ஒளியை ஆடையாக அணிந்த ஆதவன் விண்ணின் கதவுகளைத் திறக்கத் தொடங்கிய ஒரு காலைப்பொழுதில், கவலையால் இருண்ட முகத்துடன் ஒரு இளைஞர் பிரசன்னம் பார்க்க வந்தார். ஓராண்டுக்கு முன்னால் தனக்கொரு மகன் பிறந்த தாகவும், அவன் பிறந்த தற்குப்பிறகு குடும்பத்தில் பல துன்பியல் சம்பவங்கள் நடந்துவருவதாகவும் தெரிவித்தார். இதற்கான காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாக சொன்னார். காடாம் புழா பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் துவக்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி.
பிரசன்ன லக்னாதிபதி யும், எட்டாமிடத்திற் குடையவனும் லக்னத்திலிருந்தால், கொடிசுற்றிப் பிறப் பான் என்பது பொதுவிதி. சந்திர லக்னத்திற்கு மத்தியில் ராகு இருப்பதாலும் அந்த குழந்தை கொடிசுற்றிப் பிறந்தது என்பது உறுதியானது.
பிரசன்ன லக்னம் சர்ப்பத் திரே காணத்தில் அமைந்து சுபர்கள் பார்வை யில்லாததால், கொடிசுற்றிப் பிறந்த குழந்தையால் இந்த தோஷம் உண்டா னது. "கொடிசுற்றிப் பிறந்தால் கோத்தி ரத்திற்கு ஆகாது' என்ற உண்மை எடுத்துரைக் கப்பட்டது. நாள வேஷ்டணம் என்று கூறப்படும் இந்த தோஷம், வெள்ளிக் கம்பியை குழந்தைமீது வைத்து அதை தானமாகக் கொடுத்துவிட்டால் அகன்று விடுமென்று பரிகாரம் சொல்லப்பட்டது. பிரசன்னத் தில் குழந்தையின் ஜனனகால நிகழ்வுகளையும் கண்டுபிடிக்க முடியும் என்ற உண்மையை அறிந்து மெய்சிலிர்த்துப் போனார் பிரசன்னம் பார்க்க வந்தவர்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒருவருடைய வாழ்க் கையை வளமாக மாற்றும் சக்தி படைத்த ஜோதிடக்கலையில் துல்லியமே முதன்மையானது. ஒரு ராசியை அறுபது பாகங் களாகப் பகுத்து ஆராய்வதே சஷ்டியாம்சம். முன்ஜென்ம வினையால் ஏற்படும் கர்மப் பலனை சஷ்டியாம்சத்தின்மூலம் கண்டறி வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஒவ்வொரு சஷ்டியாம்சத்திற்கும் ஒரு அதிபதி வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஆண் ராசி களில் நேர் வரிசையிலும், பெண் ராசிகளில் எதிர் வரிசையிலும் அமையும். உதாரணத் திற்கு, இரண்டுக்குடையவன் இருக்கும் அம்சாதி பதி, காலதண்டம் எனும் சஷ்டியாம்சம் ஏறினால் தனமற்றவனாவான். பன்னிரண்டுக் குடையவன் குரூர சஷ்டியாம்சம் ஏறினால் அற்பாயுள் உண்டாகும். ஏழுக்குடையவன் மிருதியாம்சம், யமாம்சம் போன்றவற்றிலிருக்க, வாழ்க்கைத் துணையின் ஆயுள் குறையும். குருபகவான் குரூர சஷ்டியாம்சம் ஏறி, ஐந்து மற்றும் எட்டாமிடத்திலிருக்க புத்திர பாக்கியம் இல்லாமல் போகுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
பிரேத சாபம் நீங்குமா?
கேள்வி: சில மாதங்களுக்குமுன் என் சகோதரி ஒரு விபத்தில் அகால மரணமடைந்தார். அந்த நாள்முதல் வீட்டில் இரவுநேரங்களில் பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. வீட்டில் உள்ளவர்களுக்கு மனதில் பயமும் குழப்பமும் ஏற்படுகிறது. இதற்குப் பரிகாரம் உண்டா?
-சண்முகநாதன், சென்னை.
(ஆரூட எண்- 22; திருவாதிரை 2-ஆம் பாதம்)
* சோழி லக்னம் ராகுவின் நட்சத்திர மாகிய திருவாதிரை இரண்டில் அமைவது அமானுஷ்யமான நிகழ்வு களைக் காட்டுகிறது.
* சோழி லக்னத்திற்கு நான்காம் அதிபதியாகிய புதனு டன் மாந்தி சேர்வது பிரேத சாபத்தை உறுதியாக்குகிறது.
* நெருப்பால் ஏற்பட்ட விபத்தில் இறந்த கன்னிப் பெண்ணின் சாபத்தால் இந்த தோஷம் உண்டானது.
* பிரசன்னம் பார்த்த நாளின் ஆளும் கிரகமாகிய சனிபகவான் சோழி லக்னத் திற்கு எட்டாமிடத்தில் அமைவது இந்த தோஷத்தின் கடுமையைக் காட்டுகிறது.
* கேரள ஜோதிட ரகசியங்கள்! (65) சோழி லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டில் கிரக யுத்தம் காணப்படுவதால், துர்மரணத்திற்குப் பரிகாரமாக "நாராயண பலிபூஜை' செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
* பெண்சாபம், பிரேதசாபம், பிரம்மசாபம், சர்ப்பசாபம், பித்ருசாபம், கோசாபம், பூமிசாபம், கங்காசாபம், விருட்சசாபம், தேவசாபம், ரிஷிசாபம், முனிசாபம், குலதெய்வ சாபம் போன்றவை மனிதர்களைப் பல வழிகளில் பாதிக்கின்றன. பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்; தீராத நோய்கள் ஏற்படும்; அடிக்கடி விபத்துகள் ஏற்படும்; மனநிம்மதி இல்லாமல் போகும்.
பரிகாரம்
வீட்டில் மகா மிருத்யுஞ்ச யாகம் செய்து, யாகத்தில் பூஜைசெய்த கும்பநீரை குடும்பத்தினர் அனைவரும் தலையில் தெளித்துக்கொள்ள பிரேத சாபம் நீங்கும். அமாவாசையன்று நதிக்கரையில், இறந்தவர்களை நினைத்து சிரார்த்தம் கொடுக்கவும். சேந்தமங்களம் என்னும் தலத்தில் அருள் பாலிக்கும் அகோர பைரவரை வணங்கினால் பயம் நீங்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636