எழுதிச் செல்லும் விதி யின் கை. அழுத கண்ணீர் ஆறெல் லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமா? இந்த வரிகள், கிருஷ்ணன் நம்பூதிரிக்கு பரிகாரத்தின் மீதிருந்த நம்பிக்கையை அசைத் துப் பார்த்தன. விளக்கின் திரியைத் தூண்டுவதால் சுடரின் ஆயுள் கூடும்.
பாய்மரத்தை மாற்றிக்கட்டுவதால் காற்றின் உதவியுடன், காற்றை எதிர்த்துச் செல்ல முடியும். தோஷம் தரும் கிரகத் தைக் கொண்டே தோஷத்தை சந்தோஷமாக மாற்றி, ஊழின் உட்பக்கத்தைக் காணலாம் என்னும் முடிவு கிடைத்தது.
நடுத்தர வயதான ஒருவர் கவலை தோய்ந்த முகத் துடன் பிரசன்னம் பார்க்க வந்தார். தனக்கு மூன்று ஆண்டு களுக்குமுன் மகன் பிறந்த தாகவும், ஜனன காலத்தி லிருந்தே அவன் இதயத்தில் பழுது இருப் பதாகவும் வருந்தினார். அவனுடைய "பாலாரிஷ்ட' தோஷத்திற்குப் பரிகாரம்தேடி வந்ததாக
எழுதிச் செல்லும் விதி யின் கை. அழுத கண்ணீர் ஆறெல் லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமா? இந்த வரிகள், கிருஷ்ணன் நம்பூதிரிக்கு பரிகாரத்தின் மீதிருந்த நம்பிக்கையை அசைத் துப் பார்த்தன. விளக்கின் திரியைத் தூண்டுவதால் சுடரின் ஆயுள் கூடும்.
பாய்மரத்தை மாற்றிக்கட்டுவதால் காற்றின் உதவியுடன், காற்றை எதிர்த்துச் செல்ல முடியும். தோஷம் தரும் கிரகத் தைக் கொண்டே தோஷத்தை சந்தோஷமாக மாற்றி, ஊழின் உட்பக்கத்தைக் காணலாம் என்னும் முடிவு கிடைத்தது.
நடுத்தர வயதான ஒருவர் கவலை தோய்ந்த முகத் துடன் பிரசன்னம் பார்க்க வந்தார். தனக்கு மூன்று ஆண்டு களுக்குமுன் மகன் பிறந்த தாகவும், ஜனன காலத்தி லிருந்தே அவன் இதயத்தில் பழுது இருப் பதாகவும் வருந்தினார். அவனுடைய "பாலாரிஷ்ட' தோஷத்திற்குப் பரிகாரம்தேடி வந்ததாகத் தெரிவித்தார். ஸ்ரீ சேனாங் காவு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்னத்தில் சந்திரன் பாவ கிரகங்களுடன் இணைந்து கிரகண அமைப்பில் இருந்ததாலும், எட்டாமதிபதி வலு விழந்திருந்ததாலும் பாலா ரிஷ்ட தோஷம் உறுதியானது.
ஆனாலும் குருவின் பார்வை எட்டாமிடத் தின்மீது பதிவ தால், பரிகாரத் தால் தோஷநிவர்த் திக்கு வாய்ப்பு அமைந் தது. திருச்சிக்கு அரு கிலுள்ள திருவாசியில் அருள்புரியும் ஸ்ரீ பால சௌந்தரி அம்பிகையை வணங்கினால் நோய் தீருமென்ற பரிகாரம் கூறப்பட்டது. பிரசன் னம் பார்க்க வந்தவரின் கவலை நீங்கியது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு ஜாதகரின் வருடப் பலன் களை அவருடைய ராசியைக் கொண்டும், அந்த வருட கிரக சஞ்சாரங்களைக்கொண்டும் கணிப்பது பொதுப்பலனாக அமையும். ஆனால் ஒவ்வொரு ஜாத கரின் வாழ்க்கையிலும் ஆண்டு பலன் மாறுபடுகிறது. ஒருவரின் ஜனன ஜாதகத்தைக்கொண்டு வருட ஜாதகத்தை வரைந்து, அதன் படி அந்தந்த ஆண்டு பலன் களைக் காண்பதே கேரள ஜோதிடத் தின் சிறப்பு. "முந்தா' எனும் கணிதப்புள்ளி, லக்னம் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசி நகர்ந்துசெல்வதாக அனு மானிக்கப்படுகிறது. ஒரு ஜாதகருக்கு பதின்மூன் றாம் வயதின் துவக்கத்தில், "முந்தா' மீண்டும் லக்னப் புள்ளியை அடையும். "முந்தா' அமையுமிடத்தை ஆண்டு லக்னமாகக்கொண்டு கிரக சஞ்சாரங்களைப் பொருத்திப் பார்ப்பதே துல்லியமான பலன்களைத் தருமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
கட்டிய வீட்டில் பிரச்சினை
கேள்வி: நான் வெகுநாட்களாக சேமித்த பணத்தைக்கொண்டு ஒரு வீடு கட்டினேன். அந்த வீட்டில் குடும்பத்துடன் அமைதியாக வாழமுடியவில்லை. அந்த வீட்டில் ஒரு துர்மரணமும் நிகழ்ந்துவிட்டது. தீய சக்திகள் இருப்பதாக உணர்கிறேன். வாஸ்து தோஷத்தை நீக்கும் பூஜைகளை செய்தும் பயனில்லை. பரிகாரம் உண்டா?
-உதயகுமார், ஈரோடு.
(எண்-9; கிருத்திகை-1; நட்சத்திராதிபதி- சூரியன்; ராசியாதிபதி- செவ்வாய்.)
* சோழி லக்னத்திற்குப் பாதக ஸ்தானத்தில் நான்காம் வீட்டு அதிபதியாகிய சந்திரன் அமைவது, கட்டிய வீட்டிற்கு பாதகத்தையே காட்டுகிறது.
* சனி, சந்திரனுடன் கூடி சோழி லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் இருப்பதால், மனக்கவலையும் விரக்தியும் சூழ்ந்திருப்பது தெளிவாகிறது.
* சோழி லக்னத்திற்கு எட்டாமிடத்தில் (விருச்சிகம்) பிரசன்ன லக்னம் அமைவது, அமானுஷ்யமான நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகிறது.
* தனுசு ராசியில், பூராடத்தின் நான்காம் பாதத்தில் அமையும் மாந்தி, நவாம்சத்தில் விருச்சிகத் திலமைந்து, பிரேத சாபத்தை உணர்த்துகிறது.
* சோழி லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் அமையும் சனியும் சந்திரனும் அவிட்டத்தில் அமைவதால், அந்த கட்டடத்தில் ஒரு மரணம் தனிஷ்டா பஞ்சமி யில் நிகழ்ந்திருக்கிறது.
* தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதை. தீய அல்லது அடைப்புள்ள நட்சத்திரங்களில் இறந்த வர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைச் செய்யா விட்டால், இந்த துர்தேவதை அந்த வீட்டில் புகுந்து, அங்குள்ளவர்களை பயமுறுத்தி தொல்லை தரும். பரிகாரம் செய்தால் சரியாகும்.
பரிகாரம்
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப் புல்லாணியில் தில ஹோமம் செய்து பிண்ட சிரார்தம் செய்வதால் பிரேத தோஷம் நீங்கும். தேய்பிறை அஷ்டமியில் காலபைரவ ஹோமம் செய்வதால் தீய சக்திகள் விலகும்.
(தொடரும்)
செல்: 63819 58636