வேண்டியவற்றைத் தரும் காகல யோகம்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/kagala-yoga-gives-what-needed-melmaruvathur-s-kalaivani

ருவரின் ஜாதகம் பற்பல யோகங்களையும், தோஷங்களையும், உள்ளடக்கிய, ஒரு மறைக்கப்பட்ட மர்மப் பேழையாகவே திகழ்கின் றது.

கிரகங்களின் இணைவு களே யோகங்களாகவும், தோஷங்களாகவும், பரிமளிக்கின்றது. இதில் சில யோகங்கள் அமையப் பெற்று விட்டால், ஒரு வம்சாவளியே, வறுமை யின் பிடியிலும், இடர்ப்பாடுகளின் இன்னல்களிலும் சிக்கி இருந்தாலுமே, குறிப்பிட்ட யோகம் அமையப்பெற்ற ஜாதகர் மட்டும், அனைத்து விஷயங்களிலுமிருந்து தப்பித்து ஒரு சுபிட்சத்தை அடைவதைக் கண்கூடாகக் காண முடிகின்றது.

ஜோதிடத்தில் சொல்ல எண்ணிலடங்காத யோகங்களில் காகல யோகமும்,ஒரு குறிப்பிடத்தக்க யோகமாகு

ருவரின் ஜாதகம் பற்பல யோகங்களையும், தோஷங்களையும், உள்ளடக்கிய, ஒரு மறைக்கப்பட்ட மர்மப் பேழையாகவே திகழ்கின் றது.

கிரகங்களின் இணைவு களே யோகங்களாகவும், தோஷங்களாகவும், பரிமளிக்கின்றது. இதில் சில யோகங்கள் அமையப் பெற்று விட்டால், ஒரு வம்சாவளியே, வறுமை யின் பிடியிலும், இடர்ப்பாடுகளின் இன்னல்களிலும் சிக்கி இருந்தாலுமே, குறிப்பிட்ட யோகம் அமையப்பெற்ற ஜாதகர் மட்டும், அனைத்து விஷயங்களிலுமிருந்து தப்பித்து ஒரு சுபிட்சத்தை அடைவதைக் கண்கூடாகக் காண முடிகின்றது.

ஜோதிடத்தில் சொல்ல எண்ணிலடங்காத யோகங்களில் காகல யோகமும்,ஒரு குறிப்பிடத்தக்க யோகமாகும். இது ராஜ யோகங்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.

dd

இந்தக் காகல யோகம் பெற்ற ஜாதகர்கள் சக்தி, புகழ் ,எண்ணி லடங்கா செல்வம், ஆகியவற்றைப் பெறுவதில் பெரும் வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றார்கள். இவர்களின் தைரியமும், உறுதியும் அளப்பரியதாக அமைந்திருக்கும்.

பிறரை அடக்கி ஆண்டு நல்வழிப் படுத்தும் இராணுவம் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கு, இந்த யோகம் பெரும்பாலும் அமையப்பெற்றிருப்பதை நிதர்சனத்தில் காண முடிகின்றது.

எந்த ஒரு யோகம் ஜாதகத்தில் அமையப்பெற்றிருந்தாலும் அதனை ஆதரிக்கும் பாவகத்திலும், கிரகத்துடனும், லக்னாதிபதி சிறப் படைந்திருக்கும் பொழுதுதான், அந்த யோகமானது செயல்பாட்டின் முடிவினை ஜாதகருக்கு சாதகமாக வழங்க முடியும்.

இந்த காகல யோகத்திலும் இந்த விதி முழுமையாகப் பொருந்தும்.

இந்த யோகமானது எவ்வாறு திகழ்கின்றது என்று பார்க்கும்பொழுது, ஜாதகரைக் குறிக்கும் லக்னமும், நான்காம் இடமாகிய சுகஸ்தானமும், ஒன்பதாமிடமாகிய பாக்கியஸ்தானமும், தொடர்பு பெறும்பொழுது இந்த யோகம் உருவாகின்றது.

அதாவது ஒன்று நான்கு, ஒன்பதாம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் கேந்திர தொடர்பு பெற்று, அவர்களுள் ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ பெறும் பொழுது இந்த ராஜயோகமானது உருவாகின்றது.

சில சமயங்களில், இந்த தொடர்பானது மூன்று கிரகங்களின் தொடர்பு, சிறப்பாக அமையாத சூழ்நிலையும் உருவாகும்.

இந்த சூழ்நிலையில் இந்த யோகத்தின் நற்பயனானது சற்று குறைவாகக் கிடைக்கும்.

இந்த யோக அமைப்பை பெற்ற ஜாதகர் கள் ராஜயோகத்தை உருவாக்கி மூத்தோர் களால் ஆசிர்வதிக்கப் பட்ட 16 செல்வங்களை யும் அடையும் பாக் கியத்தைப் பெறுவார்கள்.

இந்த கிரக இணைவானது பொன், பொருள், நன்மக்கட் பேறு, தொழில் விருத்தி, கல்வி, ஆரோக்கியம், பொது ஜன தொடர்பு, பொது கௌரவம், கோவில் நிர்மானிப்பது போன்றவற்றினை அளித்து அவர்களின் பெரும் வளர்ச்சிக்கும், பெருமையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

ஒரு ஜாதகத்தில் இந்த யோகம் வலுவாக அமையாமல் பலவீனமாக அமையும் சூழல் ஏற்படுமாயின், ஜாதகர் முரட்டு குணம், எதையும் ஏற்கும் மனமற்றவர்களாகவும், பிடிவாதம், கொடூர குணம், தயை இல்லாத நிலை போன்றவற்றைக் கொண்டிருப்பார். உறவினர்கள் மற்றும் சுற்றத்தார் மூலமாகவே ஒதுக்கப்பட்டு, அறிவிலிகள் என்று சித்தரிக்கப்பட்டு பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

எந்தவிதமான பெரிய நல்ல யோகங் களும், சூழ்நிலையும் அமையப்பெறாத ஜாதகம்கூட, இந்த ஒன்று, நான்கு, ஒன்பது, தொடர்பைக் குறிக்கும் காகல யோகத்தில் ஆட்படுமாயின், அவர்கள் வேண்டிய வற்றை அடைந்து சிறப்புடன் இருப்பார்கள்.

செல்: 80563 79988

bala061023
இதையும் படியுங்கள்
Subscribe