லகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மூன்று பாவங்களை- பாவ வினைகளைத் தீர்த்தாகவேண்டும். சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் ஆகியவையே அவை.

1. சஞ்சித கர்மம்

நாம் ஒவ்வொருவரும் நம் முன்னோர் களின் பாவ- புண்ணியங்களையும், நம் முற்பிறவியின் பாவ- புண்ணியங்களையும் சார்ந்தே பிறவியெடுக்கிறோம். இதில் நம் முன்னோர்களின் பாவக் கணக்கினைச் சொல்வது சஞ்சித கர்மம் எனப்படும். நம் முன்னோர்களின் சொத்துகளையும், புண்ணியங்களையும் எவ்வாறு அனுபவிக்கிறோமோ, அவ்வாறே அவர்களது கடன்களையும், பாவங் களையும் அனுபவித்தே ஆகவேண்டும்.

2. பிராரப்த கர்மம்

Advertisment

நாம் முற்பிறவிகளில் செய்த பாவ- புண்ணிய கணக்கின்படி இப்பிறவியில் நாம் தீர்க்கவேண்டிய பாவக் கணக்குகளை "பிராரப்த கர்மம்' என்கிறோம். நாம் தற்பொழுது ஒரு சுபநிகழ்ச்சியில் (திருமணத்தில்) கலந்துகொள்ளமுடியாமல், "அவர் திருமணத்தைப் பார்க்க எனக்கு பிராப்தம் இல்லை' என்கிறோமே- அது இதுதான். அதேபோல் ஒருவருடைய மரணத்தில் "அவருடைய முகத்தைக்கூட பார்க்க பிராப்தம் இல்லை' என்கிறோமே- இந்த தடைகள்தான் பிராரப்த கர்மத்தின் விளைவுகள்.

3. ஆகாமிய கர்மம்

நாம் இந்தப் பிறவியில் புறவாழ்வின் இச்சைகளில் மயங்கி, காமம், குரோதம், வன்மம்போன்ற பல்வேறு செயல்களால் ஏற்படும் கர்மம் ஆகாமிய கர்மமாகும். இவ்வாறு கர்மவினைகள் பல இருந்தாலும் அதில் நம் முன்னோர் களின் பாவ வினைகளைச் சொல்லும் "சஞ்சித கர்ம' வினையே முதன்மையானதாகும். இந்த கர்ம வினையைத்தான் நாம் இப்பிறவியில் கஷ்டப்படும்போது அதைப்பார்த்து, "உன் முற்பிறவி பாவம், உன் முன்னோர் கள் செய்த கர்மா' என அனைவராலும் குறிப்பிடப்படுகிறது. "உன் தாத்தா, பாட்டி செய்தபாவம்,' "எங்கள் கிழவன் குசும்புக்காரன்; அதனால்தான் கஷ்டப்படுகிறேன்' என கூறுவதெல்லாம் இதனால்தான். இந்த கர்மவினை இருவகையாகப் பிரிக்கபடுகிறது.

Advertisment

vv

1. பிதுர் கர்மா: அப்பா வழி- அதாவது அப்பா, பாட்டன், முப்பாட்டன் என ஏழு தலைமுறைப் பாவம். இது வாழ்வில் முன்னேறமுடியாமல் செய்யும்.

2. மாதுர் கர்மா: அம்மாவழி- அதாவது அம்மா, பாட்டி, முப்பாட்டி என ஏழு தலைமுறைப் பாவம். இது வாழ்வின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும். இதில் முதலில் நாம் காண வேண்டியது அம்மாவழி கர்மாவைத் தான். ஏனெனில் நம்மில் பலருக்கும் அம்மாவழி கர்மவினையென ஒன்றுண்டென்பது தெரியாது. அறிந்திருக்க மாட்டோம். ஆதலால் அதை முதலில் காண்போம்.

மாதுர் கர்மா

இந்தத் தீவினைகள் பயனாக இந்தப் பிறவியல் குடிகாரர்களாக இருப்பதற்கும், முன்யோசனையின்றி இருப்பதற்கும், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளாக இருப்பதற்க்கும், பக்கவாதம், வாதநோய், கால்கை வலிப்பு போன்ற நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது. மேலும் அம்மாவழி உறவுகள் செய்த சர்ப்ப சீண்டல்கள், பாம்புகளைக் கொல்வது, பாம்புப் புற்றுகளை இடிப்பது, பாம்புகளின் இனப்பெருக்க நிகழ்வில் அவற்றைக் கொல்வது போன்ற செயல்கள் சர்ப்ப தோஷங்கள் ஏற்படக் காரண மாகின்றன. இதன்விளைவாக இப்பிறவியில் நாம் சந்திக்கும் திருமணத்தடை, வியாபாரத் தடை, தொழில் தடை, கல்வித் தடை, சுகவாழ்வுத் தடை, வாகனத் தடை என நாம் வாழ்வில் சந்திக்கும் அனைத்துத் தடைகளுக்கும் காரணமாவதோடு, நம் வாழ்க்கையே தடையாவதற்குக் காரணமாக அமைகின்றன. இந்தத் தடைகளுக்கெல்லாம் காரணகர்த்தா நம் அம்மாவழி உறவு- மாதுர்கர்ம வினைகளேயாகும்.

இந்த பாவக் கணக்குகளின் அடிப்படையில் பிறவி எடுக்கிறோ மல்லவா? அவற்றை நம் பிறப்பு ஜாதகத் தின்மூலமாக அறிந்துகொள்ளலாம். ஏனெனில் நமது பாவ- புண்ணிய கணக்குகளின்படி நவகோள்கள் நம் வாழ்வின் லாப- நஷ்டங்களைக் கொடுக்கின்றன.

நமது ஜனன ஜாதகத்தில் அம்மாவழி உறவுகளின் பாவ- புண்ணிய கணக்குகளைக் குறிக்கும் கிரகம் கேது பகவான் ஆவார். இவர் ஞானக்காரகன், அறிவுக் காரகன் என அழைக்கப்படுகிறார். கேது அம்மாவழி உறவுகளின் பாவ- புண்ணியக் கணக்கின்படியே நமக்கு அறிவை வழங்குவார். ஒருவன் அறிவாளியாகப் பிறப்பதற்கும் முட்டாளாகப் பிறப்பதற்கும் இந்த அம்மாவழி மாதுர் கர்மாவே காரணமாகும்.

மேலும் ஒருவருக்கு பெண் பிள்ளையே இல்லாமல் போவதற்கும், பெண் பிள்ளைகள் பிறந்து இறந்துபோவதற்கும் இந்த கர்மவினையே காரணமாக அமைகிறது. இந்த வினைகளையெல்லாம் தீர்ப்பதற்கு வழிகள் உண்டு.

கேது பகவானின் அதிபதி விநாயகப் பெருமான் ஆவார். இவரே தலைவனுக் கெல்லாம் தலைவன் என்பதைக் குறிக்கும்விதமாக ஆதிசங்கரர் தனது "பஞ்சரத்தினம்' என்ற நூலில் "அநாயகம்- ஏகநாயகம்'- அதாவது ஏகநாயகம்- விநாயகம் என குறிப்பிடுகிறார்.

பூத கணங்களுக்கான பதி என்பதால் கணபதி என்றும், உலகில் பாவப் பிறவி களாய்ப் பிறந்த மனிதப் பிறவிகளைக் கண்திறந்து பார்த்து அவர்களுடைய பாவ வினைகளைத் தீர்க்கும் ஈஸ்வரன் என்பதால் விக்னேஸ்வரன் என்றும் குறிப் பிடப்படுகின்றார்.

இப்படி விநாய கருக்கு எத்த னையோ பெயர்கள் இருந்தாலும், சிவனால் யானை முகம் பெற்று, சிவனாலேயே கேலி யாக இந்த "பிள்ளை யார்' என்று வினவப் பட்ட பிள்ளையார் என்ற பெயரே முதன் மையானதாகும்.

அப்படிப்பட்ட பிள்ளையார் பெய ரோடு வினைகளைத் தீர்க்கும் விக்னேஸ்வர ராக ஆட்சி செய்யு மிடம் பிள்ளையார்பட்டி. இவ்வூர் காரைக்குடி யிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில், குன்றக் குடிக்கு அடுத்துள்ளது. 1,800 ஆண்டுகள் பழமைகொண்ட குடைவரைக் கோவில். விநாயகரை மூலவராகக்கொண்ட, நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் ஆகம முறைப்படி பராமரிக்கப்படுகின்ற மிகச் சிறப்பான கோவில். இன்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பல்வேறு இடங்களில் உயரிய பதவிகளிலும், சிறப்பான வசதிகளோடும் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு முழுமுதற்காரணம் பிள்ளையார்பட்டி விநாயகர் என்றால் அது மிகையல்ல.

இவ்வூருக்கு பல்வேறு பெயர்கள் இருந்தாலும், மருதமரங்கள் நிரம்பிய பகுதியில் மக்கள் குடியேறியதால் மருதங்குடி என்றும், பிள்ளையார் ஆட்சிசெய்யும் இடமென்பதால் பிள்ளையார்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

இவரின் நாபி பிரம்ம சொரூபமாகவும், முகம் விஷ்ணு சொரூபமாகவும், வலப்பாகம் சூரிய சொரூபமாகவும், முக்கண்கள் சிவ சொரூபமாகவும் விளங்குகின்றன.

சிவ பூஜையில் முதல் வணக்கம் விநாயகருக்குதான் செலுத்த வேண்டுமென்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கும் இதுவே நியதி.

பூத கணங்களுக்கு மட்டுமல்ல; சிவ கணங்களுக்கும் இவரே தலைவர் என்பதால், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வலக்கையில் லிங்கத்தை வைத்திருப்பார். (பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படத்தைப் பாருங்கள்.) விநாயகர் அவதரித்த கதைகள் பல இருப் பினும், காஞ்சி புராணத் தில் கூறப்பட்டுள்ள கதையே உண்மையென கருதத் தோன்றுகிறது.

சிவனும் பார்வதி யும் உலகைச் சுற்றிவரும் போது ஒருநாள் ஒரு மண்டபத்தை அடைகின்றனர். அங்கு எழுதியுள்ள மந்திரங்களைப் பார்த்துவரும்போது "ப்ரணவ' எழுத்தைக் கண்டனர்.

அகார, உகார, மகாரங்களின் கூட்டொ லியே ப்ரணவம். இந்த ப்ரணவத்தை சிவபிரானும், உமையும் உற்றுநோக்கி னர். அப்போது சிவனாரின் எழுத்தான அகரம் ஆண் யானையாகவும், உகரம் பெண் யானையாகவும் ஆயின. பின்பு இரு யானைகளும் கூடியவுடனே யானைமுக விநாயகப் பெருமான் தோன்றினார் என்கிறது. எது எப்படியோ- விநாயகப் பெருமானைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும் அவரே உலகின் முழுமுதற்கடவுள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

பிள்ளையார்பட்டி வரலாறு

தமிழ்நாட்டில் காரைக்குடியைச் சுற்றி நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் குலமரபுக் கோவில்கள் ஒன்பது உள்ளன. அவற்றின் முதன்மையானது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில். இது மலைக்கோவில். இதில் கற்பக விநாயகர் வலம்புரி விநாயகராக அமர்ந்து காட்சியளிக்கிறார். பிள்ளையார்பட்டி என்ற இவ்வூருக்கு எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, ராஜநாராயணபுரம் என பல பெயர்கள் இருந்தாலும், மருதங்குடி என்ற பெயரும், பிள்ளையார்பட்டி என்ற பெயருமே முதன்மையானது.

மருதமரம் நிரம்பிய பகுதியில் மக்கள் குடியேறியதால் அப்பகுதி மருதங்குடி என்று வழங்கும் வரலாறானது. இந்தப்பகுதியை சுமார் 700 வருடங்களுக்குமுன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வயல்வெளிகளாக இருந்த பகுதிகளை விலைக்குவாங்கி, பின்பு அதனைச் சுற்றியுள்ள ஊர்களான அதளையூர் நாட்டவரிடமும், கல்வாயில் நாட்டவரிடமும், கீழ்க்குண்டாற்று நாட்டவரிடமும் அவர்களுக்குள்ள உரிமைகளை வாங்கிப்பின்பு பதிவுசெய்துகொண்டனர்.

இவற்றை அங்குள்ள கல்வெட்டு எண்: 8, 9 போன்றவற்றின்மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. இவ்வாறு மருதங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை வாங்கி பிள்ளையார்பட்டி என்று ஒருங்கிணைத்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஆகமமுறை வழுவாது பராமரித்துவருகின்றனர்.

மேலும் மதுரை- திருப்பரங்குன்றத் தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில், "எருக்காட்டூர்' என பிள்ளையார்பட்டி குறிப்பிடப்படுவதாக சில ஆராய்ச்சி யாளர்களின் கருத்தாகவுள்ளது.

இவ்வளவு சிறப்புகள்பெற்ற குடைவரைக் கோவிலில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பிள்ளையாரை தேசியவிநாயகம் பிள்ளையார் என 1-5 எண்ணுள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

தேசிய விநாயகம் பிள்ளையார் என்றால் ஒளியழகுள்ள ஒப்பற்ற தலைவனான மூத்த திருப்பிள்ளையார் என்பது பொருளாகும். இதில் தேசி, தேசிகன் என்பது வணிகர்களை உணர்த்துவதாகும். தேசிய விநாயகர் என்பதால் வணிகர்குல விநாயகர் என்று பொருள் தரும். அதனால் தான் என்னவோ, இப்பிள்ளையாரை நித்தம் தொழும் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் உலகெங்கும் பர்மா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் அன்றும், இன்றும் மிகச்சிறப்பான வணிகத் தொடர்பிலிருந்து பெரும்பொருள் ஈட்டுவதோடு, நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளென பெரும் வீட்டில் வாழ்ந்துவருகின்றனர்.

இப்பொழுதும் காரைக்குடி பகுதியில் காணப்படும் பெரிய பெரிய, 1,000 ஜன்னல் கொண்ட வீடுகளே இதற்கு சாட்சி.

இவ்வளவு சிறப்புகள்பெற்ற பிள்ளையார்பட்டி "யாமிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் கற்பக விருட்சமாக வளரும்' என்னும் மந்திரச் சொல்லின்படி மகிமைத் தலமாக விளங்குகிறது.

விநாயகப் பெருமானின் அஹிம்சைப் போர் முறையை காந்தியடிகள் பின்பற்றினார் என்றால் அது மிகையல்ல.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 93607 82619