பிரபஞ்சத்தில் அணுக்கள் தோறும் நிறைந்திருக்கும் இறையாற்றல், மனிதகுலம் தழைக்கவும், வழிவகை செய்து அதை ஜோதிட நுணுக்கங்களாக நம்மிடமே பரிசளித்துள்ளது.
அவரவர் கர்ம வினைக்கு ஏற்றார்போல் வாழ்வுஅமைத்து வழிநடந்தாலும், சில செயல்பாடுகளின் மூலம் நம் வினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
அதன் பொருட்டு வள்ளுவமும் முயற்சிதன் மெய்வருத்தக்கூலி தரும் என்கின்றது. இதில் முயற்சி என்பதே கர்ம வினையை களையப் படும் செயல்பாடு ஆகும்.
அத்தகைய செயல்பாடுகளான பரிகாரங்கள் பலவற்றை நம் முன்னோர்கள் நமக்குஅளித்துள்ளனர். அதன் வழியே இந்த கர்ணநாதனின் பரிகாரங்களும், தடைப்பட்ட பலநிகழ்வுகளை நமக்கு சாதகமாக அமைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாண்புக்குரிய நமது உடலில், ஏற்படும் சக்தி குறைபாட்டை உணவு, உணர்வு, ஆலய வழிபாடு எ
பிரபஞ்சத்தில் அணுக்கள் தோறும் நிறைந்திருக்கும் இறையாற்றல், மனிதகுலம் தழைக்கவும், வழிவகை செய்து அதை ஜோதிட நுணுக்கங்களாக நம்மிடமே பரிசளித்துள்ளது.
அவரவர் கர்ம வினைக்கு ஏற்றார்போல் வாழ்வுஅமைத்து வழிநடந்தாலும், சில செயல்பாடுகளின் மூலம் நம் வினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
அதன் பொருட்டு வள்ளுவமும் முயற்சிதன் மெய்வருத்தக்கூலி தரும் என்கின்றது. இதில் முயற்சி என்பதே கர்ம வினையை களையப் படும் செயல்பாடு ஆகும்.
அத்தகைய செயல்பாடுகளான பரிகாரங்கள் பலவற்றை நம் முன்னோர்கள் நமக்குஅளித்துள்ளனர். அதன் வழியே இந்த கர்ணநாதனின் பரிகாரங்களும், தடைப்பட்ட பலநிகழ்வுகளை நமக்கு சாதகமாக அமைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாண்புக்குரிய நமது உடலில், ஏற்படும் சக்தி குறைபாட்டை உணவு, உணர்வு, ஆலய வழிபாடு என்று பல வகைகளில் பூர்த்திசெய்து நல்வழிப்படுத்துவது போலவே, காரியத்தை சித்தியாக்கி தருவதற்கு காத்திருக்கும் கர்ணநாதனின் வழிபாடு மிகத் துல்லியமான இலக்குகளை நம்வசமாக்கும்.
குலதெய்வம் பெற்ற தாயானால், கரணநாதன் வளர்ப்புத் தாயாகும், அதுவும் நம்மீது அதிக பாசமும் பற்றும் நிறைந்த வளர்ப்புத் தாயாகும்.
இக்கரணம் மண் தத்துவத்தை தனதாக்கிக்கொண்ட காரணமாகும்.
இவர்கள் திட்டமிடும் குணம் அதிகம் படைத்தவர்கள், பலர் பலதிட்டங்களைத் தீட்டும் அதிகாரி களாகவும், குடும்பத்தை திட்டமிட்டு நடத்தும்நபர்களாகவும், இந்த கரணத்தில்பிறந்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
இவர்களின் குணமானது பதுங்கிப் பதுங்கி, செயல்படும் தன்மை உடையதாகும். இதனால் இவர்களுக்கு காத்திருந்து பழி
வாங்கும் தன்மையும் அதிகமாக இருக்கும்.
தக்கசமயத்தில் எதிரியின் நிலையறிந்து சூழ்நிலையை தன தாக்கி வெற்றி பெறும் ஆற்றல் படைத்தவர்கள்.
மிகுந்த தைரியசாலிகளான இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி வெற்றிபெறும் ஆற்றல் பெற்றவர்கள்.
தனக்காக எந்தவிதமான முன்னெச்சரிக்கையுடன் இவர்கள் இருக்கின்றார்களோஅதேபோன்று தன்னைச் சார்ந்தவர்களை
யும், அவர்களுக்கான முன்னேற்றத்திற்காக வும், பலவற்றை தியாகம் செய்யும் மன ஆற்றல்உடையவர்கள்.
விளையாட்டு வீரதீர செயல்கள் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.
ஆயுதம் இல்லாமல் போட்டியாளர்களை தோற்கடிக்கும் சாமர்த்தியசாலிகள்.இந்த கரணத்தில் பிறந்தவர்களுக்குஜாதகத்தில் அமைந்திருக்கும் சர்ப்பதோஷம் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை.
ஐந்தாம் இடத்திலோ ஒன்பதாம் இடத்திலோ, ராகு அமையப்பெற்று புத்திரதோஷம் இருந்தாலும் பாலவக் கரணத்தில் பிறந்த காரணத்தால் இந்த கிரக நிலை இவர்களை பெரிதும் பாதிக்காமல் அற்புதமான அழகிய புத்திரங்களை தந்து செல்கின்றது.
இவர்களின் உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்களில் பதப்படுத்தப்பட்ட மருந்துகள் நல்லவிதத்தில் பலனளித்து குணமளிக்கின்றது.
இந்த கரணத்தின் பிறந்தவர்கள் பெரும்பாலும் தோல் நோயினால் பாதிக்கப்படு கின்றார்கள்.
பாலவ கரணத்தில் பிறந்தவர்கள் சமுதாயத்தில் கைவிடப்பட்டவர்களை காக்கும் அரணாக அனாதை ஆசிரமம் மற்றும் முதியோர் இல்லங்களை நடத்தும் சூழல்களில் இருப்பார்கள்.
அதி தேவதை- ஐயப்பன்
மிருகம்- புலி
மலர்- சிறு செண்பக மலர்
நெய்வேத்தியம்- பாயசம்
தூபம்- சந்தனப் பொடி
பாத்திரம்- வெள்ளி
தெய்வங்கள்- கிராம காவல் தெய்வங்கள் மற்றும் புலியின்மீது அமர்ந்திருக்கும் தெய்வங்கள்.
இவர்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் தடைகள், தாமதங்கள் போன்றவற்றை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ள, வெள்ளி பாத்திரத்தில் உணவு சாப்பிடுவது பெரும் பலனை அளிக்கும்.
வீட்டில் சந்தனப் பொடிகொண்டு தூபம் போட்டுவர பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கடன் தொல்லைகள் தீர்ந்து சுபிக்சத்தை தரும்.
வீட்டில் அமைந்துள்ள தெய்வங்களுக்கு பாயசம் நெய்வேத்தியம் வைத்து வழிபட, தடைப்பட்ட சுப காரியங்கள் நல்ல முறையில் நடந்தேறும்.
இவர்கள் எந்த வேலை செய்வதற்குமுன்பும் தங்கள் கை மற்றும் கால் விரல்களிலுள்ள நகங்களை களைந்துவிட்டு செய்ய அந்தகாரியம் நிச்சயம் வெற்றியை நோக்கி செல்லும்.
இவர்களுக்கான கர்ணநாதன் கோவிலாக அவரவர்கள் வசிக்கும் ஊர் எல்லைப் புற தெய்வங்களை வழிபட்டுவர பெரும் இடர்பாடுகளில் இருந்து விடுபட்டுஆனந்தமான வாழ்வை இவர்களால் அனு பவிக்க முடியும்.
மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி
செல்: 80563 79988