அனைத்தையும் அடையத் துடிக்கும் கார்த்திகை! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி (3)

/idhalgal/balajothidam/karthika-who-strives-achieve-everything-melmaruvathur-s-kalaivani-3

கார்த்திகை நட்சத்திரம் என்பது வானியலிலும், ஜோதிடத்திலும், பேசப்படும் 27 நட்சத் திரங்களில் மூன்றாவது நட்சத்திரமாக இடம் பெற்றுள்ளது.

இந்த நட்சத்திரம் மேஷத்தில் தனது முதல் பாதத்தையும், ரிஷபத்தில் இரண்டு, மூன்று, நான்காம் பாதங்களையும் பதித்து அமர்ந்துள் ளது. ஜோதிடத்தில் இந்த நட்சத்திரத்தை சூரியன் ஆள்கிறது.

வான்வெளியில் இந்த நட்சத்திரக் கூட்டம் கண்களுக்குப் புலப்படும் வகையில் அமைந்துள் ளது. ஆறு நட்சத்திரங்களின் கூட்டுவடிவமாகத் தெரியும் இது பார்ப்பதற்கு சவரக்கத்தி வடிவத்தி லும், சாவியின் வடிவத்திலும் காட்சியளிக்கும்.

இங்கு ராசிநாதன் முதல் பாதத்திற்கு செவ்வாயாகவும், இரண்டு, மூன்று, நான்காம் பாதங்களுக்கு சுக்கிரனாகவும், நட்சத்திரநாதன் சூரியனாகவும், நவாம்ச நாதர்களாக முதல் பாதத்திற்கு குருவும், இரண்டு, மூன்றாம் பாதங்களுக்கு சனியும், நான்காம் பாதத்திற்கு குருவும் பொறுப்பேற்கின்றனர்.

27 நட்சத்திரக் கூட்டங்களில் இந்த கார்த் திகை நட்சத்திரக் கூட்டமே மிகவும் உஷ்ணம் வாய்ந்தது என்று ஜோதிட நிகண்டுகள் எடுத்துரைக்கின்றன. இந்த ஆறு நட்சத்திரங் களைக் கொண்ட கூட்டமே கார்த்திகைப் பெண்கள

கார்த்திகை நட்சத்திரம் என்பது வானியலிலும், ஜோதிடத்திலும், பேசப்படும் 27 நட்சத் திரங்களில் மூன்றாவது நட்சத்திரமாக இடம் பெற்றுள்ளது.

இந்த நட்சத்திரம் மேஷத்தில் தனது முதல் பாதத்தையும், ரிஷபத்தில் இரண்டு, மூன்று, நான்காம் பாதங்களையும் பதித்து அமர்ந்துள் ளது. ஜோதிடத்தில் இந்த நட்சத்திரத்தை சூரியன் ஆள்கிறது.

வான்வெளியில் இந்த நட்சத்திரக் கூட்டம் கண்களுக்குப் புலப்படும் வகையில் அமைந்துள் ளது. ஆறு நட்சத்திரங்களின் கூட்டுவடிவமாகத் தெரியும் இது பார்ப்பதற்கு சவரக்கத்தி வடிவத்தி லும், சாவியின் வடிவத்திலும் காட்சியளிக்கும்.

இங்கு ராசிநாதன் முதல் பாதத்திற்கு செவ்வாயாகவும், இரண்டு, மூன்று, நான்காம் பாதங்களுக்கு சுக்கிரனாகவும், நட்சத்திரநாதன் சூரியனாகவும், நவாம்ச நாதர்களாக முதல் பாதத்திற்கு குருவும், இரண்டு, மூன்றாம் பாதங்களுக்கு சனியும், நான்காம் பாதத்திற்கு குருவும் பொறுப்பேற்கின்றனர்.

27 நட்சத்திரக் கூட்டங்களில் இந்த கார்த் திகை நட்சத்திரக் கூட்டமே மிகவும் உஷ்ணம் வாய்ந்தது என்று ஜோதிட நிகண்டுகள் எடுத்துரைக்கின்றன. இந்த ஆறு நட்சத்திரங் களைக் கொண்ட கூட்டமே கார்த்திகைப் பெண்கள் என்று புராணத்தின்மூலமாக எடுத்துரைக்கப்படுகிறது. ஏனைய நட்சத் திரங்கள் அனைத்தும் ஆண்கள் அல்லது பெண் களின் பெயராக மட்டுமே அமைக்கமுடியும். உதாரணமாக ரேவதி, சுவாதி, அஸ்வினி ஆகியவை பெண் பெயர்கள். பரணி ஆண் பெயர் மட்டுமே. ஆனால் இந்த கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்த ஆண்- பெண் இருபாலருக்குமே இந்த நட்சத்திரத்திலேயே பெயர் அமைக்க முடியும். உதாரணமாக கார்த்திகா, கிருத்திகா, கார்த்திக் என்று அமைக்கலாம். இருபாலருக் குமே பெயர் அமைக்கும் ஒரே நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரமாகும்.

பொதுவாக கார்த்திகையில் பிறந்தவர்கள் எந்தத் துறை சார்ந்திருந்தாலும் அந்தத் துறையில் முன்னிலை வகித்து மின்னி ஜொலிப்பார்கள்.

இது இரட்டை மனோநிலை கொண்ட நட்சத்திர மாகும். சிவனின் அருள் பெற்ற நட்சத்திரம். இது முருகப் பெருமானின் நட்சத்திரம் என்றும் அறியப்படுகின்றது, முருகப் பெருமானின் நட்சத்திரமாக இருந்தாலும், இதற்கு செவ்வாய் பகையாக வருகிறார் என்பதால், இந்த நட்சத் திரக்காரர்களுக்கு எப்பொழுதுமே பூமி பகை, நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கம் இருந்து கொண்டே இருக்கும். சகோதரர்களால் சில நெருடல்களை சந்திக்கும் நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரமாகும்.

ff

இது ராட்சச கணம் கொண்ட நட்சத்திரம் என்பதால் எப்பொழுதுமே பிடிவாதம் நிறைந்த நட்சத்திரமாக அறியப்படுகிறது. இதற்கு சூரியன் பொறுப்பேற்கும்பொழுது, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது, எதிலும் முதன்மையாக நிற்கவேண்டும் என்னும் எண்ணம், தனக்குப் பின்னால்தான் அனைவருமே என்னும் குணம் ஆகியவை இயற்கை யாகவே இவர்களுக்கு அமைந்திருக்கும். இந்த குணம் அதி தீவிரமடைந்த போராட்ட குணமாக இவர்களுக்கு இருக்கும்.

கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

பூர்வீகத்தில் வாழும் நிலையினை இழப்பார் கள். பெரும்பாலும் கார்த்திகை செவ்வாயின் கர்மப் பதிவைக் கொண்ட நட்சத்திரம் என்ப தால் இவர்களுக்கு பூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டே இருக்கும். நவாம்சத் தில் சந்திரன் மற்றொரு நெருப்பு ராசியான தனுசில் அமையப்பெறுவார். எனவே கோபம், எதையும் வெட்டிப் பேசுதல், பெரியவர்களின் பேச்சுக்கு இணங்காமை போன்ற குணம் இவர்களிடம் இருக்கும். மற்ற கிரகங்களின் கூட்டு சிறப்பாக அமையப்பெற்றால் இவர்கள் மருத்துவர், அதிகாரம் நிறைந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் போன்ற துறைகளில் வலம்வர வாய்ப்புகள் இருக்கும்.

கார்த்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

நவாம்சத்தில் சந்திரன் மகர வீட்டில் அமையப்பெற்றிருக்கும். இந்தக் கூட்டு- அதாவது சந்திரன், சனி இணைவு பெரும் குழப் பத்தையளிக்கும். எது சம்பந்தப்பட்ட கல்வி யைத் தேர்ந்தெடுப்பதென்று பெரும் குழப்பத் தைத் தரும். இளமையில் இவர்கள் நினைத்தது போன்ற வாழ்க்கை இருக்காது. மேஷத்தில் அமைந்த கார்த்திகையைவிட, ரிஷபத்தில் அமையப்பெற்ற கார்த்திகை சற்று தணிந்த குணத் துடனே இருக்கும். இவர்கள் மனதிற்குள் கோபமிருந்தாலும் அதை நாசுக்காக வெளிக் காட்டுவார்கள். இவர்களின் தொழில் மற்றும் கல்வி- எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கனரக வாகனங்களைக் கையாளுதல் சம்பந்தப்பட்டவையாக அமைத்துக் கொள்ளுதல் சிறப்பினைத் தரும். எக் காரணத்தைக் கொண்டும் பூமி சம்பந்தப்பட்ட தொழில்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நன்று.

கார்த்திகை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்கள் எதையும் நேருக்கு நேராகப் பேசிவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் கோபம் சற்று புகைகின்ற கோபமாக இருக்கும். நவாம்சத்தில் சந்திரன், மற்றொரு சனியின் வீடான கும்பத்தில் ஏறி நிற்கும். இதுவும் தடை, தாமதம், மனக் குழப்பம், பெற்றோர்களின் முன்னேற்றத்தில் தடை போன்ற சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும், இவர்களின் தொழில் நிலையை எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக், கனரக வாகனங் களைக் கையாளுதல் போன்ற சூழ்நிலையில் அமைத்துக்கொள்வது சிறப்பினைத் தரும்.

கார்த்திகை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

மற்ற மூன்று பாதங்களைவிடவும், சற்று இணக்கமான மனநிலை அமையப்பெற்றவர்களாக இருப்பார்கள். நவாம்சத்தில் சந்திரன், குருவின் வீடான மீனத்தில் அமையப் பெறுவார்.

ஒரு தெளிந்த முடிவெடுக்கும் திறனை சந்திரன் குரு பகவானின் மீனத்தில் ஏறிநிற்கும்போது அளிக்கும். இங்கு சூரியன், சந்திரன், குரு என்னும் நட்பு கிரகங்களின் கூட்டமைப்பு நிகழ்கிறது. இவர்களுக்கு வரும் ராகு தசையானது பெரும் மாற்றத்தையும், ஏற்றத்தையும் அளிக்க வல்லதாக அமையும். உயர்கல்வி, வெளிநாட்டு யோகம் போன்றவை அமையப்பெறும்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்.

பரணி 1-ஆம் பாதம்: வைத்தீஸ்வரன் கோவில்.

பரணி 2, 3, 4-ஆம் பாதங்கள்: ஸ்ரீரங்கம்.

அணியவேண்டிய ரத்தினம்: ஸ்டார் ரூபி.

வழிபடவேண்டிய விருட்சம்: பாலுள்ள அத்திமரம்.

(அடுத்த இதழில் ரோகிணி)

செல்: 80563 79988

bala231222
இதையும் படியுங்கள்
Subscribe