வாடிய முகமும், விரக்தியான பார்வையும், தளர்ந்த நடையும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் பிரச்சினையைக் கோடிட்டுக் காட்டியது. தனக்குத் திருமணமாகி இரண்டாண்டுகளே ஆனதாகவும், அதற்குள் தன் மனைவி ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் உள்ளதாகவும் வருத்தப்பட்டார். தன் மனைவியின் ஆயுளுக்கு ஆபத்து நேராமல் இருக்குமா என்பதை அறிந்துகொள்ளவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். காடாம்புழா பகவதியை வேண்டி பிரசன் னத்தை நிறுவினார் கிருஷ்னன் நம்பூதிரி.

பிரசன்ன லக்னமும், எட்டாமிடமும் வலுவானதாக அமைந்ததால், ஆயுளுக்கு ஆபத்தில்லையென்பது தெளிவாகத் தெரிந்தது. மாந்தி பதினொன்றாவது வீட்டில் அமர்ந்ததால், மரணத்திற்கான வாய்ப்பில்லை. ஆனாலும் ரோக ஸ்தானம் வலுப்பெற்று, சூரிய னும் செவ்வாயும் வலுவிழந்திருப்பதால், நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஸ்ரீ வாஞ்சியத்திலும், வைத்தீஸ்வரன் கோவிலிலும் தோஷநிவர்த்திப் பூஜைகளை செய்தால் ஆபத்து விலகுமென்று கர்ம விபாகத்தின்படி பரிகாரம் சொல்லப் பட்டது. பிரசன்ன ஆரூடத்தின் மூலம் அச்சமும் கவலையும் நீங்கியதால், பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் நிம்மதி நிறைந்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு பிரசன்னம் பார்க்கத் தொடங்கியவுடன், அந்த பிரசன்னத்தின் விளைவு வெற்றியா? தோல்வியா என்று அறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. இதற்காகப் பார்க்கப்படுவதே ஹோரா பிரசன்னம்.

கேள்வி கேட்கப்படும் நேரத்தில் எழும் ஹோரையும், அதன் உப ஹோரையும், காலபுருஷ லக்னத்திற்கு எத்தனையாவது வீடாக அமைகிறது என்பதைக்கொண்டு கேள்வியின் நம்பகத் தன்மை சரிபார்க்கப்படும். ஹோரையும், அதன் உப ஹோரையும் மூன்று மற்றும் பத்தாமிடத் தொடர்பிலிருந்தால், இடமாற்றம், பதவி உயர்வு தொடர்பான கேள்வியாக அமையும். ஹோரையும், உப ஹோரையும் பிரசன்ன லக்னத்திற்கு மூலத் திரிகோணத்திலோ, காமத் திரிகோணத்திலோ அமைந்தால், பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்வி வெற்றியைத் தரும். மற்ற திரிகோணங்களில் அமைந்தால், தோல்வியைத் தரும். ஆறு, எட்டாம் வீட்டுத் தொடர்புபெற்றாலும், நான்கு, பத்தாமிட சம்பந்தம் ஏற்பட்டாலும் எடுத்த காரியம் பாதியில் நின்றுவிடும் என்பதே பலனாகும். கணவன்- மனைவி பிரச்சினை பற்றிய கேள்வி, செவ்வாய் ஹோரை, சனி உப ஹோரையில் வந்தால், அது பிரிவினையில் முடியும். எந்த செயலின் வெற்றி- தோல்வியையும் ஹோரை மற்றும் உப ஹோரைகளே முடிவுசெய்யும் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

Advertisment

kj

புத்திர பாக்கியம் உண்டா?

கேள்வி: எனக்குத் திருமணமாகி பத்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. இந்தப் பிறவியில் குழந்தைப்பேறு பெறுவதற்கான வாய்ப்புண்டா? அது கிடைப்பதற்கான பரிகாரத்தைக் கூறமுடியுமா?

-வெங்கடேசன், மானாமதுரை.

(ஆரூட எண்- 87; திரு வோணம் 3-ஆம் பாதம்)

* சோழி லக்னம் சந்திரனின் திருவோண நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. இதில் சனிபகவான் ஆட்சியில் பலம்பெற்றும், புதன் வலிமையிழந்தும் இருப்பதால், ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

Advertisment

kj

*ஐந்தில் மாந்தி இருப்பதால் கருக்கலைவு, கருதங்காமை போன்றவற்றால் புத்திர தோஷம் உண்டாகும் என்பது உறுதியாகிறது. ராகுவும் ஐந்திலிருப்பது புத்திர தோஷத்திற்கு வலு சேர்க்கிறது.

* புத்திர காரகனாகிய குரு, ராகுவின் நட்சத்திரத்திலிருப்பது சர்ப்ப தோஷத்தைக் காட்டுகிறது.

* சோழி லக்னம் அமைந்த நட்சத்திர அதிபதியாகிய சந்திரன், குருவின் ஒன்பதாம் பார்வை பெறுவதால், பரிகாரத்தாலும், தெய்வத்தின் கருணையாலும் புத்திர தோஷம் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை உண்டாகிறது.

* சோழி லக்னத்தில் புதன் அமர்ந்ததாலும், ஆறு மற்றும் ஒன்பதாம் வீடுகளின் அதிபதியாவதாலும் மருத்துவ சிகிச்சையால், செயற்கை முறையில் குழந்தை பிறக்கும்.

பரிகாரம்

தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்கருகாவூருக்குச் சென்று, முல்லைவனநாதருடன் அருள்பாலிக்கும் கர்ப்பரட்ச காம்பிகையை வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கும். ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருந்து, முருகப் பெருமானை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி என்னும் தலத்தில், திவ்யதர்ஷப் பெருமாள் கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசையன்றும், கணவன்- மனைவி இருவரும் சென்று வழிபட்டால் குழந்தைப்பேறு பெறலாம்.