ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷம் கலந்து, பாலைப் பாழாக்குவதுபோல, தீயவர் நட்பால் நல்ல மனிதர்களும் பழி பாவத்திற்கு ஆளாகிறார்கள். ஒருவரின் நட்பு வட்டம்தான் அவருடைய வாழ்க் கையைத் தீர்மாணிக்கிறது என்னும் உண்மையை ஜோதிடரீதியாக உணர்ந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில், கவலை கருமையைப் பூசிக் களங்கப்படுத்தியிருந்தது. நல்ல ஒழுக்கத்துடன் வளர்ந்த தன் மகன் சில நாட்களாக தீய பழக்கங்களுக்கு ஆட் பட்டுவிட்டான் என்னும் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். அதன் காரணத்தையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். சிரக்கல் பகவதியைத் தொழுது பிரசன்னத் தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன ஜாதகத்தில் லக்னாதி பதி, பாதகாதிபதியுடன்கூடி ஐந்தாம் வீட்டிலிருந்தது. ஐந்தாம் வீட்டோன் ராகுவின் பிடியில் சிக்கித் தவித்தார். கூடாநட்பால் விளைந்த கேடுதான் இந்த பிரச்சினைக்குக் காரணமென் பது தெளிவானது. திருவெண் காட்டில் அமைந்துள்ள புதன் பகவானை வழி பட்டால் தீயவர் நட்பு நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. சில மாதங்களில், சூரியனைக்கண்ட பனிபோல் தீயநட்பு விலகியது. பரிகாரத்தால் பலன் கிடைத்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களாகிய வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பை அறிந்தபின், முகூர்த்தநாளை நிர்ணயிப் பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சந்திரனுக்கு முன்னும் பின்னும் 12 பாகைமுதல் 24 பாகைவரையுள்ள இடைவெளியில் சூரியன் அமைவது, தீய பலன்களையே தரும். திதியென்பதும் முகூர்த்த நிர்ணயத்தில் முக்கியமானது என்ற கருத்து வழக்கொழிந்து போய்விட்டது. ஞாயிறு- அஷ்டமி, திங்கள்- நவமி, செவ்வாய்- சஷ்டி, புதன்- திரிதியை, வியாழன்- ஏகாதசி, வெள்ளி- திரயோதசி, சனி- சதுர்த்தசி திதி போன்ற நாட்கள் வெற்றியைத் தரும். ஞாயிறு- சதுர்த்தசி, திங்கள்- சஷ்டி, செவ்வாய்- சப்தமி, புதன்- துவிதியை, வியாழன்- அஷ்டமி, வெள்ளி- நவமி, சனி- சப்தமியில் தொடங்கும் செயல்கள் தோல்வியை உண்டாகுமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.
வழக்கில் வெற்றி கிடைக்குமா?
கேள்வி: என் தந்தைக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை உறவினர்கள் அபகரித் துக்கொண்டு விட்டார்கள். வழக்கு நிலுவையில் உள்ளது.
வழக்கில் வெற்றி கிடைக் குமா?
-வெங்கடேசன், காஞ்சிபுரம்.
(எண்: 17; மிருகசீரிடம்-1; நட்சத்திராதிபதி- செவ்வாய்; ராசியாதி பதி- சுக்கிரன்.)
* சோழி லக்னத்தின் பாதக ஸ்தானத் தில் மனோகாரகனாகிய சந்திரன் இருப்பது ஆழ்ந்த கவலையைக் குறிக்கிறது.
* தைரிய ஸ்தானாதிபதி பாதகத்திலிருப்பது மன உறுதியைக் குலைக்கும்.
* லக்னம், ஆறாமிடத் தின் அதிபதி பதினொன்றா மிடத்திலிருப்பது, வழக்கில் கிடைக்கும் வெற்றியைக் குறிக்கிறது.
* சோழி லக்னத்தின், மிருகசீரிட நட்சத்திராதிபதியாகிய செவ்வாயும் குருவுடன் சேர்ந்து, பதினொன்றாமிடத்தி லிருப்பது வெற்றியை உறுதியாக்குகிறது.
* பிரசன்ன காலத்து ஹோரா நாதனாக சுக்கிரன் அமைவது கூடுதல் சிறப்பைத் தரும்.
* பன்னிரண்டில் ராகு இருப்பதால் வழக்கினால் வாழ்க்கை போர்க்களமாக தான் இருக்கும்.
* பத்தில் சனிபகவான் ஆட்சிபெறு வதால், வழக்கில் வெற்றியின் கை ஓங்கும். எதிரிகளை வெல்லலாம்.
பரிகாரம்
தேய்பிறை செவ்வாய்க்கிழமைகளில், காளிதேவியை வணங்கினால் வெற்றி கிடைக்கும். புதுக்கோட்டை- செவலூரி லுள்ள பூமிநாதரை வழிபட்டால் வழக்கில் வெற்றியுண்டாகும்.
(தொடரும்)