சலனமில்லாத முகமும், சலிப் படைந்த கண்களும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் போராட்டமான வாழ்க்கை யைப் படம்பிடித்துக் காட்டின. தான் கூட்டுவியாபாரம் செய்துவருவதாகவும், அதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார். வியாபாரத்தில் நல்ல கூட்டாளியைப் பெறுவதற்காக, திருச்செங்கோடு சென்று பரிகாரம் செய்த தாகவும், ஆனால் பலன் மாறிவிட்டதாகவும் தெரிவித்தார். வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளைக் கலைமான் விழுந்ததுபோல், திருமணம் நடந்தேறியதேயல்லாமல், வியாபாரத்தில் முன்னேற்றமில்லை என்று புலம்பித் தீர்த்துவிட்டார். வியாபாரத் திலுள்ள பிரச்சினைகள் தீருமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். மணப் புள்ளி பகவதியை தியானம் செய்து, பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்னத்தில், விரயாதி பதி தசம கேந்திர தொடர்பிலிருப்பதால், வியாபாரத்தில் நஷ்டங்களும், அதனால் பல கஷ்டங்களும் இருப்பதைக் காணமுடிந்தது. ஆனாலும், பரிகாரங்களைச் செய்தால் கோட்சாரத்தில் சனி பகவானின் இடப் பெயர்ச்சியின்போது, மனதுக்கினிய மாற்றங்கள் உண்டாகுமென்று சொல்லப் பட்டது. ஏழாம் பாவமென்பது, வாழ்க்கைத் துணையையும், தொழில் கூட்டாளியையும் குறிப்பது. தொழிலுக்காக பரிகாரம் செய்யும் போது, தசாம்ச சக்கரத்தையும், விம்சாம் சத்தையும் ஒப்பிட்டுப் பரிகாரத் தலத் தைத் தேர்வுசெய்திருக்க வேண்டும். அவ்வாறில் லாமல், திருச்செங்கோடு சென்று அர்த்த நாரீஸ்வரருக்கு பரிகார பூஜைகளை செய்ததால், திருமணத்தடை நீங்கியதே யல்லாமல், தொழில்தடை நீங்கவில்லை. ஜனன ஜாதகத்தில் தோஷத்தையும் பிரசன்ன ஆரூடத்தில் பரிகாரத் தையும் பார்ப்பதே சிறந்தது என்ற புரிதலுடன் புறப்பட்டார் பிரசன்னம் பார்க்க வந்தவர்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு ஜாதகத்தில் பொதுவான பலன்களைக் காண ராசி சக்கரமும், நவாம்ச சக்கரமுமே போதுமானது.
துல்லியமான, நுணுக்கமான பலன்களை அறிந்துக்கொள்ள வர்க்க சக்கரங்களை ஆராயவேண்டியது அவசியம். கேரள ஜோதிடத்தில், சதுர்தாம்சத்தைக்கொண்டு பலனறியும் முறை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு ஜாதகரின் சுகம் மற்றும் நிலையான சொத்து விவரங்களை அறிய சதுர்தாம்சத்தை ஆராயவேண்டியது அவசியம். ஒரு ராசியை நான்காகப் பிரிப்பதே சதுர்தாம்சம். ஒரு சதுர்தாம்சத்தின் அளவு, ஏழு பாகையும், முப்பது கலைகளுமாகும். ஒரு ராசியின் சதுர்தாம்சங்கள் அந்த ராசியின் கேந்திரங் களில் அமையும். லக்னத்தின் சதுர்தாம்சம் சிம்மத்தில் இருக்க ஜாதகன் நினைத் ததை முடிப்பவனாகவும், கடகத்தில் அமைந்தால் செல்வந்தனாகவும் இருப்பான். சதுர்தாம்ச லக்னத்தில் செவ்வாய் இருந்தால் காலி இடம் ஜாதகன் பேரில் நிலைக்காது. 8-ல் புதன் இருந்தால் உயில்வழி சொத்து வரும். அதாவது ஒருவரின் மரணம்மூலம் அல்லது குழந்தை இல்லாதவர்களின் சொத்து வரும் என்பதே கேரள ஜோதிடர் களின் கருத்து..
வெளிநாடு சென்ற மகன் திரும்பவருவானா?
கேள்வி: என் மகன் பத்தாண்டுகளுக்குமுன் வெளிநாடு சென்றுவிட்டான். அதற்குப்பின் அவனைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்களுக்குள் எந்த மன வேறுபாடும் இல்லையென்றாலும், என்னுடன் தொடர்பு கொள்ள மறுக்கிறான். என் மகன் என்னைத் தொடர்பு கொள்வானா? அவன் மனம்திருந்த பரிகாரம் உண்டா?
-ஸ்ரீராம், வேலூர்.
(ஆரூட எண்-66; அனுஷம் 2-ஆம் மாதம்)
* சோழி லக்னம் அனுஷம் இரண்டாம் பாதமாகி நவாம்சத்தில் கன்னி ராசியில் அமைகிறது,
* பிரசன்ன லக்னம், சோழி லக்னத்திற்கு எட்டாமிடத்தில், மிதுன ராசியில் அமைவ தால், தகவல் தொடர்பு துண்டிக் கப்பட்டுள்ளது தெரிகிறது.
* சோழி லக்னம் சர ராசியாகிய விருச்சிகத்தில் அமைவதால், பாதகாதிபதி ஒன்பதுக்குடையவனாகிறான். தந்தையுடன் மன வேறுபாடு இருந்திருக்கிறது என்பதே உண்மை. ஆறாமிடத்தில் மாந்தி நிற்க, சுற்றம், நட்பு பகையாகும் என்பதே விதி.
* புத்திர ஸ்தானத் திற்கு பாதகத்தில் சந்திரன் இருப்பதும், புத்திர ஸ்தானாதி பதி, நான்கில் இருப்பதும், புத்திரரின் பிரிவால் வந்த சோகத்தைக் காட்டுகிறது.
* பரிகாரங்களைச் செய்தால், குருபகவான் மீனத் தில் சஞ்சரிக்கும்போது நல்ல பலன் கிடைக்கும்.
பரிகாரம்
ஆடிக் கிருத்திகையில் பழனி முருகனுக்கு பால் காவடி சுமந்தால் நல்ல சேதி கிடைக்கும். பிரதிமாதம் பிரதோஷ நாளில், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றேமுக்கால் நாழிகை முழுவதும் பஞ்சாட்சரம் ஜெபிக்கவேண்டும்.
(தொடரும்)
செல்: 63819 58636