Advertisment

வளமான வாழ்வு தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள்!

/idhalgal/balajothidam/kendra-trigona-sthanas-give-prosperous-life

னிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற் கும், சுக வாழ்க்கை வாழ்வதற்கும் அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறார்கள். தற்போதைய நடைமுறைப் பிரச்சினைகளால் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால், அன்றாடத் தேவை களைப் பூர்த்திசெய்வதற்குக்கூட அரும் பாடு படவேண்டியிருக்கிறது. பலருக்கு சேமிப்பதென்பது இயலாத காரியமாகவே உள்ளது.

Advertisment

இந்த நிலையில் செல்வச் செழிப்போடு வாழக்கூடிய யோகமென்பது எல்லாருக் கும் அமைந்துவிடுவதில்லை. ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். பிறக்கும் போதே வசதியுள்ளவராய் பிறந்துவிட

னிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற்றமடைவதற் கும், சுக வாழ்க்கை வாழ்வதற்கும் அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறார்கள். தற்போதைய நடைமுறைப் பிரச்சினைகளால் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால், அன்றாடத் தேவை களைப் பூர்த்திசெய்வதற்குக்கூட அரும் பாடு படவேண்டியிருக்கிறது. பலருக்கு சேமிப்பதென்பது இயலாத காரியமாகவே உள்ளது.

Advertisment

இந்த நிலையில் செல்வச் செழிப்போடு வாழக்கூடிய யோகமென்பது எல்லாருக் கும் அமைந்துவிடுவதில்லை. ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்வதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். பிறக்கும் போதே வசதியுள்ளவராய் பிறந்துவிட்டால் பூர்வீகவழி புண்ணியங்களால் சொகுசான வாழ்க்கை அமைகிறது. சுயமாக சம்பாதித்து வாழ்வதற்கும், சேமிப்புகளை வைத்திருப்பதற்கும் அவரவரின் ஜனன ஜாதக கிரகநிலைகள் பலமாக இருந்தால் மட்டுமே முடிகிறது.

dd

ஜனன ஜாதகத்திலுள்ள ஸ்தானங்களில் சில ஸ்தானங்கள் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடியவையாக விளங்குகின்றன. ஒருவரது ராசிக்கட்டத்தில் 1, 4, 7, 10-ஆம் வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகவும்; 1, 5, 9-ஆம் வீடுகள் திரிகோண ஸ்தானங் களாகவும் விளங்குகின்றன. கேந்திர ஸ்தானங் களான 1, 4, 7, 10-ல், ஒன்றைவிட நான்கும், நான்கைவிட ஏழும், ஏழைவிட பத்தும் பலம்வாய்ந்ததாக உள்ளன. அதுபோல திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9-ல். ஒன்றைவிட ஐந்தும், ஐந்துவிட ஒன்பதும் பலம்வாய்ந்த ஸ்தானங்களாக உள்ளன.

மேற்கூறிய ஸ்தானங்களில், கேந்திர ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் பலம் பெறுவது சிறப்பு. சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெறும்போது அந்த வீடானது, அந்த கிரகத்தின் சொந்த வீடாக இல்லாமலிருப்பது சிறப்பு. ஏனென்றால் அங்கே கேந்திராதிபதி தோஷம் உண்டாகி, நற்பலன்களை அடைவதற்கு இடையூறு உண்டாகிறது. ஸ்தானங்களிலேயே திரி கோண ஸ்தானங்கள் பலம்மிக்கதாகும். திரிகோண ஸ்தானங்களில் கிரகங்கள் அமையப் பெறுவதே சிறப்பான அமைப்பாகும்.

ஒருவரது வாழ்வில் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடைவதற்கு கேந்திராதிபதியும், திரிகோணாதிபதியும் இணைவது சிறப்பு. கேந்திர- திரிகோண ஸ்தானாதிபதிகள் இணைந்து கேந்திர ஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோ அமைவது மிகவும் சிறப்பு.

கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10-க்கு அதிபதிகளும், திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9-க்கு அதிபதிகளும் ஒருவருக்கொருவர் இடம்மாறி பரிவர்த்தனையாகி இருப்பதும், ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதும் சிறப்பான அமைப்பாகும். மேற்கூறியவாறு கேந்திர- திரிகோணாதிபதிகளின் சேர்க்கை உண்டாகி, அந்த கிரகங்களின் தசை அல்லது புக்தி நடைபெற்றால் எதிர்பாராத அதிர்ஷ் டங்களை அடைந்து செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் போன்றவற்றுடன் சிறப்பாக வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகச் சேர்க்கைகளில் மிகவும் சிறப்புவாய்ந்தது 9, 10-க்கு அதிபதிகளின் சேர்க்கையாகும். ஒருவர் ஜாதகத்தில் 9, 10-க்கு அதிபதிகள், அத்துடன் 4 அல்லது 5-க்கு அதிபதிகள் இணைவது மிகவும் சிறப்பாகும்.

4, 5-க்கு அதிபதிகள் இணைந்து பலம் பெறுகின்றபோது சகலவிதமான அதிர்ஷ்டங் களையும் அடையும் யோகம் உண்டாகும்.

கேந்திர- திரிகோணாதிபதிகள் இணை கின்றபோது அந்த கிரகங்கள் நட்பு கிரகங்களாக அமைந்துவிட்டால், அந்த கிரகச் சேர்க்கையால் உண்டாகக்கூடிய யோகத்தை யும் அதிர்ஷ்டத்தையும் வர்ணிக்கவே முடியாது.

bala041122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe