கேரள ஜோதிட ரகசியங்கள்! (74)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-74

தூண்டிலில் மாட்டிய மீனும், இரை தேடப்போய் வலையில் அகப்பட்ட பறவை யும், பேராசையில் சிக்கிய மனிதரும் மீண்டெழுவ தில்லை. முயற்சியில்லாமல் வரும் வெற்றி ஆபத்தையே உண்டாக்கும். அறியாமையும் பேராசையுமே பெரும் நஷ்டத்தைத் தருகிறதென்னும் சிந்தனையில் ஆழ்ந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்னம் பார்க்க வந்தவரின் பரிதாபமான பார்வை, அவர் எதையோ பறிகொடுத்துவிட்டார் என்பதை உணர்த்தியது. தன் உறவினர் ஒருவர் வியாபாரத்தில் பெரும் பொருளீட்டலாமென்று ஆசைகாட்டியதால், முதலீடு செய்து கைப்பொருளை இழந்ததைக் கூறிப் புலம்பினார். காடாம்புழா பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பன்னிரண்

தூண்டிலில் மாட்டிய மீனும், இரை தேடப்போய் வலையில் அகப்பட்ட பறவை யும், பேராசையில் சிக்கிய மனிதரும் மீண்டெழுவ தில்லை. முயற்சியில்லாமல் வரும் வெற்றி ஆபத்தையே உண்டாக்கும். அறியாமையும் பேராசையுமே பெரும் நஷ்டத்தைத் தருகிறதென்னும் சிந்தனையில் ஆழ்ந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்னம் பார்க்க வந்தவரின் பரிதாபமான பார்வை, அவர் எதையோ பறிகொடுத்துவிட்டார் என்பதை உணர்த்தியது. தன் உறவினர் ஒருவர் வியாபாரத்தில் பெரும் பொருளீட்டலாமென்று ஆசைகாட்டியதால், முதலீடு செய்து கைப்பொருளை இழந்ததைக் கூறிப் புலம்பினார். காடாம்புழா பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

பன்னிரண்டாம் வீட்டுடன் ஐந்து, எட்டாம் பாவங்கள் இணைந்திருப்பதால், முதலீட்டில் நஷ்டம் உண்டானது தெளிவாகிறது. சோழி லக்னத்திற்கு அறுபத்து நான்காவது நவாம்சத்தில் ராகு, குரு சேர்க்கை- உறவினரால் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. மூன்று மற்றும் எட்டாம் பாவாதிபதியின் பரிவர்த்தனை, பேராசையால் வந்த தொல்லையையும் வெளிப்படுத்தியது. விரிஞ்சிபுரம் வழித்துணைநாதரை வழிபட்டால், நஷ்டமான தொகையில் ஒரு பகுதியையாவது மீட்டெடுக்கலாம் என்று பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் செய்ததால் வரவேண்டிய தொகையில் ஒரு பகுதியைத் திரும்பப் பெற்றார். வால் போனாலும், காலாவது மிஞ்சியதே என்ற ஆறுதலுடன், பிரசன்ன ஆரூடத்தை வணங்கினார் பிரசன்னம் பார்க்க வந்தவர்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

அபிசாரம் எனும் செய்வினை தோஷத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சோழி லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து, ஆறாமதிபதியின் பார்வையைப் பெற்றால், கேள்வியாளருக்கு செய்வினை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறியலாம். கேது லக்ன கேந்திரங்களில் அமர்வதும் செய்வினை பாதிப்பைக் காட்டும். உதய லக்னம், ஆரூட லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் குளிகன் அமர்ந்து, சனியின் சேர்க்கைபெற்றால், செய்வினைக் கான பொருட்கள் பூமிக்கடியில் புதைக்கப் பட்டிருக்குமென்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து.

dd

சுபகாரியங்களில் தடை நீங்குமா?

கேள்வி: எங்கள் வீட்டில் சில ஆண்டு களாக எல்லா சுபகாரியங்களும் தடைப் படுகின்றன. எப்பொழுதும் குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படுகிறது. இதற்குப் பரிகாரம் உண்டா?

-வேங்கடேசன், மதுரை.

(எண்-99; பூரட்டாதி-3; நட்சத்திராதிபதி- குரு; ராசியாதிபதி- சனி.)

* சோழி லக்னத்தின் ஒன்பதில் கேது அமர்ந்து பித்ரு தோஷத்தைக் காண்பிக்கிறது.

* சோழி லக்னத்திற்கு துலாம் பாதகமாக அமைவதும், செவ்வாயின் எட்டாம் பார்வையும் இந்த தோஷத்திற்கு வலுசேர்கிறது.

* அஷ்டமத்தில் மறைந்த மாந்தி ஆயுள்பயம் மற்றும் கண்டத்தைக் காட்டுகிறது.

dd

* மாந்தி, குரு, செவ்வாய் சமசப்தமப் பார்வை, குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த தெய்வீகப் பெரியோர்களின் கிரியைகளை சரிவர செய்யாமல் இருப்பதைக் காட்டுகிறது ப் கேதுவின் அறுபத்து நான்காவது நவாம்சத்தில் பாதகாதிபதியாகிய சுக்கிரனே அமர்வது- சுலபமான பரிகாரம் செய்வதோ அல்லது வழக்கமாக செய்யும் திலா ஹோமம், ராமேஸ்வர திதி- தர்ப்பணம் முதலியன செய்தாலும் பலனில்லாமல் போவதைக் காட்டுகிறது.

* மூன்றாம் பாவத்தில் பாதகாதிபதி அமர்வது பெண்களிடம் சிறிய மனக் கஷ்டம் வந்து நீங்குமென்றும் தெரிகிறது.

பரிகாரம்

பழனி முருகனிடம் ஜாதகரைத் தத்துக்கொடுப்பதால் தோஷம் நீங்கும். குருவாயூரில் கற்கண்டு துலாபாரம் கொடுப்பதும் பரிகாரமாக அமையும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala240622
இதையும் படியுங்கள்
Subscribe