கரையில் கட்டப்பட்ட படகுக்கு துடுப்புகள் பயனற்றவை. கர்மம் விலகாதவரை மர்மம் விளங்காது. தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஜாதகர்கள் செய்யும் முயற்சிகள் கடலில் பெய்த மழைபோல் வீணாகும். பிரசன்னம் பார்க்க வந்த செல்வந்தர், ஆரோக்கியத்தில் வறியவராகத் தெரிந்தார். தான் பல ஆண்டுகளாகத் தீராத நோயால் அவதிப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைகள் பயனளிக்கவில்லை என்றும் சொல்லிப் பெருமூச்சு விட்டார். தன்னுடைய நோயின் காரணத்தைக் கண்டறிந்து பரிகாரம் பெறவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். வடக்கன் தரையில் அருள்பாலிக்கும் பகவதியம்மனைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழி லக்னம், ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களுடன் தொடர்பிலிருந்ததால், ஆயுட்காலம் முழுவதும் தொடரும் நோயின் அறிகுறி தெரிந்தது. பன்னிரண்டாம் வீட்டதிபதி ஐந்தாம் வீட்டிலிருப்பதாலும், குருபகவான் பாவி களின் தொடர்பைப் பெற்றதாலும் பத்தினி சாபத்தால் இந்த நோய் உருவா னது என்னும் உண்மை தெளிவானது.
உத்தமியாள் சாபம் உடனே பலித்து விடும்; பத்தினியாள் சாபம் பலநாள் தொடர்ந்து வரும். காடாம்புழா பகவதி கோவிலில், "முட்டறுக்கல்' என்னும் பரிகாரத்தைச் செய்தால், நோயின் தீவிரம் குறையும்; அஷ்ட பைரவரை வழிபட்டால் சாப நிவர்த்தி உண்டாகும் என்று பரிகாரம் சொல்லப் பட்டது. பரிகாரம் செய்ததால் நோயின் கடுமை குறைந்து சுகம் பெற்றார் பிரசன்னம் பார்க்க வந்தவர்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
தொழில் விஷயமாக நீண்ட தூரம் செல்லும் பயணம் வெற்றி பெறுமா என்பதை அறிய பார்க் கப்படுவதே "யாத்ரா பிரசன்னம்.' இந்த பிரசன்ன முறையினால் பயணத்தின் நோக்கம் நிறைவேறுமா என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. பிரசன்ன ஆரூடத்தில் மூன்றாம் பாவம் சிறிய பயணத்தையும், ஒன்பதாம் பாவம் தொலைதூரப் பயணத்தையும் குறிக்கும். லக்னம், பயணம் இனிதாக அமையுமா என்பதையும், பத்தாம் வீடு பயண நோக்கத்தையும், நான்காம் வீடு பயணத்தின் வெற்றி- தோல்வி யையும் சுட்டிக்காட்டும். லக்னாதி பதியோ, சந்திரனோ பாதிக்கப்பட்டிருந்தால் பயணத்தில் தொல்லை உண்டாகும். லக்னாதி பதியும், சந்திரனும் அமர்ந்த ராசிகளைக் கொண்டு பயணத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை அறியலாம். சோழி லக்னத்திற்கு இரண்டாமதிபதி, மூன்று அல்லது ஒன்பதாம் வீட்டுடன் தொடர்பிலிருந்தால், பயணத்தின் வெற்றி உறுதியாகுமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.
புதிய வேலை கிடைக்குமா?
கேள்வி: நானொரு தனியார் நிறுவனத் தில் சில ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறேன். ஆனால் முன்னேற்றமில்லை. புதிய வேலைக்கு முயற்சிசெய்தால் பலனுண்டாகுமா? செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்க பரிகாரம் உண்டா?
-ஸ்ரீதரன், திண்டுக்கல்.
(எண்-46; உத்திரம்-2; நட்சத் திராதிபதி- சூரியன்; ராசியாதி பதி- புதன்.)
* சோழி லக்னத்தின்மீது குருபகவானின் நேரடி பார்வை விழுவதால், அனுகூலமான பலனே காணப்படுகிறது.
* சோழி லக்னத்திற்கு ஆறாமிடத்தில் சனி இருப்பதும் நன்மையே. ஆறாம் பாவாதிபதி ஆறில் நிற்பது நல்லது. போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கும்பத்திற்கு சனி விரய வீடான பன்னிரண்டாமிடத்திற்கும் சொந்தமானவர் என்பதால் சில தடைகளையும் சமாளிக்க வேண்டிய நிலைமை உருவாகும்.
* லக்னம் விழுந்த நட்சத்திர அதிபதி யாகிய சூரியன் ஒன்பதாம் வீட்டிலிருப்பதால் பாக்கியம் வலுப்பெறும்.
* பத்தாம் வீட்டின் அதிபதியாகிய புதன், சூரியனுடன் சேர்ந்து ஒன்பதிலிருப்பது அதிகாரமான பதவியைத் தரும்.
* இரண்டில் கேதுவும் எட்டில் ராகுவும் அமைவதால் "கார்கோடக சர்ப்ப தோஷம்' உண்டாகிறது. திடீர் எதிரிகளால் தொழிலில் சங்கடங்கள் உண்டாகும்.
* எட்டில் ராகு இருப்பதால் தொழிலில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உருவாகும்.
* குருபகவான் மீன ராசியில், ரேவதி முதல் பாதத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்
திருச்செந்தூர் முருகனை சஷ்டியில் வழிபட்டால் அதி காரமான பதவி கிடைக்கும்.
அச்சிறுபாக்கம்- ஆட்சீஸ்வரரை பௌர்ணமி யில் பூஜைசெய்தால் பதவி உயர்வு உண்டாகும்.
(தொடரும்)
செல்: 63819 58636