்காமல்போன கவலையைப் பகிர்ந்துகொண்டார். அதன் காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். கண்ணம்புழா பகவதியம்மனைத் தொழுது, பிரசன்னத் தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சர ராசியில் சோழி லக்னமும், சந்திரனும் அமைந்தது. பதினொன்றாம் வீடு பாதகமானது. சந்திரனுக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்த சனியின் பார்வையும் விரக்தியையும், ஆசை நிறைவேறாமல் போனதையும் காட்டியது. திரிதியை, தசமி, பௌர்ணமியில் நவாவரண பூஜை செய்தால் தோஷங்கள் நீங்கி, விருப்பம் நிறைவேறும் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலன் தந்தது.
வெற்றியின் வெளிச்சம் புலப்பட்டது; வென்றது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
வேதத்தின் அங்கமாகிய இசையில் ஏழு ஸ்வரங்களும், பன்னிரண்டு ஸ்வர ஸ்தானங்களும் அமைந்து, அதில் ஷட்ஜமம், பஞ்சமம் தவிர்த்து மற்ற ஐந்து ஸ்வரங்களிலும் கோமளம், தீவிரம் எனும் இரண்டு நிலைகள் உள்ளதைக் காணலாம். அதேபோல், ஜோதிடத்திலும், ஆட்சி வீடுகளையுடைய ஏழு கிரகங்களில், சூரியன், சந்திரன் தவிர்த்து மற்ற கிரகங்களுக்கு ஆரோகண, அவரோகண கதிகளுண்டு. ஒரு கிரகத்தின் உச்சகதிக்கு அருகிலுள்ள வீட்டை ஆரோகண ஆட்சி வீடென்றும், நீசகதிக்கு அருகிலுள்ள வீட்டை, அவரோகண ஆட்சி வீடென்றும் பகுத்துப் பலன் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒரு ராசியின் ஒன்று, ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகள், ஆரோகண ஆட்சி வீடாக அமைந்தால், அந்த வீட்டின் அதிபதியால் நன்மை பெருகும்.
உதாரணத்திற்கு, கடக ராசிக்கு, ஐந்தாம் வீடு விருச்சிகம், செவ்வாயின் ஆரோகண ஆட்சி வீடு. ஒன்பதாம் வீடாகிய மீனம் குருவின் ஆரோகண ஆட்சி வீடு. அதனால் கடக ராசிக்கு குருவும், செவ்வாயும் யோககாரகர்களாக அமைகிறார் களென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
வீடு கட்டுவதில் தடை நீங்குமா?
கேள்வி: என் மூதாதையர் நிலத்தில் வீடுகட்டி வாழ விருப்பம்கொண்டு, பத்தாண்டு களாக முயற்சி செய்துவருகிறேன். ஆனாலும் பல தடைகளால் என் விருப்பம் நிறைவேற வில்லை. வீடுகட்டுவதில் தடை நீங்குமா?
-சுப்பிரமணியன், செங்கம்.
(எண்-20; மிருகசீரிடம்-4-; நட்சத்திராதி பதி- செவ்வாய்; ராசியாதிபதி- புதன்.)
* சோழி லக்னத்தின் நான்காமிடத்தில் பிரசன்ன லக்னம் அமைவது, வீடு கட்டுதல் தொடர்பான கேள்வியைக் குறிக்கிறது.
* நான்காமிடத்து அதிபதியாகிய புதன், நான்காமிடத்தில் ஆட்சி, உச்சமும் பெறுவது சிறப்பு.
* நான்காமிடம் குருவின் பார்வை பெறுவதால், வீடுகட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும்.
* மூன்றில் சுக்கிரன் இருப்பதால், ஜாதகர் நிலையற்ற எண்ணங்களை உடையவர். உறுதியான குறிக்கோள் இருந்தால் வெற்றிபெறலாம்.
* ஒன்பதாம் அதிபதி எட்டிலிருப்பதால் பித்ரு தோஷம் கடுமையாக உள்ளது. பரிகாரம் செய்வது நல்லது.
* ஐந்தில் கேதுவும், பதினொன்றில் ராகுவும் பித்ரு தோஷத்தால் ஏற்படும் தடையைக் காட்டுகிறது.
* பன்னிரண்டில் செவ்வாய் இருப்பதும் சிறப்பாகாது.
பரிகாரம்
அமாவாசை நாட்களில் பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம், எள்ளு ஆகியவற்றைக் கலந்து கொடுக்க வேண்டும். இதனால் பித்ரு தோஷத்தினால் வரும் பாதிப்பு குறையும். வீடு கட்டும் போது தடை ஏற்படாமலிருக்க, வீடுகட்ட வாங்கிய கட்டுமானக் கற்களில் ஒன்றையெடுத்து, அந்த ஊர் எல்லை தெய்வத்தின் கோவிலில் பூஜை செய்யவேண்டும். அந்தக் கல்லை அஸ்திவாரத்தின் ஈசானிய மூலை யில் போட்டு மூடி கட்டடம் கட்டி னால் எவ்வித தடைகளுமின்றி, விருப்பம் முழுமையாக நிறைவேறும். முருகப் பெருமானின் அறுபடை வீடு களுக்கும் சென்று வழிபட்டால், தடைநீங்க வழிகிடைக்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636