மானிட வாழ்வியலில் நிகழும் நல்லதும், தீயதும் நமது கர்மாவின் தொகுப்புகளின்மூலம் நிகழும் விளைவு கள் என்பது இன்றைய சூழலில் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
இதில் கர்மா கிரகங்களான ராகுவும், கேதுவும், நம்மால் சேர்த்து வைக்கப்பட்ட, கர்ம விளைவுகளை, நாம் எவ்வாறு கையாள் வது என்றும், எப்படிப்பட்ட சூழ லில் எந்த உறவு களின்மூலம் அனுபவிப்போம் என்பதையும், சூசகமாக நம் ஜாதகத்தில் மறை பொருளாக பொதித்து, நம் பிறப்பை நிகழ்த்தி, ஒரு மாபெரும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின் றார்கள்.
இதில் ராகு என்கின்ற போகக் காரர்களின் செயல்பாடுகளையும், அவர் ஏற் றுள்ள பொறுப்பு களையும், அவர் நிகழ்த்தும் சூட்சமங்களை பற்றியும் பின்வருமாறு காணலாம்.
ராகு தலை மட்டும் கொண்ட தலையாய கிரகம். வல்லமையும், வாஞ்சையும், சூழ்ச்சியும், கருணையும், காதலும், கலந்த சகலகலா வல்லவன். இந்த கிரகம் தந்தைவழி பாட்டனாரை குறிக்கும். மேலும் நமது டி.என்.ஏவான குலதெய்வத்தை சுட்டிக்காட்டும் சூட்சமக்காரகன். தலைகொண்டு, உடலற்றிருப்பதால் எத்துனை கிடைத்தாலும் திருப்தியற்றே திகழும் தீட்சண்யக்காரகன். ஆயிரம் அமாவாசை இருள்கொண்ட மைநிற சாகசக்காரன். உண்டு என்றதுபோல் தலை அசைத்துக்கொண்டே இல்லை என்று கைவிரிக்கும் களவு கற்றுத் தெரிந்தவன். அழுகின்ற முகசாயலில் சிரிக்கின்ற சீர்மிக்கவன். மொத்தத்தில் இருளில் ஒளியையும், ஒளியில் இருளையும், சுட்டிக்காட்டும் கருப்பொருள் அவன்.
இத்தனை பீடிகைகள் வேண்டுமா? இந்த ராகுவிற்கு என்றால் இவையெல்லாம் குறைவே என்பேன் நான். இன்றும் ஜோதிடர்கள் போடும் பல கணக்கை தவிடு பொடியாக்கும் சிறப்பு பெற்றவனாக ராகு திகழ்கின்றார்.
முன்பு இல்லாத அளவிற்கு மக்களிடைய
மானிட வாழ்வியலில் நிகழும் நல்லதும், தீயதும் நமது கர்மாவின் தொகுப்புகளின்மூலம் நிகழும் விளைவு கள் என்பது இன்றைய சூழலில் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
இதில் கர்மா கிரகங்களான ராகுவும், கேதுவும், நம்மால் சேர்த்து வைக்கப்பட்ட, கர்ம விளைவுகளை, நாம் எவ்வாறு கையாள் வது என்றும், எப்படிப்பட்ட சூழ லில் எந்த உறவு களின்மூலம் அனுபவிப்போம் என்பதையும், சூசகமாக நம் ஜாதகத்தில் மறை பொருளாக பொதித்து, நம் பிறப்பை நிகழ்த்தி, ஒரு மாபெரும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின் றார்கள்.
இதில் ராகு என்கின்ற போகக் காரர்களின் செயல்பாடுகளையும், அவர் ஏற் றுள்ள பொறுப்பு களையும், அவர் நிகழ்த்தும் சூட்சமங்களை பற்றியும் பின்வருமாறு காணலாம்.
ராகு தலை மட்டும் கொண்ட தலையாய கிரகம். வல்லமையும், வாஞ்சையும், சூழ்ச்சியும், கருணையும், காதலும், கலந்த சகலகலா வல்லவன். இந்த கிரகம் தந்தைவழி பாட்டனாரை குறிக்கும். மேலும் நமது டி.என்.ஏவான குலதெய்வத்தை சுட்டிக்காட்டும் சூட்சமக்காரகன். தலைகொண்டு, உடலற்றிருப்பதால் எத்துனை கிடைத்தாலும் திருப்தியற்றே திகழும் தீட்சண்யக்காரகன். ஆயிரம் அமாவாசை இருள்கொண்ட மைநிற சாகசக்காரன். உண்டு என்றதுபோல் தலை அசைத்துக்கொண்டே இல்லை என்று கைவிரிக்கும் களவு கற்றுத் தெரிந்தவன். அழுகின்ற முகசாயலில் சிரிக்கின்ற சீர்மிக்கவன். மொத்தத்தில் இருளில் ஒளியையும், ஒளியில் இருளையும், சுட்டிக்காட்டும் கருப்பொருள் அவன்.
இத்தனை பீடிகைகள் வேண்டுமா? இந்த ராகுவிற்கு என்றால் இவையெல்லாம் குறைவே என்பேன் நான். இன்றும் ஜோதிடர்கள் போடும் பல கணக்கை தவிடு பொடியாக்கும் சிறப்பு பெற்றவனாக ராகு திகழ்கின்றார்.
முன்பு இல்லாத அளவிற்கு மக்களிடையே இந்த ராகுவின் நிலை உணரப்பட்டுள்ளது என்பது மகிழ்ச் சியே.
மரபணு ஜோதிடத்தில் பூசம், விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ராகுவின் கர்ம பதிவினைகொண்ட நட்சத் திரங்களாக உணரப்படு கின்றது. இவர் களுக்கு இந்த ராகு சார்ந்த கொடுப்பினையும் இதனால் விளையக்கூடிய சில இன்னலும் ராகுவின் தசா புக்தி அந்தர காலங்களில் நிகழக்கூடும்.
மேலும் போக காரகன் என்று அழைக்கப்படும், இந்த ராகு ஆன்மிகத்தில் உச்சத்தை எட்டவும் வழிவகுத்து கொடுக்கின்றார். நமது நாயன்மார்களில் பெரும்பாலும் ராகுவின் நட்சத்திரங்களை கொண்ட நாயன்மார்களை இருக்கின்றார்கள். இதிலிருந்து ஆன்மிகத்துக்கும் அடித்தளம் இடுபவன் இந்த ராகு என்பதனை உணரமுடிகின்றது.
முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப்போர் போன்ற காலங்களில் ஆயுதம் கொண்டும், அணு குண்டுகள் கொண்டும், கொடூரமாக தாக்கி, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்ட காலங்களில், பூமியானது செவ்வாயின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அப்பொழுது ரத்தம் சிந்தியும், போரிட்டுமே, சில எதிர்ப்புகளை நிவர்த்தி செய்யப்பட்டது. ஆனால் தற்சமயம் பூமி முழுக்க முழுக்க ராகுவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் அது சற்றும் மிகை அல்ல. எப்படி? என்ற கேள்வி நம்மில் தோன்றுகின்றதா! வாருங்கள் விடை காணலாம்.
ஆன்லைன், கணினி, நட்சத்திர விடுதிகள், மால்கள், எலக்ட்ரிக் உபகரணங்கள், இடையறாது ரோடு, என்கின்ற பாதை, போன்ற அனைத்துமே ராகுவின் காரகங்கள் ஆகும். இன்றைய நிலையில் விளையாட்டு முதல் கல்வி வரையிலும், அனைத்துமே ஆன்லைன். நம் வாழ்வின் பயணம் முதல் உணவு வரையிலும், ஆன்லைன் வந்துவிட்டது. நம் அடிப்படை வரை ராகு ஆளுமை செய்து ஆக்கிரமித்து விட்டது. எனவேதான் பூமி ராகுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என கூறினேன். அது மட்டும் அல்ல இன்றைய சூழலில் எதிர்ப்புகளும், சண்டைகளுமே, வஞ்சனையாகவும், சூழ்ச்சியாகவும், பிற நாடுகளின்மீது பிரயோகிக்கப்படுகின்றது. நாம் கேள்விப்பட்டிருப்போம், பயோ வார் என்று இவைகளும் ராகுவின் சாகசமே.
ராகு நம் உடலில் அழிக்கமுடியாத ஆற்றலான டி.என்.ஏ மற்றும் ஒரு தசைக்கும், மற்றொரு தசைக்கும், இடையில் அமைந்திருக்கும் வெள்ளை நிற ஜவ்வாக ராகு நம் உடலில் அமைந்துள்ளது.
மேலும் இந்த ஜவ்வு இல்லையென்றால் அந்த தசையின் இயக்கமே இருக்காது. அதோடு இந்த தசையின் வலுவை நிர்ணயிப்பது இந்த ஜவ்வு தான், எனவே உடலின் மஸ்குலர்பவர் ராகுவாகும். மேலும் ஜாதகத்தில் ராகு அமர்ந்த ஸ்தானம் பெரும் போராட்டம் நிறைந்ததாகவும், அவர் அமரும் பாவகத்தின்மீதான ஈர்ப்பும், முன்னிலைப்படுத்தும் குணமும், அந்த ஜாதகத் திற்கு இருக்கும். அதேபோல் ராகு அமரும் இடம் சார்ந்த காரகம் அதீத வலிமைபெற்று அமர்ந்திருக்கும்.
ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அமரும்போது, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக போராட வேண்டியது இருக்கும். அதோடு எவ்வளவு போராடினா லும் அதை சார்ந்த திருப்தி இவர்களுக்கு இருக்காது, எந்த செயலையும் அதன் அடித்தளம் வரை சென்று ஆராயும் வல்லமை பெற்றவர்களாக இவர்கள் இருப்பார் கள். எல்லா இடங்களிலும் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணமும் இவர்களுக்கு இருக்கும்.
இரண்டில் ராகு அமரும்பொழுது பேச்சில் வல்லமை, நாத்திகம் பேசுவது, எந்த தலைப்பாக இருந்தாலும் அதன் இரு வேறு நிலைகளிலும் பேசும் வல்லமை பெற்றவர் களாக இருப்பார்கள். வருமானம், குடும்பம், வலது கண், போன்ற சூழ்நிலையில் போராட்டத்தை தரும். இது மட்டு மல்ல அந்த பாவகம் எந்த கிரகத்தின் வீடோ, அந்த கிரகம் சார்ந்த தேடுதலும், போராட்டக் குணமும், இவர்களுக்கு இருக்கும்.
மூன்றில் ராகு இளைய சகோதரன், கீர்த்தி, புகழ், அந்தஸ்து, முயற்சி, ஒப்பந்தம், இணைவு போன்ற அனைத்திலும் ஒரு திருப்தியற்ற சூழ்நிலையை தரும்.
நான்கில் ராகு தாயாருக்கு நோய் சார்ந்த சூழலையும், தாயாரை விட்டு சற்று தள்ளி இருக்கும் சூழலும் இவர்களுக்கு இருக்கும். மேலும் சுகம், வாகனம், வீடு போன்ற சூழ்நிலைகளில் இவர்களுக்கு பெரும்பாலும் திருப்தி இருப்பதில்லை.
ஐந்தில் ராகு இவர்கள் தங்களின் வம்சாவழியில் செய்யாத செயலை செய்வார்கள், இந்த ராகு அமையப் பெற்ற பாவகம் சார்ந்து அவை நல்லவையாகவும், தீயவையாகவும் அமையும். மேலும் இவர்களின் குல தெய்வமும், தந்தையார் வழியில் உறவுகள்ரீதியாகவும், ஒரு திருப்தியற்ற சூழலில் இருப்பார்கள்.
ஆறாம் இடத்து ராகு எதிரியின்மூலம் லாபம் காணும் ஒரு அமைப்பு இவர்களின் எதிரிகள் இவர் களுக்கு பலமாக மாறிவிடுவார்கள். மேலும் பாவகம் சார்ந்த சிறப்புகள் இவரை வந்தடையும். இவர்கள் உழைப்பின்மீது திருப்தியற்று இருப்பார்கள்.
ஏழாம் இடத்து ராகு களத்திர ஸ்தானத்தில், ராகு அமரும்பொழுது களத்திரம் சார்ந்த பல நெருடல்களை இவர்கள் சந்திக்க வேண்டியது இருக்கும். மேலும் திருமண வாழ்வில் ஒரு திருப்தியை அல்லாத சூழ்நிலையை எதிர்நோக்குவார்கள். சமுதாயத்தின்மீதும் இவர்களுக்கு பெரும் மதிப்பு இருக்காது. அதோடு மட்டு மல்லாமல் பார்ட்னர்ஸ் என்று அழைக்கப்படும் கூட்டாளி களின் இணைவும், இணக்கமும், இவர்களுக்கு பெரும் பாலும் அமைவதில்லை.
எட்டில் அமையப்பெற்ற ராகு ஒரு வகையில் சிறப்பினை அளித்தாலும், இவர்களின் சிந்தனையும், எண்ணங்களும், மறைவு பொருளின்மீது அமர்ந்திருக்கும். இவர்களின் வாழ்க்கைத் துணையின், தாய் வழி உறவுகளின் மீதான எண்ணங் கள் திருப்தியற்று காணப்படும்.
ஒன்பதில் அமையப்பெற்ற ராகு தந்தைவழியில் இருதார தோஷத்தையும், தந்தை வழி உறவுகளின்மீது ஒரு திருப்தியற்ற சூழ்நிலையும், உருவாக்கிவிடும்.
பத்தில் அமையப்பெற்ற ராகு தொழிலில் வளர்ச்சியை கொடுத்தும், தொழில் சார்ந்து ஒரு திருப்திகரமான சூழ்நிலையில் பயணிக்காத வண்ணம் இவர்களை கையாளும். அதோடு மாமியார்வழியில் சிறு நெருடல் களையும் தோற்றுவிக்கும்.
11-ல் அமையப்பெற்ற ராகு அதீத ஆசைகளையும், ஆசைகள் சார்ந்த எண்ணங்களையும், உருவாக்கி கொடுக்கும். அதோடு தனது சொத்தின்மீது ஒரு பெரிய திருப்தி இல்லா சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
பன்னிரண்டில் அமையப்பெற்ற ராகுவானது, மற்றவர்கள் விரும்பத்தகாத எண்ணங்களை தன்னுள் அசை போட்டுக்கொண்டே இருக்கும். இவர்களை கணிப்பது பெரும் சவாலாக அமைந்துவிடும். இவர்கள் தங்களை மிக அற்புதமாக வெளிக்காட்டிக் கொள்வார்கள், இவர்களுக்கு தூக்கமும், போகமும், சார்ந்த திருப்தியற்ற சூழ்நிலை வாழ்வில் இருக்கும்.
12 லக்னங்களில் ராகு எங்கு அமர்ந்திருந்தாலும் அதை சார்ந்த காரக காரர்களுக்கும், இதை சுட்டிக் காட்டும் உறவுரீதியான மனிதர்களுக்கும் செய்யப்படும் உதவியானது, ராகுவின் தாக்கத்தை குறைக்கும்.
மேலும் நாம் சார்ந்திருக்கும் மதத்தின் எதிர்மதத்தினருக்கு உளுந்தினால் செய்யப்பட்ட உணவை வழங்கும் பொழுதும், இந்த ராகுவின் இரு வேறு நிலைகளில், எதிர்மறையான நிலைகள் ஒடுக்கப்படுகின்றன. ராகுவின் தசாபுக்தி நடந்துகொண்டிருப்பவர்கள் கால பைரவரின் வழிபாட்டினை மேற்கொள்ளும்பொழுது ராகுவின் சாதகமான பலன்களை மட்டும் அனுபவிப்பார்கள் என்பது உறுதி.
செல்: 80563 79988