இலையுதிர்காலத்தின் ஒரு பகல்பொழுதில் வந்தவரின் முகம், கோடையில் வறண்டு வாடை யில் வாடியதுபோல் கலையிழந்திருந்தது. பிரசன்னம் பார்க்கவந்தவருக்கு ஒருமகன் பிறந்திருப்பதாகவும், அபுக்த மூலத்தில் பிறந்ததால் தோஷமுண்டா என்பதை அறிவதற்காகவே பிரசன்னம் பார்க்கவந்ததாகவும் தெரிவித்தார். மணப்பள்ளி பகவதியம்மனை தியானம் செய்து, பிரசன்னத் தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்னத்தில், சோழி லக்னத்திற்கு ஒன்பதாம் வீடு- நான்கு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களுடன் தொடர்பிலில்லாததால், குழந்தை யின் தந்தை ஆயுளுக்கு ஆபத் தில்லை என்பதை அறிந்து கொள்ளமுடிந்தது. ஆனாலும் பாவாத்பாவ முறையில், ஒன்பதாம் வீடு இரண்டாம் வீட்டின் தொடர்பைப் பெற்ற தால், குழந்தையின் தந்தைக்கு நோயின் தாக்கம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்திரத்தின் இறுதி யிலும், மூல நட்சத்திரத்திரத்தின் துவக் கத்திலும் சந்திரனிருக்கப் பிறந்த குழந்தைக்கு அபுக்தமூல தோஷமுண்டு. ராசி, நட்சத்திர சந்தியாக அமைந்து, பரஸ்பர பகையுள்ள அதிதேவதைகள் கூடுவதுமே தோஷத்திற்குக் காரணமா னது. பகல் ஜனனம் தந்தையையும், இரவு ஜனனம் தாயையும் பாதிக்கும். குழந்தையை பாதிக்காது. மகான் துளசிதாசர், அபுக்த மூலத்தில் பிறந்து உலகப்புகழ் பெற்றார். பிரசன்னம் பார்த்த நேரமும், குழந்தை பிறந்த நேரமும் அபிஜித் முகூர்த்தமாக அமைந்ததால், அபுக்த மூலத்தால் வந்த தோஷம் வலுவிழந்தது. பரிகாரங்களைச் செய்தால் பிரச்சினை தீருமென்று கூறப்பட்டது. பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அபுக்தமூலத்தால் வந்த கவலை நீங்கியது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
பிரசன்ன ஆரூடத்தில், ராசி உதயத்தினை அனுசரித்துப் பலன்களைக் கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சோழிப் பிரசன்னம் அமையும் ராசி, சீரசோதய ராசியா, பிருஷ்டோதய ராசியா, உபயோதய ராசியா என்று வகைப்படுத்தி அறிவதே பிரசன்ன ஆரூடத்தின் மிக முக்கியமான அங்கம். மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் (சிரசோதய ராசிகள்) தலையால் எழுபவை. மேஷம், ரிஷபம், கடகம், தனுசு, மகரம் (பிருஷ்டோதய ராசிகள்) காலால் எழுபவை. மீனம் (உபயோதய ராசி) நடுவில் உதயமாகும் ராசியாகும். செவ்வாய், சூரியன், சனி இவர்கள் பிருஷ்டோதய கிரகங்கள். சுக்கிரன், புதன், குரு, ராகு இவர்கள் சிரசோதயக் கிரகங்கள்.
கேது, சந்திரன் இவர்கள் உபயோதய கிரகங்கள். சிரசோதய ராசிகள் பிரசன்ன லக்னமாக வந்தால் நன்மைதரும். பிருஷ் டோதய ராசிகள் பிரசன்ன லக்னமாக வந்தால் தீமைதரும். உபயோதய ராசி லக்னமாக வந்தால் பாதி நன்மை தரும். ஜனன ஜாதகத்தின்படி, ஒரு கிரகத்தின் தசை ஆரம் பிக்கும்போது அந்த கிரகம் பிருஷ்டோதய ராசியிலிருந்தால் தசையின் கடைசிப் பகுதியிலும், உபயோதய ராசியிலிருந்தால் தசையின் மத்தியப் பகுதியிலும், சிரசோதய ராசியிலிருந்தால் தசையின் ஆரம்ப காலத்திலும் தனது தசாபலனைக் கொடுக்கும் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
செய்வினைக் கோளாறா?
கேள்வி: எனக்கு சில நாட்களாக அடிக்கடி தீய கனவுகள் வருகின்றன. அமாவாசை நாட்களில் உருவம் தெரியாத நிழல் என்னைப் பின்தொடர்வதாக உணர்கிறேன். இனம் புரியாத பயமும், பதட்டமும் என்னை வாட்டிவதைக்கிறது. இது செய்வினையால் வந்த கோளாறா? அது நீங்குவதற்கான பரிகாரத்தைக் கூறமுடியுமா?
-வாசுதேவன், திருச்சி.
(ஆரூட எண்- 59; சுவாதி 3-ஆம் பாதம்)
* சோழி லக்னம், ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது.
* கேதுவும் ராகுவும், 2, 8-ல் இருப்பதால் செய்வினை, ஏவல், பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிகிறது.
* பிரேத சாப கிரகமாகிய மாந்தி, ராகுவுடன் கூடி சோழி லக்னத்திற்கு எட்டாமிடத்தில் அமர்ந்துள்ளதும் செய்வினை பாதிப்பைக் காட்டுகிறது.
* மாந்தி, ராகுவுடன் சேர்ந்து சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் அமர்ந்து, சூரியன், ராகுவின் நட்சத்திரத்திலிருப்பது செய்வினையின் வலிமையைத் தெரிவிக்கிறது.
* குருபகவானின் பார்வை சோழி லக்னம் விழும் துலாத்திலிருந்தாலும், கும்பத்திற்கு துலாம் பாதக ஸ்தானமாகிறது.
* சோழி லக்னத்திற்கு நேர் ஏழாம் பார்வை அப பரணி நட்சத்திரத்தில் விழுவதால், இந்த ஜாதகரின் எதிரிகள் மயானத் தில் பலிபூஜை செய்து, துர்தேவதைகளைக் கொண்டு ஏவல்செய்த அறிகுறி தெரிகிறது.
* பரிகாரங்களைச் செய்தால்தான் இந்த ஜாதகர் ஆபத்திலிருந்து தப்பிக்கமுடியும்..
பரிகாரம்
மாத சிவராத்திரியன்று முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரை வழிபட வேண்டும். மகாமகக் குளத்தின் வடகரையிலுள்ள அகோர வீரபத்திரருக்கு சிவராத்திரியன்று பூஜை செய்யவேண்டும். மேல்மலையனூரிலுள்ள மயான ருத்ரி மாசானியம்மனுக்கு எட்டு திக்கிலும் திரிசூலபூஜை செய்து படையலிட் டால், செய்வினையால் வந்த தொல்லை நீங்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636