பிரசன்னம் பார்க்கவந்த பெண்ணின் கண்களில் கண்ணீர் மாலை கோர்த் தது. குடும்பப் பிரச்சினையால், தன் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்தார். காணாமல்போன கணவர் வீடு திரும்பு வாரா என்பதே பிரசன்னத்திற்கான கேள்வி. கிருஷ்ணன் நம்பூதிரி ஸ்ரீ வாகீஸ் வரியை தியானம் செய்து சோழிப் பிரசன்னத்தை ஆராய்ந்தார்.

பன்னிரண்டாம் பாவத்துடன் மூன்று மற்றும் எட்டாம் பாவம் சம்பந்தப்பட்டதால், காணாமல் போனவர் தொலைதூரம் சென்று விட்டார் என்பது உறுதியானது.

ஏழாம் பாவம், இரண்டாம் பாவத்துடன் தொடர்பிலிருந்ததால், குடும்பத் திலுண்டான பிரிவு தெளிவானது. ஆனாலும், பன்னிரண்டாம் பாவத் துடன் இரண்டாம் பாவாதிபதி யாகிய சனிபகவானும் தொடர்பு கொண்டதால், காணாமல் போனவர் திரும்ப வருவார் என்பதும், குடும்பத்தில் பிரிவு தற்காலிகமானது என்றும் அறிவுறுத்திய நல்ல சேதி கிடைத்தது. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள, திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் கூடுவார்கள் என்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பிரசன்ன ஆரூடத்தில் சொல்லப்பட்ட பரிகாரத்தால் பிரிந்த குடும்பம் சேர்ந்தது. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

Advertisment

ss

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

பிரசன்ன ஆரூடத்திலும், ஜனன ஜாதகத்தைப் பரிசீலிக்கும்போதும் திரேக்காணத்திற்கு முக்கியத்துவம் தருவது கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒவ்வொரு ராசியும் பத்து பாகைகள் அடங்கிய மூன்று திரேக்காணங் களாகப் பிரிக்கப்படுகின்றன. பன்னிரண்டு ராசிகளுக்கும் மொத்தம் முப்பத்தாறு திரேக்காணங்கள் வருகின்றன. முதல் திரேக்காணத்துக்கு அந்த ராசிநாதனே அதிபனாகிறான். இரண்டாவது திரேக்காணத்துக்கு ஐந்தாவது ராசியின் நாதனும், மூன்றாவது திரேக்காணத்துக்கு ஒன்பதாம் ராசியின் நாதனும் அதிபர்களாகின்றனர்.

ஒரு ராசியிலுள்ள முதல் பத்து பாகை முதல் திரேக்காணம் என்றும், பதினொன்று முதல் இருபதுவரை இரண்டாம் திரேக்காணம் என்றும் அழைக்கப்படும். இருபதுமுதல் முப்பதுவரை மூன்றாம் திரேக்காணம். இந்த மூன்று திரேக்காணத்தில் ஒன்று உத்தம திரேக்காணமாகும். சர ராசியில் முதல் திரேக்காணமும், ஸ்திர ராசியில் இரண்டாவது திரேக்காணமும், உபய ராசியில் மூன்றாவது திரேக்காணமும் உத்தம திரேக்காணங்கள். ஒருவர் உத்தம திரேக்காணத்தில் பிறந்திருந்தால் அவரின் வாழ்க்கை உயர்வான நிலையில் இருக்கும். உத்தம திரேக்காணத்தில் சந்திரன் மற்றும் ராசியாதிபதி இருவரும் இருந்துவிட்டால் ஜாதகர் வாழ்வில் அனைத்து வசதிகளையும் பெற்று பெயரும் புகழும் அடைவார்.

லக்னமும் லக்னாதிபதியும் உத்தம திரேக்காணத்தில் இருந்தால் ஜாதகர் படித்த வராகவும், அதிகாரம் உள்ளவராகவும் புகழ் பெற்றிருப்பார். உத்தம திரேக்காணங் களிலுள்ள மூன்று நட்சத்திர பாதங்களில் ஒன்று வர்க்கோத்தமம் அடையும். சர ராசியில் முதல் பாதமும், ஸ்திர ராசியில் இரண்டாம் பாதமும், உபய ராசியில் மூன்றாம் பாதமும் பலம்வாய்ந்த உத்தம திரேக்காணங்களாகும். ஒரு பாவகத்தின் திரேக் காணாதிபதி ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெறுமா னால் நன்மை தரும். லக்னத்திலிருந்து இருபத்திரண்டாவது திரேக்காணம் ஒருவரது மாரகத் தைக் குறிக்கும். ஒருவரின் ஆயுளை நிர்ணயிப் பதில் உத்தம, மத்திம, அதம திரேக்காணங்கள் சூட்சுமமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்பது மற்றும் பத்தாம் பாவத்தின் திரேக் காணாதிபதிகளுக்கு ஏழாம் பாவத்துடன் சம்பந்தம் ஏற்படுமானால் திருமணத்தால் யோகம் பெறுவார்கள். இதேபோல், ஒவ்வொரு பாவத்தின் திரேக்காணாதிபதிகளின் அமைப்பைக்கொண்டு பலன்களைக் கணிப் பதே கேரள ஜோதிடர்களின் அணுகுமுறை.

நோய் தீருமா?

கேள்வி: நான் சில ஆண்டுகளாக முதுகுத் தண்டுப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள் ளேன். எந்தவிதமான மருத்துவ சிகிச்சையால் பலன் கிடைக்கும்? அதற்கான ஜோதிடப் பரிகாரத்தையும் கூறமுடியுமா?

-வேணுகோபாலன், மயிலாடுதுறை.

(ஆரூட எண்-97; பூரட்டாதி முதல் பாதம்)

* சோழி லக்னம் குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது.

dd

* சோழி லக்னத்தின் 64-ஆவது நவாம்சம் ஹஸ்தம்-4, கண்ட ரஜ்ஜு- கழுத்து, ரோகம்- பார்சுவ எனப்படும் வாதநாடி, ஆரோஹன கதியைச் சார்ந்தது. இதனால் கழுத்தில் வாதம் தொடர்பான பிரச்சினை என்பது தெளிவாகிறது.

* சோழி லக்ன நட்சத்திராதிபதியாகிய குரு பகவான், ராகுவின் நட்சத்திரமா கிய சதயம் இரண்டாம் பாதத்தில் அமர்ந்துள்ளார். ராகு சாதகத் தாரையாகிய கிருத்திகையில் அமைந்ததால், நோய் விரைவில் குணமாகும் என்ற ஆறுதல் கிடைக்கிறது.

* லக்ன நட்சத்திரத்திற்கு விபத்துத் தாரையில் (ரேவதி, ஆயில்யம், கேட்டை) கிரகங்கள் இல்லாமலிருப்பதும் சாதகமாகவே உள்ளது.

* நோய் தீர்க்கும் பத்தொன்பதாவது நவாம்சாதி பதி பிரதியாத தாரையிலிருப்பதும், 64-ஆவது நவாம்சம் நைதன தாரையில் அமை வதும், சிகிச்சையில் இடையூறை உண்டாக் கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* நோய் தீர்க்கும் பத்தொன்பதாவது நவாம்சம் மேஷத்தில், ஆயுத திரேக்காணத்திலிருப்பதால் அறுவை சிகிச்சையால் நோய் தீருமென்பது உறுதியாகிறது.

பரிகாரம்

* வைதீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் நலம்பெறலாம்.

* முப்பத்து மூன்று கணுக்களுள்ள கொடிமரத்தை ஒரு நாழிகை நேரம் தினமும் வழிபட்டால் நோய் விலகும்.

(தொடரும்)

செல்: 63819 58636